Friday, October 14, 2016

அக்டோபர் 16 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


அக்டோபர்  16 2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  29ம் ஞாயிறு
Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Timothy 3:14 -- 4:2
Luke 18:1-8

லூக்கா   நற்செய்தி


நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை
1அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.

2ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

3அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

4நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

5என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

6பின் ஆண்டவர் அவர்களிடம்
நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,

7தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?

8
விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?”
 என்றார்
(thanks to www.arulvakku.com)

கடவுள் உங்களை மீட்க வருகிறார்!
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில்," தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்குவார்" என்று கூறுகிறார். நம்மை யாராவது நிராகரிக்கும் பொழுது, அல்லது தவறாக நம்மை குற்றம் சாட்டும் பொழுது , யாராவது ஒதுக்கி வைக்கும் பொழுது, கடவுள் நம்மை காப்பாற்ற வருவார். உடனேயே வருவார் என்று சொல்கிறார். அவர் உங்களுக்கு உடனேயே உதவ வரவில்லையா ? கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லையா ?
கடவுளை நம்மை காக்க மெதுவாக வருவது போல தெரிந்தாலும், பல மாதங்கள் ஆனாலும், பல வருடங்கள் ஆனாலும் (சில நேரங்களில் இப்படி நடப்பதும் உண்டு) , உங்கள பிரச்சினைகள் தீர்வு கிடைக்காவிட்டாலும் கூட நீங்கள் முதல் குரல் கடவுளிடம் கேட்க ஆரம்பத்தில்  இயேசு உங்கள் அருகில் வந்து, சாத்தானிடமிருந்து உங்களை மீட்கிறார்.

"இயேசு எங்கிருக்கிறார் ?" என்பது  நமது கேள்வி அல்ல  , மாற்றாக " ஏன் அவர் உடனே நமக்கு உதவ வில்லை " என்ற கேள்வியும் அல்ல.   முக்கியமான கேள்வி - நமது ஆன்மாவை காப்பாற்றுவது - இன்றைய நற்செய்தியின் கடைசி வரிகளில் உள்ளது: கடவுள் நம்மை காக்க வரும் பொழுது , நாம் விசுவாசத்தோடு அவரை வரவேற்கிறோமா ?  அல்லது பயம் நம் மனதை சூழ்ந்துள்ளாதா? இந்த குழப்பத்தில் அவர் உங்கள் முன் நிற்கிறதே தெரியவில்லையா ?

நாம் விசுவாசத்தில் வாழவில்லை என்றால், நாம் கவன குறைவாக நமது பிரச்சினையை இன்னும் பெரிதாக்குகிறோம். கடவுளிடம் நீங்கள் உதவி கேட்கும் பொழுது, நீங்கள் துன்பகரமாக உணர்கிறிர்களா?  இயேசு உன் அருகில் இருந்து கொண்டு நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று உங்களிடம் கெஞ்சுகிறார்.  மேலும், இயேசு உங்களிடம் அவர் காட்டும் வழியில் பின் செல்ல சொல்கிறார், நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் வழியில் இல்லை.
நம்மிடம் சாத்தானின் செய்லகளின் பாதிப்புகள் இருக்கின்றன. இயேசு தனது வாளை சுழற்றி உங்களுக்கு எதிரான இருளை விளக்குகிறார். அந்த இருளை துரத்தி அடிக்கிறார். ஆனால், அவரின் உண்மை நம்மை வந்தடைவதை நிராகரித்தால், அவர் வாளுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

உங்களை தொடர்ந்து எரிச்சலுட்டும் நபர்கள் யார் ? இயேசுவின் மேல் நம் கண்கள் இல்லாமல் அவர்கள் மேல் இருந்தால், இயேசு நம்மை காப்பதை விட்டு விடுகிறோம், மேலும் இயேசு நமக்கு உதவி செய்வதை காட்டாமல் போய்விடும்.
நாம் விசுவாசத்தோடு வாழும்போது , கடவிளின் உதவியை நாம் அனுதினமும் அனுபவிக்கிறோம். அநீதிகள்  தொடரும் போதும், நம்மால் கடவுளின் செயல்களை அனுபவிக்க முடியும். நம் இதயத்தில் அனுபவிக்கிறோம். மேலும், அவரிடமிருந்து அமைதியையும், தொடர்ந்து நம்மை காப்பதையும் நாம் முழுதாக அனுபவிக்கிறோம்.



© 2016 by Terry A. Modica

No comments: