Saturday, April 2, 2011

3, ஏப்ரல்,2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

3, ஏப்ரல் 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
1 Samuel 16:1b,6-7,10-13a
Psalm 23:1-6
Ephesians 5:8-14
John 9:1-4


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 9


பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல்
1 இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.2 ' ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா? ' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.3 அவர் மறுமொழியாக, ' இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.4 பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது.

(thanks to www.arulvakku.com)

கிறிஸ்துவிடம் நாம் மணம் மாறுவது என்பது ஒரு தொடர் செயலாகும். இன்றைய நற்செய்தியில் வரும் குருடனின் வாழ்வு இந்த விசுவாச பயனத்தை பிரதிபலிக்கிறது.

அந்த குருடர் இயேசுவிடம் அவராக செல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு தான் அவனிடம் சென்றார். அவருக்கு என்ன கிடைக்க போகிறது என்பதனை அறிந்து அந்த குருடர், இயேசுவிற்கு கீழ்படிந்தார். மணம் மாறுதல், இயேசு நம்மை நோக்கி வந்து நிற்கும்பொழுது, நாம் அவரை தொட அனுமதித்தால், தான் நமக்கு உண்மையான மண மாறுதல் ஆரம்பமாகும். பிறகு இயெசு நமது கண்களை திறந்து உண்மையை காண செய்கிறார். ஆனால் நாம் உடனே அதனை புரிந்து கொள்வதில்லை.


அந்த குருடனின் அருல் இருப்பவர்கள், அவருக்கு எப்படி குணமானது என்று கேட்ட பொழுது, அந்த குருடருக்கு இயேசுவை யார் என்று தெரியவில்லை, இயேசு ஒரு சாதாரன மனிதன் என்று தான் நினைத்து கொண்டிருந்தார்.
பிறகு, பரிசேயர்கள் ,இயேசுவோடு விவாதித்து கொண்டு இருக்கும்பொழுது, பார்த்த அந்த் குணமடைந்த குருடர், இயேசு சாதாரண மனிதருக்கு மேலானவர் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. இயேசு ஒரு இறைவாக்கினர் என்று முடிவு செய்தார்.யூதர்கள் இறைவாக்கினர்களை பரிசுத்தமும், நற்செய்தி அறிவிப்பவர்களாகவும் அவர்களை போற்றி வாழ்த்தினார்கள்.


அடுத்ததாக, பரிசேயர்கள் இயேசுவை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதாலும், யூத சபையிலும், தேவாலயத்திலும்,கிறிஸ்து தான் நான் என்று இயேசு கூறி கொள்வதால், யுதர்கள், இயேசுவை விரட்ட காத்திருந்தலாலும், குருடனாக இருந்தவர், இயேசு உண்மையாகவே மெசியாகவா தான் இருப்பார் என்று நினைக்க தொடங்கினார். குருடரின் மணக்குருடையும் இயேசு திறந்த்தினால், அவருக்கு எல்லா உணமைகளும் விளங்கியது


கடைசியாக , பரிசேயர்கள் அந்த குருடரை, மிகவும் கீழ்தரமாக நடத்தயதால், இயேசு அவரை வெளியே அனுப்பி, பரிசேயரின் நடத்தைகளுக்கு பதிலடி கொடுத்தார். இவ்வளவு அக்கறையுடன் இயேசு அவரை நடத்திய விதத்தினால் , அவர்தான் இயேசு என்று கண்டு கொண்டார்.
மணம் மாறுதல், - நமது மண கண்களை சுத்தபடுத்துவதும் ஆகும். - இது நமது துன்ப நேரத்தில் நடக்கும் பொழுது,கடவுள் நம் மேல் எவ்வளவு அக்கறையும், அன்பும் வைத்த்துள்ளார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.


© 2011 by Terry A. Modica

No comments: