ஜூன் 28 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு
2 Kings 4:8-11, 14-16a
Ps 89:2-3, 16-19
Romans 6:3-4, 8-11
Matthew 10:37-42
மத்தேயு நற்செய்தி
✠ 37என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ
ஆண்டின் 13ம் ஞாயிறு
2 Kings 4:8-11, 14-16a
Ps 89:2-3, 16-19
Romans 6:3-4, 8-11
Matthew 10:37-42
மத்தேயு நற்செய்தி
✠ 37என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ
மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர்
என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத்
தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய்
அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர்
எனக் கருதப்படத் தகுதியற்றோர். 38தம்
சிலுவையைச் சுமக்காமல் என்னைப்
பின்பற்றி வருவோர் என்னுடையோர்
எனக் கருதப்படத் தகுதியற்றோர்.✠ 39தம்
உயிரைக் காக்க விரும்புவோர் அதை
இழந்து விடுவர். என் பொருட்டுத் தம்
உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.✠
கைம்மாறு பெறுதல்
(மாற் 9:41)
40“உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை
கைம்மாறு பெறுதல்
(மாற் 9:41)
40“உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை
ஏற்றுக்கொள்கிறார். என்னை
ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே
ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே
ஏற்றுக்கொள்கிறார்.✠
41இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர்
41இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர்
என்பதால் ஏற்றுக்
கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு
கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு
பெறுவார். நேர்மையாளர்
ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால்
ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால்
ஏற்றுக்கொள்பவர்
நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
42இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர்
என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது
கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல்
போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஜெபம்:
அன்புள்ள பிதாவே, இயேசுவின் நாமத்தில், எல்லா
நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
42இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர்
என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது
கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல்
போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஜெபம்:
அன்புள்ள பிதாவே, இயேசுவின் நாமத்தில், எல்லா
நேரங்களிலும் நன்மை செய்வதற்கான தைரியத்தை
எனக்குத் தந்தருளும். மற்றவர்களிடம் உமது அன்பை
வெளிப்படுத்தும் கருவியாக நான் செயல்படுவதைத்
தடுக்கும் வகையில் எனது பாரபட்சமான எண்ணங்கள்
அமையாதிருப்பதாக. ஆமென்.
உங்களுக்கு எது மிக முக்கியமானது?
உங்களுக்கு எது மிக முக்கியமானது? இந்த ஞாயிற்றுக்கிழமை
நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் மீது நம் கண்களைப்
பதித்திருப்பதன் முக்கியத்துவத்தையும், எப்போதும்
அவரையே நம் முதல் முன்னுரிமையாக மாற்றுவதையும்
வலியுறுத்துகிறார். கடவுளுடனான நமது உறவை விட வேறு
எதுவும் முக்கியமல்ல. இதற்குப் பொருள், இயேசு நம்மை எங்கு
வழிநடத்தினாலும் அவரைப் பின்பற்றுவது, எல்லாவற்றையும்
அவருடைய வழியிலேயே, முழுமையாக, ஒவ்வொரு நாளும் செய்வது,
நம்முடைய 100% பங்களிப்பை அவருக்கு வழங்குவது
(நம் விசுவாசத்தில் அரைகுறையாக இருப்பதற்கு
எந்த சாக்குகளும் சொல்லாமல்), அவர் செய்தது
போல பிறருக்கு சேவை செய்வதில் நம்
உயிரையே அர்ப்பணிப்பதாகும்.
நம் உயிரை அர்ப்பணிப்பது என்பது தியாகங்களைச்
செய்வதைக் குறிக்கிறது; உதாரணமாக, தாகமாயிருப்பவருக்கு
ஒரு கிண்ணம் குளிர்ந்த நீரைக் கொடுப்பது போல. நமது
பிஸியான கால அட்டவணைகளுக்கு மத்தியிலும் ஒருவரை
ஏற்றுக்கொண்டு, அவருக்குள் இருக்கும் தீர்க்கதரிசியின்
குரலைக் கேட்பது என்று இதற்குப் பொருள்; உதாரணத்திற்கு:
இந்த நபர் மூலம் கடவுள் நமக்கு என்ன சொல்கிறார்?
மற்றவர்களுக்காக நம் உயிரைக் கொடுக்க நாம் மறுக்கும்போது
, கிறிஸ்து நமக்காக ஏற்றுக்கொண்ட சிலுவையையும்
அவருடைய பாடுகளையும் நாம் நிராகரிக்கிறோம்.
இருப்பினும், இதற்கெல்லாம் நாம் மற்றவர்களுக்கு
எப்போதும் "இல்லை" என்று சொல்லவே முடியாது
என்று அர்த்தமல்ல. துஷ்பிரயோகத்தின் தீங்குகளில் இருந்தோ,
பாவமான கோரிக்கைகளில் இருந்தோ அல்லது ஆரோக்கியமற்ற
நடத்தைகளுக்குத் துணை போவதிலிருந்தோ இயேசு நம்மை
விலக்கி வழிநடத்த விரும்புகிறார். இதுபோன்ற
சந்தர்ப்பங்களில் "இல்லை" என்று சொல்வது சிலுவைப்
பாதையின் மற்றொரு வடிவமே ஆகும்.
நாம் உண்மையாகவே கிறிஸ்துவைப் பின்பற்றும்போது,
அவர் என்னவாக இருக்கிறாரோ அதையும்,
அவர் நமக்காக வைத்திருக்கும் அனைத்தையும்
நாம் பெற்றுக்கொள்ள முடியும். நமது பயங்களையும்
தனிப்பட்ட இலக்குகளையும் நாம் கைவிட்டு,
புதிய இடங்களுக்கும், பிரச்சனைகளைக் கையாள்வதற்கான
புதிய வழிகளுக்கும் இயேசு நம்மை வழிநடத்த
அனுமதிக்கும் போது, கிறிஸ்துவுக்குள் நாம் ஒரு
புதிய வாழ்க்கையைக் கண்டடைகிறோம்.
நாம் பயந்ததை விட அவருடைய வழிகள்
எப்போதும் மிகச் சிறந்தவையாகவே இருக்கும்.
இதுதான் ஒரு அரைகுறை விசுவாசத்திற்கும்
இதுதான் ஒரு அரைகுறை விசுவாசத்திற்கும்
, சாகசங்கள், அற்புதங்கள், ஆச்சரியமான தீர்வுகள்,
குணம்டைதல், வெற்றிகள் நிறைந்த மற்றும்
நாம் கடவுளுக்கு
எவ்வளவு விலையேறப்பெற்றவர்கள் மற்றும்
முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தும்
கிறிஸ்துவுக்குள்
இருக்கும் ஒரு வாழ்க்கைக்கும் உள்ள
வித்தியாசமாகும்.
© by Terry A. Modica, Good News Ministries
© by Terry A. Modica, Good News Ministries
No comments:
Post a Comment