மறையுரை மே 6, 2007
ஈஸ்டரின் ஆறாவது ஞாயிறு
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 14
23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: ' என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். 24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. 25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். 26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவு+ட்டுவார். 27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். 28 ' நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன் ' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். 29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.
http://www.arulvaakku.com
நாம் சரியாக செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். நாம் கிறிஸ்துவை போல வாழ்ந்து அவருக்கு மரியாதை செல்ல விரும்புகிறோம். இந்த ஞாயிறின் நற்செய்தி இதைதான் குறிப்பிடுகிறது. யேசுவை அன்பு செய்வது என்பது, அவருடைய கட்டளைகளை கடைபிடித்து, அவருடைய போதனையின் படி நடக்கவேண்டும். நாம் இது மாதிரி செய்யும்போது கடவுள் நம்மிடம் வசிக்கிறார்.
இது ஒன்றும் மிகவும் சுலபமானது அல்ல. ஒவ்வோரு நாளும், பல விசயங்கள் நாம் கிறிஸ்துவின் வார்த்தையின் படியும், அவரை மாதிரி வாழ்வதும் நமக்கு சவால் விடுகிறது. யேசு இது மாதிரி நேரங்களில் என்ன செய்வார் என்பதை நமக்கு தெரிவதில்லை அல்லது நாம் மறந்து விடுகிறோம். மக்கள் அவர்களுடைய தவறான செயல்களினால், அன்பிற்கு எதிரான செயல்களால் நம்மை தொல்லைபடுத்துவார்கள, ர்னம்மை துன்புறுத்திருகிறார்கள், நாம் இதனால் என்ன ஆகும் என்று தெரியாமல் தடுமாறுகிறோம்.
நற்செய்தியில், ஒவ்வொரு நேரத்திலும், கஷ்டமான நேரங்களிலும், கிறிஸ்துவை எப்படி பின்பற்றுவது என்று எங்கும் பட்டியலிடப்படவில்லை. "இது மாதிரி நடந்தால், கடவுளின் கொள்கையை பின்பற்றுக #127"
இதனால் தான் யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுக்கிறேன் என்று உறுதியளிக்கிறார். நம்முடைய சவால் மற்றும் சோதனையான நேரங்களில், பரிசுத்த ஆவிதான், யேசுவின் வழிகளை நமக்கு தெரியபடுத்துகிறார். காலை எழுந்து மாலை தூங்கும் வரை நம்மோடு பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.
நம் பிரச்னையானது, எப்படி கடவுளின் கட்டளைகளை கடைபிடிப்பது என்பது கிடையாது. எப்படி பரிசுத்த ஆவியானவரை நம்பி அவருடைய வழிகாட்டுதலை பின்பற்ற மறந்து விடுகிறோம். நமக்கு கடவுளின் முழு உதவியும் இருக்கிறது. ஆனால், நாம் நமக்கு வரும் சவால்களை நாமே கையாள வேண்டும் என்று நினைத்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறோம்.
இங்கே ஒரு தெய்வீக பயிற்சியை உங்களுக்கு சொல்கிறோம். அதன் மூலம், பரிசுத்த ஆவியின் கட்டளைகளை எப்படி கேட்டு அதனை பின்பற்றுவது எளிதாகும். உங்களுடைய கடிகாரத்தில், ஒவ்வொரு மணிக்கும், ஒரு பீப் சத்தம் கேட்பது போல அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை அலாரம் அடிக்கும்போதும், பரிசுத்த ஆவிக்கு நன்றி சொல்லி, நம்மோடு இருப்பதற்காகவும், அடுத்த அறுபது நிமிடங்களுக்கு நமக்கு வழிகாட்டுவதற்காகவும் நன்றி சொல்லுங்கள். இந்த பயிற்சியை சில வாரங்கள் செய்த பின்பு, உஙகளுக்கு இறைவனின் ப்ரசன்னமும் அவரின் போத்னகளும் நமக்கு எப்போதும் தெரியும்.
http://www.gnm.org
Showing posts with label ஈஸ்டரின் ஆறாவது ஞாயிறு தெய்வீக பரிசுத்த. Show all posts
Showing posts with label ஈஸ்டரின் ஆறாவது ஞாயிறு தெய்வீக பரிசுத்த. Show all posts
Saturday, May 5, 2007
Subscribe to:
Posts (Atom)