Saturday, September 20, 2014

செப்டம்பர் 21, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 21, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Isaiah 55:6-9
Psalm 145:2-3, 8-9, 17-18
Romans 1:20c-24, 27a
Matthew 20:1-16a

மத்தேயு நற்செய்தி


திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை
1 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.4 அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் ' என்றார்.5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ' நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? ' என்று கேட்டார்.7 அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை ' என்றார்கள். அவர் அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் ' என்றார்.8மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ' வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் ' என்றார்.9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.11அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,12 கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே ' என்றார்கள்.13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ' தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ' என்றார்.16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் என்று இயேசு கூறினார்.
(www.arulvakku.com)

கடவுள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை!. இது மாதிரி எத்தனை முறை நாம் நினைத்திருப்போம்? நமது மனித மன அளவில், எல்லோரும் செய்வது தான். இன்றைய நற்செய்தியில் வரும் உவமையும் இதே போல தான்.


நிலத்தின் சொந்தத காரார் நியாயமாக நடக்காதது போல தெரியும். நாம் அவரை புரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம். எனினும், இதே உவமை தந்தையாக நினைத்து பார்த்தோமானால், அன்புள்ள கடவுள் தந்தை அவரின் குசந்தைகள் அனைவரையும் ஒன்றாகவே பார்த்து, சமமாகவே அவர்களுக்கு பங்கிட்டு கொடுக்கிறார். எந்த குழந்த்தைக்கு அதிகம் தேவையோ அதற்கு அதிக கவனம் எடுத்து கொள்கிறார். மற்றவர்களையும் அதே போல அன்பு செய்கிறார்.

தந்தை கடவுள் திராட்சை தோட்ட முதலாளியை போல, எல்லோருக்கு சமமாக கொடுப்பவர். நாம் மோட்சத்திற்கு செல்வதற்கு, பல காலம் கடவுளோடு நெருங்கி கீழ்படிந்து இருந்தாலும், மிகவும் லேட்டாக வந்தவர்களுக்கும், தந்தை கடவுள் மோட்சம் தருகிறார். ஏனெனில், எல்லோருக்கும் சமமான பரிசை எல்லோருக்கும் தருவது ஒன்றும் அநீதி கிடையாது. கடைசி நிமிடத்தில் கடவுளை அறிந்து மனம் திருந்தியவர்களுக்கும், கடவுள் முழுமையான பரிசுத்தமான அன்பை கொடுக்கிறார். அவர் இதற்கும் குறைவாக எதனையும் செய்ய முடியாது.

முதல் வாசகம் எவ்வளவு உயரம் மோட்சம் இருக்கிறதோ, அதே போல கடவுள் வழிகளும், அவரது எண்ணங்களும் நம்மை விட உயர்ந்தவை. நீது என்பது சமமான பாவித்தல் தான் நீது என்று நாம் நினைத்து கொள்கிறோம். அது பழைய ஏற்பாட்டு காலத்தில் "கண்ணுக்கு கண்”" என்று நீதிக்கு சொல்லப்பட்டது. இயேசு நீதியை மிகவும் உயரத்திற்கு எடுத்து சென்றார். ஒருவருக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் அனைவரையும் சமமாக பாவித்து, அன்பு செய் என்பதாகும்.

கடவுள் மிக உயர்ந்த வழிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் அன்பற்றவர்களாக இருந்தாலும், கடவுள் நம்மை முழுதும் அன்பு செய்கிறார் என்பதை நினைத்து அவர் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளோம். எந்த தகுதியும் இல்லாவிட்டாலும் கூட , கடவுள் அனைவருக்கும் கொடுக்கும் அதே அன்பை நமக்கும் கொடுக்கிறார். பரிசத்த புனிதர்கள் மேல் எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்கிறாரோ அதே அன்பையும் பாசத்தையும் நம் மேல் வைத்திருக்கிறார். அன்னை மரியாளை அன்பு செய்வது போல நம்மையும் அன்பு செய்கிறார். “என்னுடைய சொந்த அன்பை நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உரிமை எனக்கில்லையா ? “ என்று அவர் கேட்கிறார் .


© 2014 by Terry A. Modica


No comments: