Friday, October 5, 2018

அக்டோபர் 7 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை


அக்டோபர் 7 2018  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு
Genesis 2:18-24
Ps 128:1-6
Hebrews 2:9-11
Mark 10:2-16

மாற்கு நற்செய்தி
பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

3அவர் அவர்களிடம் மறுமொழியாக
மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?”
 என்று கேட்டார்.

4அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்என்று கூறினார்கள்.

5அதற்கு இயேசு அவர்களிடம்
உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.

6படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்,
ஆணும் பெண்ணுமாக
அவர்களைப் படைத்தார்.
7இதனால் கணவன் தன் தாய்
தந்தையை விட்டுவிட்டுத் தன்
மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.
8இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.

9
எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்
 என்றார்.

10பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.

11இயேசு அவர்களை நோக்கி
தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.

12
தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்
 என்றார்.
சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்
(மத் 19:13-15; லூக் 18:15-17)
13சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

14இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு
சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.

15
இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்
 என்றார்.

16பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

(thanks to www.arulvakku.com)
திருமணத்தில் இயற்கையை தாண்டிய அன்பும் காதலும்
உங்கள் மேல் அன்பு இல்லதாத ஒருவரை நீங்கள் அன்பு செய்தது உண்டா? கடவுளின் இயற்கையை தாண்டிய அன்பை நீங்கள் என்றாவது அனுபவித்தது உண்டா? அந்த அன்பு தான், கடினமாக அன்பு செய்ய கூடியவரையும், உங்களை அன்பு செய்ய வைக்கிறது.

நம்மில் திருமணம் ஆனவர்கள், நமது துனையை அன்பு செய்ய வேண்டும். நாம் எந்த அளவிற்கு அன்பு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறோமோ அதே போல நாம் நம் துணையை அன்பு செய்ய வேண்டும். இது பரஸ்பரம் இரண்டு பெரும் இந்த அன்பினை வெளிபடுத்த வேண்டும் என நாம் அனுமானித்து கொள்கிறோம்: எப்பொழுதும் நம் துணை, நாம் எந்த அளவிற்கு அன்பு செய்கிறோமோ அதே அளவிற்கு அன்பு செய்ய வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்


ஆனால், பல திருமணங்கள் பல கடினமான சூழ்நிலையில் செல்கிறது. அதற்கு கடவுளின் உதவி தேவை படுகிறது, அவரின் தொடர் உதவி நமக்கு தேவைபடுகிறது. அதனால் தான் நாம் திருமணத்தை கடவுளின் முன்னிலையில் அருட்சாதனமாக ஆரம்பிக்கிறோம். மற்றவர்கள் போல பீச் அல்லது, ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நாம் திருமணம் செய்து கொள்வதில்லை. தெய்வீக அருள் இல்லாமல் திருமணம் தொடர்ந்து அன்போடு வாழ் முடியாது.
இன்றைய நற்செய்தியில், மோசஸ் சட்டத்தை (திருமண பிரிவு) பற்றி விளக்குகிறார். மக்களின் கடினமான மனதினால் தான் அப்படி மோசஸ் செய்தார் என்று சொல்கிறார். அதனால் விவாகரத்திற்கு அது ஒன்றும் அனுமதி அல்ல.இயேசுவை போல, அவரின் இதயத்தை போல, அன்பு செய்வதை என்றும் நிறுத்தி விட கூடாது என்று எதிர்பார்க்கிறார்.
மோசஸ் காலத்தில், திருமண உறவு கடினமாகும் போது, கணவர்கள் பலர், அவர்கள் மனிவியை விட்டு பிரிந்தனர். (ஆதி ஆகமம், அதிகாரம் 1) முதல் திருமணம் நடை முறையில் இருந்தாலும், திருமணம் உடன்படிக்கையாக இருக்கிறது. ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் காலம் முழுதும் இணைக்கிறது. விவாகரத்து சட்டம் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என்பது தான் அந்த சட்டத்தின் பயன், அதனால்,  விவாகரத்து செய்து கொள்ளலாம்  என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

கடவுளோடு நமக்கு உள்ள விசுவாச உறவு திருமணத்தையும் பிரதி பலிக்கிறது. திருமணம் நிரந்தரமாக நமக்கு கடவுள் மூலம் கிடைத்த தெய்வீக அன்பளிப்பு., அந்த நிரந்தர அன்பை நாம் நம்பவில்லை எனில், கடவுள் நம்மை எப்பொழுதும் அன்பு செய்கிறார் என்று நாம் நம்ப முடியும். (அந்த அன்பிற்கு நாம் தகுதி இல்லாதவர்கள் என்று அறிந்தும்) மேலும், நம்மை எப்பொழுதும் பார்த்து கொண்டிருக்கும் குழந்தைகளும் மற்றவர்களும் நம்புவார்கள்.?
நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள், அன்பு செய்கிறவர்கள், மற்றவருக்காக துன்பத்தை ஏற்று கொள்வார்கள், அதே துன்பத்தின் பிரதிபலிப்பாக தான் கிறிஸ்துவின் பாடுகளும் இருந்தன.
கடவுள், நாம் எப்போதும் அவரோடு இணைந்தே இருக்க வேண்டும் என்று கட்டாயபடுத்த வில்லை. நாம் அவரை விட்டு விலகி சென்றாலும், அவர் நம் மேல் அன்பு செய்கிறார். அதே போல, நம்மை விட்டு பிரிந்த துணையையும் நாம் அன்பு செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். இதே கொள்கை, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அணைத்து உருவுகளுக்கு பொருந்தும். நல்ல நட்பு, குருவானவருக்கும் மக்களுக்கும் உள்ள உறவு, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவு அனைத்தும், அன்பு செய்ய பட வேண்டியவையே.
© 2018 by Terry A. Modica

No comments: