Showing posts with label ஆண்டவரின் திருமுழுக்கு திருவிழா. Show all posts
Showing posts with label ஆண்டவரின் திருமுழுக்கு திருவிழா. Show all posts

Friday, January 11, 2013

ஜனவரி 13, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஜனவரி 13, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு திருவிழா
Isaiah 42:1-4, 6-7 (or Isaiah 40:1-5, 9-11)
Ps 29:1-4, 9-11 (or Ps 104:1-4, 24-25, 27-30)
Acts 10:34-38 (or Titus 2:11-14; 3:4-7)
Luke 3:15-16, 21-22 

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 3
3. திருப்பணிக்குத் தயார் செய்தல்
திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்
(மத் 3:1 - 12; மாற் 1:1 - 8, யோவா 1:19 - 28)
5 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 - 17; மாற் 1:9 - 11)
21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி எல்லா எதிர்பார்ப்பையும் ப்ரதி பலிக்கிறது. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? அநீதிக்கு எதிராக உங்களை கடவுள் எப்படி வந்து காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அல்லது சாத்தானிடமிருந்து உங்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிரீர்கள்? அல்லது உங்களின் அன்பானவர் கடவுளிடம் திரும்ப வேண்டும் என காத்திருக்கும் நேரத்தில் உங்களி அனுசரனையாக ஆறுதல் அளிக்க கடவுளிடம் எதிர்பார்க்கிறீர்களா? குழப்பத்திலும் நிச்சயமற்ற நிலையிலும் என்ன வழிகாட்டுதலை கடவுளிடம் எதிர்பார்க்கிறீர்கள்? இதனையெல்லாம் எதிர்பார்த்து காத்திருக்கும்போது, கிறிஸ்துவின் அன்பளிப்பான அமைதியை உங்களில் இருப்பதை உங்களால் அறிய முடிகிறதா? அல்லது கவலையுடனும், செயல்குழைந்தும், பொறுமையிழந்தும் இருக்கின்றீர்களா?


இன்றைய நற்செய்தியில், யோவானை சுற்றியிருந்த அனைவரும், எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர், யோவான் தான் மெசியா என்றும், பூமிக்கு வந்தே விட்டார் எனவும் நினைத்தனர். அநீதிக்கு எதிராகவும், வேற்று நாட்டின் அடிமைதனத்திற்கு எதிராகவும், பாவங்களுக்கு எதிராகவும் கடவுள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே, யோவானின் மனந்திரும்பும் ஞானஸ்நாணத்தில் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். அவர்களது உற்சாகம், அவரவரின் சொந்த தேவைகளை பொறுத்து இருந்தது. இறைவனின் வழிகாட்டுதலால் அவர்கள் உற்சாகமடையவில்லை.

இருந்தாலும், கடவுள் இதைவிட மேலானதை அவரின் மனதில் இருத்தி வைத்திருந்தார். உண்மையான மெசியாவோ, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நாணம்
 பெறுவார். மேலும், யோவான், மக்களை மனம் திரும்ப அழைக்க மட்டுமே முடியும். உண்மையான மெசியாவோ, பரிசுத்த ஆவியினால், அவர்களுக்கு ஆற்றல் கொடுத்து பரிசுத்த வாழ்வில் வாழ்ச் செய்தார்.

யேசு யோவானிடம் ஞாணஸ் நாணம் பெற தன்னை ஒப்படைத்தது எதற்காக என்றால், அவர் மனம் திரும்ப இல்லை, ஏனெனில், அவர் பாவமில்லாதவர். நாம் அனைவரும் மனம் திரும்ப வேண்டிய செயலில் தன்னையும் ஈடுபடுத்தி கொண்டார். அங்கேயிருந்தே அவரின் மீட்பு சேவையை , நமது பாவங்களையெல்லாம், சிலுவைக்கு எடுத்து செல்லும் சேவையை துவங்கி விட்டார்.

கிறிஸ்துவ ஞாணஸ் நாணத்தில்,  யேசுவின் பரிசுத்தத்திலும், அவரின் இறைசேவையிலும் நாம் முழுகப்படுகிறோம். மேலும், அவரின் குருத்துவத்திலும், நற்செய்தி அறிவித்தலிலும், பிறருக்கு சேவை செய்து முன்மாதிரியாக இருப்பதிலும், மீட்புக்காக அவர் பட்ட வேதனையிலும், நாம் முழ்கடிக்கபடுகிறோம். யேசு செய்ததை போல நாமும் செய்ய பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஆற்றல் தருகிறார். மேலும், கடவுள் சொல்கிறார்: “' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் '”

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் ஞாணஸ் நானத்தால் உங்கள் அனுதின வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?  எதிர்பார்ப்பது என்பது ஒரு நல்ல குணம் தான், ஆனால், இது பொறுமையிழந்து  நல்லது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது நல்லதல்ல, அது ஏமாற்றத்தை தான் கொடுக்கும். கடவுள் நல்ல செயல்களினால் எதிர்பார்ப்பு ஏற்பட்டு, , மேலும், அவர் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறாரோ அதில் நடந்தால், நமக்கு சந்தோசமும், உறுதியான விசுவாசமும், தெய்வீக அற்புதங்களும் நடக்கும்.

© 2013 by Terry A. Modica