ஜூலை 3, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு
Zec 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Rom 8:9, 11-13
Matt 11:25-30
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 11
தந்தையும் மகனும்
(லூக் 10:21 - 22)
25 அவ்வேளையில் இயேசு, ' தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ' என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்
28 மேலும் அவர், ' பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இயேசுவின் நுகத்தை சுமையை ஏற்று கொண்டதால், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கிறீர்களா? அல்லது கவலையோடு இருக்கிறீர்களா? இயேசுவின் நுகம், சுமை - அவரது வாழ்வில் வெளிப்படுத்தியது போல, சேவை செய்பவராகவும், மற்றவர்களின் மேல் அக்கறை கொண்டவர்களாகவும், தியாகமுள்ள அன்புடனும் இருப்பது தான் இயேசுவின் நுகம், சுமை ஆகும்.
எனினும், நமக்கு , பல சுய போராட்டங்கள் இருக்கிறது. நமது சொந்த சிலுவைகளை நாமே சுமக்க வேண்டியுள்ளது. பலரின் கவனம் நம் மேல் இருக்கும். அந்த சுமைகளெல்லாம் சேர்ந்து, நம்மை கிழே தள்ளும், சோர்வுற செய்யும். பிறகு ஏன் இன்றைய நற்செய்தியில், இயேசு, என் நுகம், எளிதானது, அதன் சுமைகள் அழுத்தாது என்று கூறுகிறார்.?
இயேசுவின் இறைசேவகளில் நாம் பங்கெடுக்கும்பொழுது, அது எப்படி நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ?
நமது வாழ்வின் சுமைகள் நம்மை கீழே தள்ளி விடும், ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட, அதிகமாக, நம் பொறுப்புகளை எடுத்து கொண்டு செய்கிறோம்.
அல்லது, இயேசு நம் சுமைகளை எடுத்து கொண்டவுடன், சிலுவைகளை நாம் எடுத்து கொண்டு, அதிகமாக நமது ஆற்றலை செலவிடுகிறோம். இந்த சுமைகளால், நாம் களைத்து போகும்பொழுது, கடவுள் நம்மை சோர்வுறசெய்கிறார். ஏனெனில், அவர் நம்மை எச்சரிக்கிறார். "மெதுவாக செய்யவும்!, உங்கள் வாழ்க்கையை சுலபமாக்குங்கள்!, ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள்!. ஜெபத்தில் அதிக நெரம் செலவிடுங்கள்!"
இதெல்லாம், உங்களுக்கு, கோபத்தையும், மனக்கசப்பையும் கொடுத்தால், சுலபமான வாழ்க்கை வாழ விரும்பும், உங்கள் சுய நலத்தினால் தான், உங்கள் வாழ்வு இன்னும் கடினமாகியுள்ளது என்று கடவுள் நமக்கு காட்டுகிறார்.
நமது சுய தேவைகளை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும், அதற்கு பிறகு தான் இயேசுவின் சுமையை நம்மால் எடுத்து அவர் கேட்டதை செய்ய முடியும். கிறிஸ்துவின் நுகம், நமக்கு சுமையாக இருக்கும், எப்பொழுது? கிறிஸ்துவிடமிருந்து நாம் எதையும் வாங்காமல், நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது தான். இயேசு நமக்கு என்ன தேவையோ அதனை கொடுப்பார். அவரோடு இனைந்து, நாம் மற்றவர்களுக்கு அவர்களுக்கு தேவையானதை கொடுக்கலாம். அதன் பிறகு, நமது கோபமும், மனக்கசப்பும் நம்மை விட்டு விலகிவிடும். மேலும், பரிசுத்த வாழ்வின் இன்பத்தினை , நமது செயல்கள் மூல்ம் நாம் சுவைப்போம். ஏனெனில், கிறிஸ்துவின் சுமையையும், ஆற்றலையும், சக்தியையும் நாம் இயேசுவோடு இனைந்து, அவரது சுமையையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
© 2011 by Terry A. Modica
Showing posts with label சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே. Show all posts
Showing posts with label சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே. Show all posts
Friday, July 1, 2011
Subscribe to:
Posts (Atom)