Saturday, September 2, 2017

செப்டெம்பர் 3, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டெம்பர்  3, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்22 ம் ஞாயிறு
Jeremiah 20:7-9
Ps 63:2-6, 8-9
Romans 12:1-2
Matthew 16:21-27
மத்தேயு நற்செய்தி
இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மாற் 8:31 - 9:1; லூக் 9:22 - 27)
21இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

22பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாதுஎன்றார்.

23ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து
என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்
 என்றார்.

24பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து
என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

25ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.

26மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

27மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.

28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்
 என்றார்.
(thanks to www.arulvakku.com)
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்!
இன்றைய ஞாயிறின் முதல் வாசகம் எனக்கு மிகவும் பிடித்த நற்செய்தி வசனங்கள் ஆகும்! அடிக்கடி நான் நினைத்தது உண்டு, ஏன் எரேமியா இதனை செய்தார்!. நான் கடவுளை நோக்கி திட்டினேன்." ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; " மேலும் பலமுறை இதே மாதிரி நடக்க நான் அனுமதித்தேன் , "உங்களுக்கு இது மாதிரி நடக்க இருப்பது தெரியும் தந்தையே, எனக்கு ஏன் இந்த சோதனை நடக்க விட்டீர் ? " இது மாதிரி நீங்கள் எப்பொழுதாவது நினைத்தது உண்டா?
கடவுள் இதனை செய்ய நாம் ஏன் அனுமதிக்கிறோம்? கடவுள் நம்மை கடினமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றாலும் நாம் ஏன் கடவுளை நம்புகிறோம்? இருந்தும் நாம் ஏன் இன்னும் மற்றவர்களுக்கு அன்பு காட்டியும் (அது மிகவும் கடினமாக இருந்தும்), இயேசுவிற்காக நாம் பலதும் செய்கிறோம் ?
கடவுளோடு கூட நடந்து அவர் இறையரசிற்கு இறைசேவை செய்வது ஒரு சவால் நிறைந்த செயல் ஆகும். எதிர்பாராத ஒன்று நமக்கு நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். துரதிஷ்டவசமாக இந்த உலகில் இறை சேவையில் நாம் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். நமது சுய தேவைகளை விட வேண்டியிருக்கும், சிலுவைகளை சுமக்க வேண்டியிருக்கும், கல்வாரி மலை வரை இயேசுவோடு நாமும் செல்ல வேண்டியிருக்கும். (கண்டிப்பாக, உயிர்ப்பும், மீட்பும் நமக்கு வரும் )

ஏனெனில், நாம் தந்தை கடவுளை அன்பு செய்கிறோம். நம் வாழ்வை அவருக்காக தியாகம் செய்ய தயாராய் இருக்கிறோம், இரண்டாவது வாசகத்தில் நம்மிடம் கேட்கபட்டுள்ளதை போல, நாம் நம்மை தியாக செய்ய விருப்பத்துடன் இருக்கிறோம். இது தான் உயர்ந்த வழிபாடு ஆகும்; திவ்விய நற்கருணையில் நாம் இயேசுவோடு இணைகிறோம், அதற்கு அடுத்த இணைப்பு நம் தியாகம் மூலம் நடக்கிறது. இயேசுவோடு இணைந்து, நாமும் திவ்ய நற்கருணை ஆகிறோம்.
எரேமியா குற்றம் சொல்வது போல, நாமும் கடவுளிடம் குறை சொல்லலாம். அவருக்காக வேலை செய்வது பிடிக்க வில்லை என்றும் சொல்லலாம். அதற்காக அவர் ஒன்றும் உங்களை தண்டிக்க போவதில்லை. ஆனால், மற்றவர்களிடம் குற்றம் சொல்வது பாவம் ஆகும். ஏனெனில் அதன் முலம் நாம் கடவுளை தவறாக சித்தரிக்கிறோம்
நமது சோதனை காலங்களில் நமக்காக ஜெபம் செய்ய மற்றவர்களிடம் கேட்பது மிகவும் முக்கியமானது, கண்டிப்பாக நாம் இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால், மற்றவர்களை பற்றி குறை கொள்வது நாம் கடவுளை குறைவாக விசுவசிக்கிறோம் என்று அர்த்தம். நமது தியாகத்தினால் நாம் விளைவுகளை கண்டிப்பாக பார்ப்போம். அதனை தான் நாம் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும்.

© 2017 by Terry A. Modica

No comments: