Friday, April 20, 2018

ஏப்ரல் 22 2018 ஞாயிறு நற்செய்தி சிந்தனை மறையுரை


ஏப்ரல்  22 2018 ஞாயிறு நற்செய்தி சிந்தனை மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 4ம் ஞாயிறு
Acts 4:8-12
Ps 118:1, 8-9, 21-23, 26, 28-29
1 John 3:1-2
John 10:11-18

யோவான் நற்செய்தி

11நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.

12கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.

13கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.

14-15நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

16இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.

17தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.

18என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.
(thanks to www.arulvakku.com)

இயேசுவே நல்ல ஆயர்
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு தன்னை நல்ல ஆயர் என்று சொல்கிறார். நாம் தான் அவர் கூறும் ஆட்டு மந்தைகள் , நமக்காக அவர் வாழ்வையே நமக்கு கொடுத்தார். அவருடைய மனித வாழ்வின் அணைத்து சுகத்தையும் , ஆசைகளையும், அவர் குடும்பம், தூக்கம் , ஒய்வு, குற்ற தண்டனையிலிருந்து தப்பித்தல், அனைத்தும்,   துறந்து நமக்காக தன உயிரை துறந்தார்.
ஆடுகளாக நாம் ஆயனின் குரலை சரியாக தெரிந்து கொள்வோம். மேலும், விருப்பத்துடன் அவர் பின் செல்வோம் , அங்கே தான் பச்சை புல் வெளிகள் இருக்கும். நாம் அவரை நல்லாயனாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அவருடைய பாதுகாப்பில், வழி காட்டுதலிலும் , அவரின் அன்பிலும் நாம் இருக்க விரும்புகிறோம்.
எனினும், சில நேரங்களில் நாம் அவருடைய குரலை கேட்க தவறி விடுகிறோம். நாம் திட்டமிட்டபடி நமது வாழ்வு செல்லாத போது , நமது பய உணர்ச்சியில் , இயேசு நம்மை விட்டு சென்று விட்டார் என நினைத்து விடுகிறோம். காணாமல் போன  ஆட்டினை தேடி சென்று விட்டார், நம்மை தனியே விட்டு விட்டார் என நினைத்து விடுகிறோம். -- கண்டிப்பாக இல்லை -- ஓநாய்கள் தாக்கும் பொழுது, இயேசு நம்மை நினைத்து கொண்டாரா ? நம் மேல் அக்கறை இருந்தால் ஏன் இப்படி செய்கிறார் ? ஏன் நம்மை தனியே விட்டு விட்டு காணாமல் போன ஆட்டினை தேடி போனார் என நாம் நினைக்கிறோம்.
எவ்வளவு தூரம் இயேசு சென்றிருந்தாலும், நம்மை விட்டும் அவர் பிரிவதில்லை. எப்பொழுதும் நம்மோடு இயேசு இருக்கிறார். நம் வாழ்வு, எவ்வளவு தூரம் சென்றாலும், மரண விளிம்பிற்கு சென்றாலும், இயேசு நம்மை கைவிட்டதால் நாம் அங்கே செல்லவில்லை. அந்த துன்பம் நமக்கு நேருகிறபோது ,நமக்கு அருகில் இருக்கும் ஆடுகள், நாம் வேறு திசைக்கு செல்ல வேண்டும் என நமக்கு நினைவு படுத்துகின்றன ஆனால், நாம் அதனை புரிந்து கொள்ளவில்லை.
நாம் வேறு திசைக்கு செல்வதில்லை. நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே இருக்க ஆசைபடுகிறோம். மற்றவர்கள் நம்மை தட்டி தட்டி வேறு திசைக்கு செல்ல அழைக்கும் போது நாம் எரிச்சலடைகிறோம். மேலும், இயேசுவின் ஆசிர்வாதத்தை காண வேண்டுமானால், நாம் அவர் இருக்கும் திசைக்கு செல்ல வேண்டும், இயேசுவின் மேல் நம் கண்ணை வைத்து , அவர் சொல்வதை கேட்க நம் காதுகளை தயாராய் வைத்திருக்க வேண்டும், முதலில் அவர் சொல்வது கஷ்டமாக இருந்தாலும், நாம் அவர் சொல்படி செல்லவேண்டும்.
© 2018 by Terry A. Modica


No comments: