Showing posts with label என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர். Show all posts
Showing posts with label என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர். Show all posts

Friday, December 13, 2013

டிசம்பர் 15, 2013 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 15, 2013 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால மூன்றாம் ஞாயிறு
Isaiah 35:1-6a, 10
Psalm 146:6-10
James 5:7-10
Matthew 11:2-11

மத்தேயு நற்செய்தி

விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்
(
லூக் 7:18 - 35)
யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்.அதற்கு இயேசு மறுமொழியாக, ' நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் என்றார்.அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: ' நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையா?8இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.10 ' இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com )
சந்தோசம் தான் கிறிஸ்து வருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறின் முக்கிய கருத்தாகும். முதல் வாசகத்தில் சொல்வது போல, “உறுதி ஆக இருங்கள், பயப்பட வேண்டாம். உங்கள் கடவுள் இங்கே இருக்கிறார். உங்களை மீட்க உறுதி உடன் வந்துள்ளார். “ நாம் சந்தோசப்படுவதற்கு இது தான் காரணம். நாமெல்லாம் பாவத்தினால் அழிவின் முனையில் உள்ளோம். இயேசு சிலுவையின் முலம், மிக பெரிய தியாகத்தினால், நம் பாவங்களுக்கு பரிசளித்தார். இதற்காக தான், இயேசு இந்த புவியில் பிறந்தார். நம்மை மீட்கவே, கடவுளின் அன்பிலுருந்து பிரிந்து சென்ற நம்மை அவரிடம் அழைத்து செல்லவே வந்தார்.

நித்திய வாழ்வை ஒப்பிட்டு பார்க்கையில், இவ்வுலக பிரச்சினைகள் மிகவும் சிறியது.
இயேசுவினால், நமது பாவங்கள் , அதன் அழிவுகள் நம்மை ஒன்றும் செய்யாது என்று  நாம் புரிந்து கொள்ளும் பொழுது, நமக்கு சந்தோசம், மகிழ்ச்சி அடைகிறோம். கடவுள் நமக்கு தேவையான எல்லாவற்றயும் செய்கிறார், சாத்தானை விரட்டி அடித்து நம்மை ஆசிவதிக்கிறார்.

மிகவும் மோசமான பிரச்சினைகள் கூட, அதனை இயேசுவோடு இணைத்தால்,  நமக்கு ஆசிர்வாதமாக மாறும்., கிறிஸ்து எப்படி சிலுவையில் துன்ப பட்டாரோ, அதனை போல , நாமும் மற்றவர்களுக்காக துன்பத்தை ஏற்று கொண்டு, இந்த துன்பங்கள் நமக்கு என்ன கற்று கொடுத்ததோ அதனை மற்றவர்களுக்காக அர்ப்பன்னித்து, நாம் செய்யும் பொழுது, அது இறைசெவையாக ஆகி விடுகிறது.  நமது துன்பங்களுக்கு, ஒரு மதிப்பு கிடைக்கிறது. அதன் அர்த்தம் என்ன என்றால்,  நமது மகிழ்ச்சி இரட்டிப்பாக, பல மடங்காகிறது.  
கிறிஸ்துவில்  நாம் மகிழ்ச்சியினால் அர்ச்சிக்கபடுகிறோம். அந்த சந்தோசம் என்றும் நிலையானது. நாமும் அந்த சந்தோசத்தை பெற்று மகிழ்ச்சியோடு, நல்லது நமக்கு நடக்க போகிறது என்ற எண்ணத்துடன் வாழ்கிறோம். கவலைகளும், பயமும், நம்மை விட்டு ஓடிவிடும். அதன் முலம், கிறிஸ்துவின் சேவையை நாம் மகிழ்ச்சி அடைகிறோம். விசுவாசத்தின், கருணையின் கடவுள் முலம், நாம் எழுகிறோம்.
இரண்டாவது வாசகத்தில் கூறப்பட்டது போல, நமது சோதனைகளை வெற்றியாக்க கடவுள் நேரம் எடுத்து கொள்ளும்பொழுது, நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்க, நாம் எப்பொழுதும் விசுவாசத்துடனும், கடவுள் நம் மேல் அக்கறை கொள்ளவில்லை என்ற தயக்கத்துடன் இல்லாமலும், இருக்க வேண்டும். மேலும், நாம் எந்த ஒரு குற்றம் கூறாமாலும் ,நாம் கடவுளை விட நம் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியும் என்ற மனப்பான்மையுடனும் இல்லாமல்   நாம் இருக்க வேண்டும்.
கடவுள் உண்மையாக நம் மேல் அக்கறை கொண்டு, நமது துன்பங்களிலிருந்து, நம்மை மீட்க, அதன் முலம் நாம் ஆசிர்வாதம் பெற, அவர் செயல் புரிந்து கொண்டு இருக்கிறார் என்பதனை நாம் புரிந்து கொண்டால், நமக்கு மகிழ்ச்சி தானாக வந்து விடும். இயேசு சொல்வது போல “என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்”
© 2013 by Terry A. Modica