Friday, September 25, 2015

செப்டெம்பர் 27 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டெம்பர் 27 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆண்டின் 26ம் ஞாயிறு

Numbers 11:25-29
Ps 19:8, 10, 12-14
James 5:1-6
Mark 9:38-43, 45, 47-48
எதிர்பாராத நட்பு

மாற்கு நற்செய்தி

அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், ``போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார்.
அதற்கு இயேசு கூறியது: ``தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.''


இன்றைய நற்செய்தியில் இயேசு, “ நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்று கூறுகிறார். இதன் உண்மை தன்மை நம் வாழ்வில் பல முறை நமக்கு தெரியாதவர்களிடமிருந்து வரும்பொழுது .நமக்கு அது . ஆச்சரியம் . தருகிறது
பல்வேறு சமயங்களில், சிலர் நமக்கு எதிராக இருப்பதாக நமக்கு தோன்றும், ஆனால் உண்மையில் நமக்கு எதிராக அவர் எண்ணம் கூட இல்லாமல் இருப்பார். எடுத்து காட்டாக, நமக்கு பிடிக்காத உண்மை விசயத்தை பற்றி பேசும்பொழுது, அவர் நமக்கு எதிரி போல நமக்கு தோன்றும், ஆனால், அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர் ஆவார்.
சில நேரங்களில், பலர் நமக்கு பிரச்சினையின் போது நமக்கு உறுதுணையாக இருப்பார்கள், ஆனால், அதன் நோக்கம், அவர்கள் சுய நலம் சம்பத்தபட்டதாக இருக்கும். கடவுள் நம் வாழ்விற்கு கொடுத்த காரியத்தை செய்ய அவர்கள் நமக்கு உதவி செய்வதில்லை.
சில நேரங்களில், சில நண்பர்கள், கடவுளின் இறைபணியை செய்வார்கள், ஆனால், நாம் விருபியபடி அவர்கள் செய்வது இல்லை. மேலும், கடவுள் எப்படி செய்ய சொன்னாரோ அப்படி அவர்கள் செய்யவில்லை என நாமாக அனுமானித்து கொள்கிறோம். நீங்கள் யாரிடமாவது, உங்களுக்காக ஜெபிக்க சொல்லி , அவர்கள் அதற்கு எதிரான கருத்தை கொண்டு ஜெபித்தார்களா ?
பல வருடங்களுக்கு முன்பு, எனது கணவரின் நிறுவனத்தில், பலரை வேலையை விட்டு நிக்கினர். எனது நண்பர் ஒருவரிடத்தில், எனது கணவருக்கு நல்ல புதிய வேலை கிடைக்க வேண்டி ஜெபிக்க சொன்னேன். அனால், அந்த நண்பரோ, அந்த நிறுவனத்திற்காக ஜெபித்தார், அதன் முலம், எனது கணவர் வேலை விட்டு வெளியேற தேவை இல்லாமல் போனது. எனது எதிர்பார்ப்போ அவருக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று, அதனால், எனது நண்பரின் ஜெபம் எனக்கு பிடிக்காமல் போனது. ஆனால் இறுதியில், அந்த நண்பர் தான் கடவுள் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று ஆசை பட்டாரோ அப்படி செபித்தவர்.
யாரேனும் நமக்கு எதிராக இருக்கிறார்கள் என்று அறிய , இயேசுவிடம் அமர்ந்து, நம் குற்றம் குறைகளை, பிரச்சினைகளை , வேதனைகளை எல்லாம் அப்புற படுத்தி விட்டு, அவரோடு நாம் ஜெபித்தால், கடவுள் நமக்கு உறுதுணையாக இருந்து, நமக்கு தேவையான உதவியை அவர் செய்வார். நமது பயன்களையும், கோபத்தையும் கடவுளிடம் கொட்டிவிட்டு, நமக்கு எதிராக இருப்பவர்களை அம மன்னித்து விட்டு கடவுளிடம் மன்றாடினாள், ;தெய்வீக அருளால், நமக்கு என்ன செய்தி கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும்.
உண்மையிலே சிலர் நமக்கு எதிராக இருப்பவர்களையும், ஜெபத்தில் அமைதியாய் அமர்ந்து, பரிசுத்த ஆவியிடமிருந்து ஞானம் பெற தேடினோம் என்றால், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை அறிய முடியும், அது தான் நமக்கு மிகவும் முக்கியம். அவர் நமக்கு ஆறுதலையும், உற்சாகத்தையும், தந்து , எந்த ஒரு பிரச்சினையையும், எதிர்கொள்ள ஆற்றல் தருகிறார்.


© 2015 by Terry A. Modica

No comments: