Saturday, December 17, 2016

டிசம்பர் 18, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

 டிசம்பர்  18, 2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 4ம் ஞாயிறு
Isaiah 7:10-14
Ps 24:1-6 (with 7c & 10b)
Romans 1:1-7
Matthew 1:18-24
மத்தேயு நற்செய்தி
  
இயேசுவின் பிறப்பு
(லூக் 2:1 - 7)
18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்என்றார்.
22-23இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார்என்பது பொருள்.

24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
(Thanks to www.arulvakku.com)

நம்மோடு இருக்கும் கடவுளிடம்  வரும் அன்பு
இந்த நான்காவது திருவருகை கால் ஞாயிறின் முக்கிய கரு பொருளாக அன்பை வைத்திருக்கின்றோம். முதல் வாசகத்தில் அன்பின் முழு பொருளை நாம் காண்கிறோம், மேலும், நற்செய்தி வாசகத்தில் இம்மானுவேல் , "கடவுள் நம்மமோடு" என்ற பொருளோடு , கடவுளின் இறைவாக்கு நிறைவேறியதை நாம் காண்கிறோம். அன்போடு இருப்பது என்பது, "கடவுள் நம்மோடு"  என்பது ஆகும். அன்பை கொடுப்பது என்பது , நம்மில் உள்ள கடவுளை கொடுப்பது.
நீங்கள் எப்போதாவது , அன்பு செய்வதற்கு,  பகிர்வதற்கு உங்களிடம் ஒன்றும் இல்லை என்று நினைத்தது உண்டா?  ஆனால் அப்படி ஒன்றும் நடக்காது!, அனால், நம்மிடம் பொறுமை இருப்பதில்லை; நாம் அன்பை பெற்று கொள்வதில் தான் அதிகம் விரும்புகிறோம், அனால் அன்பை கொடுப்பதில் விரைவில் அயர்ச்சி அடைகிறோம். ஆனால், கடவுள் நம்மோடு , அன்புடன் எப்பொழுதும் இருக்கிறார்.
சிலரை அன்பு செய்வதில் நாம் கஷ்டபட்டிருக்கும் பொழுதோ அல்லது நம்மில் ஒரு வெற்றிடத்தை நாம் கொண்டிருக்கும் பொழுதோ , அல்லது சிலர் நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்கிற பொழுதோ , நாம் கடவுளின் தெய்வீக சக்தியை , அவரின் அன்பை கேட்டு பெற்று, நாம் நம் பகைவர்களையும் அன்பு செய்ய வரம் கேட்க வேண்டும். இந்த ஜெபத்திற்கு எப்பொழுதுமே பதில், பலன் கிடைக்கும்!. இதன் மூலம் நாம் கடவுளின் பகிர்ந்தளிக்கும் இறை பணியாளர்களாக மாறுகிறோம்.
அன்பு செய்ய முடியாதவர்களிடம் கடவுளின் அன்பை நாம் காட்டும் பொழுது, நம்மிடம் உள்ள கடவுளை நாம் அவர்களுக்கு காண்பிக்கிறோம்.
நம் வாழ்வில் பலர் கிறிஸ்துவை போல நம்மிடம் இருப்பது இல்லை. கடவுள் நம்மை எப்படி அன்பு செய்ய வேண்டும் என விரும்புகிறாரோ அப்படி அவர்கள் நம்மை அன்பு செய்வதில்லை. அதனால் , மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ , அதன் மூலம் நம் மகிழ்ச்சி சார்ந்து இருப்பதில்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார்!. நாம் இம்மானுவேலை அழைப்போம். கடவுள் ஏற் கனவே நம்மோடு இருக்கிறார். நம்மை எப்பொழுதும் அன்பு செய்கிறார், எவ்வித நிபந்தனையின்றி , நாம் அவரின் அன்பிற்கு தகுதி ஆனவர்களா இல்லையோ , ஆனால் என்றும் நம்மை கடவுள் அன்பு செய்கிறார்.

மற்றவர்கள் அனைவரும் இன்னும் அதிகமாக நம்மை அன்பு செய்ய வேண்டும் என  எதிர் பார்த்து காத்திருந்தால், நமக்கு யாரும் அன்பு செய்யவில்லை என்ற தோற்றம் தான் நமக்கு கிடைக்கும். ஆனால், இயேசுவின் மேல் நம் கண்களை எப்பொழுதும் வைத்திருந்தாள், அவர் நம் வெற்றிடத்தை அன்பால் நிரப்புவார்.
வருடம் முழுதும் இம்மானுவேல் என்ற பெயரை நாம் உபயோகித்து கொண்டே இருக்க வேண்டும்.
கிறிஸ்துமஸ் விழாவிற்கு நம்மை தயார் செய்கிற பொழுது, இம்மானுவேல் மேல் நம் கண்கள் , நோக்கம் இருக்கட்டும். இம்மானுவேலை புகழ்ந்து பாடுங்கள். இம்மனுவேளிடம் ஜெபம் செய்யுங்கள். இந்த அடையாளம், ஞாபகம் படுத்துதல் , கடவுளின் பெயர், உங்கள் அனைவருக்கும் கடவுளின் அன்பளிப்பு ஆகும்.

© 2016 by Terry A. Modica

No comments: