Saturday, October 19, 2013

அக்டோபர் 20, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 20, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 – 4:2
Luke 18:1-8

லூக்கா நற்செய்தி

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை

1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
“தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”  என்று இன்றைய நற்செய்தியில் நமக்கு உறுதியளிக்கிறார்.
நம்மை யாராவது நிராகரித்தாலோ, துன்புறுத்தபட்டாலோ, தவறாக நம் மேல் குறை சொன்னாலோ, கடவுள் நம்மை காப்பாற்ற வருவார். மிகவும் விரைவாக வருவார். அவர் விரைவாக வரவில்லையா? அவர் கொடுத்த வாக்குறுதியை மீறினாரா? கடவுள் சில நேரங்களில் மெதுவாக நம் வேண்டுதல்களுக்கு பதில் கூறுவது போல் தோன்றுகிறதா? உங்கள் ப்ரச்சினை முடிய சில  நேரங்களில், பல மாதங்கள் , வருடங்களாக கூட இருக்கும். நீங்கள் எப்பொழுது இயேசுவிடம் கேட்க ஆரம்பிக்கிறீர்களோ அப்பொழுதே இயேசு உங்கள் அருகில் வந்து , சாத்தானிடமிருந்து உங்களை மீட்க வருகிறார்.

உண்மையான கேள்வி என்ன என்றால் “யேசு எங்கே? “ அல்லது முழுமையாக என்னை ஏன் காப்பாற்றவில்லை? சீக்கிரமே என்னை விடுவிக்கவில்லை? என்றும் நாம் கேட்கலாம். ஆயினும், அதற்கான பதில், இன்றைய நற்செய்தியின் கடைசி வரியில் உள்ளது “ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” அல்லது பயம் நம் மனத்தில் சுத்தி சுத்தி வருகிறதா? அவர் அருகே உள்ளதை பார்க்காமல், அவர் நமக்கு உதவ காத்திருப்பதை அறியாமல்,  நாம் துன்பம் நேர்ந்து விடுமோ என்று பயப்படுகிறோம்

விசுவாசத்துடன் நாம் வாழ்வில்லையென்றால், கவனமில்லாமல், நாமே, நம் பிரச்சினையை பெரிசாக்குகிறோம். கடவுளிடம் உதவி கேட்டு விட்டு, நாம் கவலையோடு இருக்கிறோமோ? கவனமாக இருங்கள், இயேசு உங்கள் அருகில் இருந்து கொண்டு, நம்பிக்கையோடு , விசுவாசத்தோடு இருங்கள் என்று நம்மிடம் கெஞ்சுகிறார்.  நீங்கள் எதிர்கொள்ளூம் தடையை இயேசு எடுக்க வில்லை என்று செயல்குழுந்து இருக்கிறீர்களா? நன்றாக கவனியுங்கள், இயேசு நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் திசையை விட்டு, வேறு திசையில் அவர் பின்னே செல்ல அழைக்கிறார்.

நம் எல்லோருக்குமே, துன்பம் கஷ்டம் உள்ளது. இயேசு உங்களுக்கு எதிராக வேலை செய்யும் சாத்தானை தன் கத்தி கொண்டு சுழற்றுகிறார். இருளை , சாத்தானை உங்களை விட்டு துரத்துகிறார். ஆனால் அவர் கூறும் உண்மையை நாம் ஒதுக்கிவிட்டால், அவர் நமக்கு கொடுக்கும் பாதுகாப்பு வீனாகிவிடும்.

உங்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்கிறார்களா? இயேசுவிடம் நம் கண்களை கொண்டு செல்லாமல், அவர்களையே பார்த்து கொண்டிருந்தால், இயேசு நம்மை 
,  நமக்கு நியாயம் கொடுக்க வரும் வாய்ப்பை நாம் தவறவிடுகிறோம்.
விசுவாசத்தோடு நாம் வாழ்கிற பொழுது, கடவுளின் நியாய தர்மங்களை, ஒவ்வொரு நாளும் நாம் பெறுகிறோம், நமக்கு எதிராக நிகழும் ஒவ்வொரு அநியாயத்திற்கும், நமக்கு பதில் தருவதை நாம் பெற முடியும். அவர் கொடுக்கும் அமைதியையும், சமாதானத்தையும், கஷ்டத்தை தாங்கும் ஆற்றலையும் நம்மால் பெற முடியும்

© 2013 by Terry A. Modica



No comments: