Friday, April 6, 2012

ஏப்ரல் 8, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 8, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

இயேசு உயிர்த் தெழுதல்
(மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.10பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
(thanks to www.arulvakku.com)

கொண்டாடுங்கள்! எதிர்பாராத ஆச்சரியத்தின் நிகழ்வான இயேசுவின் உயிர்த்தெழுதலின் நினைவு நாள். முதல் சீடர்கள் காலியாய் இருந்த கல்லறையை பார்த்து ஆச்சர்யபட்டதை போல் உங்களுக்காகவும், கடவுள் சில் ஆச்சரியங்களை வைத்துள்ளார். இன்றைய நற்செய்தியில், நிறைய விசயங்கள் திகைப்பும், வியப்படைய செய்யும் செய்தியும் இருந்தது, ஆனால் யாரும் அதனை புரிந்து கொள்ளவில்லை. இயேசு அவர்களுக்கு முன்னரே சொல்லியிருந்தார், இறப்பிற்கு பிறகு நாம் உயிர்த்தெழுவேன் என்று சொல்லியிருக்கிறார். இருந்தும், கடவுளின் திட்டங்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தன. உயிர்த்தெழுதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மெசியாவின் இறைபனியில் உயிர்த்தெழுதல் முக்கிய பங்கு என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை.

கடவுளின் திட்டங்கள் நமக்கு பல நேரங்களில் ஆச்ச்சரியமாகவே இருக்கிறது. நமது வாழ்வின் பல தருணங்களில், கஸ்டமான நேரங்களில் , அது முடிந்து பெரும் அழகான வெற்றியை கொடுக்க போகிறது என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். நம் வாழ்வில் உள்ள காலியான கல்லறைகள் (நமது இழப்பை நினைத்து வருந்துவது) புது வாழ்விற்கான ஆரம்பம் என்பதை நாம் புரியாமல் விட்டு விடுகிறோம். யேசு நமது கஷ்டமான நேரங்களை வாழ்வை மிக பெரிய ஆசிர்வாதமாக மாற்ற போகிறார் என்பதை நாம் நினைப்பதில்லை.


துயரமான நேரங்களில், நாம் துன்பப்படுகிறோம், நமது சிலுவைகளிலிருந்து விலகி எப்போ வெளியே வருவோம் என்று காத்திருக்கிறோம். அதற்கிடையே இயேசு சிலுவையினால், உண்டான ஈஸ்டர் வெற்றியை உங்களுக்கு தருகிறார். நாம் துயரமான நேரத்தில் இருக்கும்போது, கடவுளின் புகழொளியை நாம் எப்படி அறிந்து கொள்வது, நாம் நமது சிலுவையை நினைத்து மணம் உருகும் போது, அதன் வெற்றியை நாம் எப்படி அறிந்து கொள்வது. அது ஒன்றும் சாத்தியமில்லை.

ஈஸ்டர் மக்களாகிய நாம், சிலுவையின் வெற்றியை நாம் எப்படி பார்ப்பது , அறிந்து கொள்வது என்பதை நாம் கற்று கொள்ள வேண்டும். இயேசு எப்போதும் இருக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும். தியதை விலக்கி நல்லதாக மாற்ற இயேசு இருக்கிறார். கடவுளின் ஆச்சரியங்களை ஏற்று கொள்ள நாம் மாறவேண்டும்.

© 2012 by Terry A. Modica

No comments: