Friday, August 16, 2013

ஆகஸ்டு 18, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 18, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆண்டின் 20ம் ஞாயிறு
Jeremiah 38:4-6, 8-10
Psalm 40:2-4, 18 (with 14b)
Hebrews 12:1-4
Luke 12:49-53
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 12:49-53
பிளவு ஏற்படுதல்

49 மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.51 மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.52இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர்.53 தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.

(THANKS to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில்,  மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வரவில்லை என்கிறார். மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். என்கிறார். மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன் என்றும் சொல்லி, அவரை பின்செல்பவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியை பெறும் வரை அவர் மனம் நெருக்கடியோடு இருந்தார்.  பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் பின் சென்றவர்கள் பரிசுத்த ஆவியை பெற்று இவ்வுலகை மாற்றுகின்றனர். இது நித்திய அமைதியை கொடுக்கிறது. முதலில் நமக்கு அமைதி அடைகிறோம்., பிறகு நம் மூலம் மற்றாவர்களூக்கும் அந்த  அமைதி பரவுகிறது.

நம்முடைய குறைகளை, பரிசுத்த ஆவி தான் சுத்த படுத்துகிறார். – அன்பில்லாத நமது நடைத்தைகள் – அதனால் ஏற்படும் ப்ரச்சினைகள், ஒற்றுமையின்மை, குழப்பங்கள் , சண்டை சச்சரவுகள்.  அனைத்தையும் பரிசுத்த ஆவி கழுவி தூர எறிகிறார். அதனால் தான் நாம் அமைதி பெறுகிறோம். பல சோதனைகளுக்கும் நடுவிலும், பலர் நம்மை தாக்கினாலும் நாம அமைதியாக இருப்பது பரிசுத்த ஆவியினால் தான். கடவுளின் அமைதியை பரப்பும்  ஊடகமாக  நாம் இருக்க பரிசுத்த ஆவியின் துனையோடு,  நாம் இருக்க இவ்வுலகம் நம்மை அழைக்கிறது. பரிசுத்த ஆவியின் தீ உங்கள் உள்ளத்தில் உணரவில்லியெனில், இயேசு உங்கள் மேல் மண வேதனையோடு உள்ளார்.

உங்கள் சுற்றியிருக்கும், சாத்தானை நினைத்து கொள்ளூங்கள், விரைவில் ஒரு முடிவிற்கு வந்துவிடும் என்று நீங்கள் நம்பிய்ருக்கும்பொழுது, இயேசு பரிசுத்த ஆவியின் நெருப்பை எறிய செய்து , உங்கள் பாவங்களை, குறைகளை, சாத்தானை எறிந்து போகச் செய்ய ஆசைபடுகிறார். இயேசு என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? என்ன
ஞாணஸ்நாணத்தை பற்றி அவர் பேசுகிறார். தண்ணீரால் ஆன ஞாணஸ்நாணத்தை பற்றியல்ல, அதனை ஏற்கனவே அவர் பெற்றுவிட்டார். தியாகத்தால், அவர் தன்னையே இழந்த ,மிகுந்த வலியும், வேதனையையும், அடைந்த  ஞாணஸ்நாணம் . உள்ள உறுதியுடன் , தனது சிலுவை பயனத்தை ,அன்பின் மிகுதியால், சாத்தானிடமிருந்து, நம்மை காப்பாற்ற அவர் தன்னையே தியாகம் செய்தார்.

சாத்தானை வீழ்த்த, நாம் இயேசுவை போலவே மாற வேண்டும். நாம் அதற்காக நம்மையே தியாகம் செய்ய எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் கிறிஸ்தவ முதிர்ச்சியை கான்பிக்கிறது. நமது ஆண்மாவையும் இதயத்தையும், எவ்வளவு தூரம்,  நமது இதயத்தில், அன்புடன், மற்றவர்களுக்காக  நெருப்புடன், நாம் முழு மனதுடன், நாம் இறையரசிற்காக இறைசேவை செய்யும்பொழுது, மற்றவர்களின் வாழ்வை நாம் மாற்றும்பொழுது, நாமும், மற்றவர்களும், அமைதி பெறுகிறோம்.   இயேசு “தீ வீட்டை பிரித்து விடும் “ என்று சொல்கிறார்.   யாரும் சுய நலத்தோடு இருப்பவரிடமிருந்து நம்மை பிரித்து விடும். இருந்தாலும், நாம் அவரிடம் அன்பாக இருப்போம். இதன் மூலம், நம்மில் தீ வளர்கிறது. இது இன்னும் நம்மை சுத்தபடுத்துகிறது. மேலும், மெதுவாக, இவ்வுலகம் மாறும்.

© 2013 by Terry A. Modica

No comments: