Showing posts with label நல்ல சமாரியர். Show all posts
Showing posts with label நல்ல சமாரியர். Show all posts

Saturday, July 12, 2025

ஜூலை 13 2025 ஞாயிறு நற்செய்தி மறையுரை

 ஜூலை 13 2025 ஞாயிறு நற்செய்தி மறையுரை 

ஆண்டின் 15ம் ஞாயிறு 


Deuteronomy 30:10-14

Ps 69:14,17,30-31,33-34,36-37 or Ps 19:8-11

Colossians 1:15-20

Luke 10:25-37


லூக்கா நற்செய்தி 


நல்ல சமாரியர்

25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 26அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். 27அவர் மறுமொழியாக,

‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’


என்று எழுதியுள்ளது” என்றார்.✠ 28இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.✠

29அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். 30அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். 32அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். 33ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். 34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 35மறுநாள் இருதெனாரியத்தை⁕ எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.

36“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். 37அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

(thanks to www.arulvakku.com)



இன்றைய ஜெபம்:

பிதாவே, பல துன்பகரமான சூழ்நிலைகளில் நான் காட்டிய அலட்சியத்திற்காக என்னை மன்னியுங்கள். இதற்காக நான் மனந்திரும்பி, உமது அன்பிலும் கருணையிலும் பலம் தேடவும், வலியையும் தேவையையும் நான் காணும் இடமெல்லாம் ஈடுபடவும் என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.


உலகை குணப்படுத்த போதுமான அன்பு.



அன்புக்கு எதிரானது வெறுப்பு அல்ல. அது அக்கறையின்மை: ஒரு தேவையைப் புறக்கணித்தல், அக்கறை கொள்ளாமல் இருத்தல், துன்பத்தைப் போக்க நம்மால் ஏதாவது செய்ய முடியும் போது எதையும் செய்யாமல் இருத்தல். இந்த ஞாயிற்றுக்கிழமை நற்செய்தி வாசகத்தில், நாம் கடவுளை நம் முழு இருதயத்தோடும், நம் முழு இருப்போடும், நம் முழு பலத்தோடும், நம் முழு மனதோடும் நேசித்தால், நாம் இயல்பாகவே மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்கிறோம், அந்நியர்களைப் பற்றியும், நாம் "விரும்பக்கூடாதவர்கள்" பற்றியும், அது நமக்கு தனிப்பட்ட முறையில் ஏதாவது செலவாகும்போது கூட, என்பதை விளக்க இயேசு நமக்கு நல்ல சமாரியனின் உவமையைத் தருகிறார்.


இன்று நம் உலகில் நிலவும் பல பிரச்சினைகள் தொடர அனுமதிக்கப்படுகின்றன, ஏனென்றால் கிறிஸ்துவின் மூலம் உலகை மாற்றும் சக்தி பெற்ற கிறிஸ்தவர்களான நாம், நம் நேரத்தையும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையும் தியாகம் செய்து அதில் ஈடுபடுவதற்கு போதுமான அக்கறை காட்டுவதில்லை. போதுமான கிறிஸ்தவர்கள் கடவுளை நேசித்து, மற்றவர்களைப் பற்றி அக்கறை கொண்டு, தலையிடுவதற்கான செலவை ஆபத்தில் ஆழ்த்தினால், நம் குடும்பங்கள், பணியிடங்கள் மற்றும் திருச்சபைகளில் ஏற்படும் துன்பங்களில் பெரும்பாலானவை நிறுத்தப்படும் அல்லது நிவாரணம் பெறும்.


நீங்கள் கடவுளை எவ்வளவு நேசிக்கிறீர்கள்? மற்றவர்களை நேசிப்பதற்காக நீங்கள் எவ்வளவு தியாகம் செய்யத் தயாராக இருக்கிறீர்கள் என்பதில் பதில் இருக்கிறது, இந்த உவமையின் மூலமும், அவருடைய வாழ்க்கை மூலமும் இயேசு நமக்குக் கற்பித்த அன்பின் வரையறை இதுதான்.


நம்மில் யாரும் இன்னும் கடவுளை முழுமையாக நேசிக்கவில்லை. உத்தரிக்கிற ஸ்தலம்  என்பது நம் அன்பின் பற்றாக்குறையை வேதனையுடன் வருந்தும் நேரமாக இருக்கும், அதே நேரத்தில் பரலோகத்தில் கடவுளின் அன்பின் முழுமைக்குள் நுழைய மற்றவர்களிடம் நம் அன்பை ஆவலுடன் மேம்படுத்தும். அதுவரை, நம் வாழ்க்கையை குறைவான வேதனையுடன் சுத்திகரிக்க, இங்கேயும் இப்போதும் நமக்கு தினசரி வாய்ப்புகள் உள்ளன. நாம் மற்றவர்களை எவ்வளவு நன்றாக நேசிக்கிறோம் என்பதை மேம்படுத்த தினமும் நமக்கு சோதனைகள் வழங்கப்படுகின்றன.


எனவே, உங்கள் ஆசிரியராகவும், உங்கள் அதிகாரம் அளிப்பவராகவும், உங்கள் பரிசுத்தத்தின் மூலாதாரமாகவும் இருக்கும் பரிசுத்த ஆவியானவரிடம், நீங்கள் கிறிஸ்துவைப் போல ஆக உதவும்படி தினமும் கேளுங்கள். கிறிஸ்து அவர்களை நேசித்தது போல, நீங்கள் அனைவரையும் நேசிக்க உதவும்படி பரிசுத்த ஆவியிடம் கேளுங்கள்.


இந்த ஆன்மீகப் பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம், மற்றவர்களுடன் பழகுவதில் ஒரு புதிய மகிழ்ச்சியையும், உற்சாகமான ஆர்வத்தையும் பெறுவீர்கள். நீங்கள் கடவுள் மீது அதிக அன்பை உணருவீர்கள், மேலும் அவர் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை மிக நெருக்கமாக அனுபவிப்பீர்கள்.

© by Terry A. Modica, Good News Ministries


Friday, July 12, 2019

ஜூலை 14 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை 14 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Deuteronomy 30:10-14
Ps 69:14,17,30-31,33-34,36-37 or Ps 19:8-11
Colossians 1:15-20
Luke 10:25-37
லூக்கா நற்செய்தி
நல்ல சமாரியர்
25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

26அதற்கு இயேசு
திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?”
 என்று அவரிடம் கேட்டார்.

27அவர் மறுமொழியாக,
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக
என்று எழுதியுள்ளதுஎன்றார்.

28இயேசு
சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்
 என்றார்.
29அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.

30அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: 
ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

31குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.

32அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

33ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.

34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.

35மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்என்றார்.
36
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?”
 என்று இயேசு கேட்டார்.

37அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரேஎன்றார். இயேசு
நீரும் போய் அப்படியே செய்யும்
என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய  நற்செய்தி: நாம் கடவுளை அன்பு  செய்தோமானால்,  இயற்கையாகவே   மற்றவர்கள் மேல் நாம் கொள்வோம் , அதனால் நமக்கு சில இழப்புகள்   ஏற்பட்டாலும்,நாம் அவர்கள் மேல் அக்கறை கொள்வோம் .

இந்த உலக கவலையை போக்க போதுமான அன்பு உள்ளது

அன்பிற்கு  எதிர்பதம் வெறுப்பு அல்ல. அது அக்கறையின்மை:  பிறரின் தேவையை நிராகரிப்பது,  அக்கறையற்று  இருப்பது, ஒருவரின் வேதனையை அறிந்தும், அதனை போக்க நம்மால் முடிந்தாலும், எதுவும் செய்யாமல் இருப்பது. இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், நல்ல சமாரியனின் உவமையை இயேசு நமக்கு தருகிறார். அதன் மூலம் முழு மனதுடன் நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும் என்றும், முழு சக்தியுடனும், முழு உள்ளத்தோடும், கடவுளை அன்பு செய்யும் போது , கண்டிப்பாக மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வோம்.புதியவர்களுக்கு, நமக்கு தெரியாதவர்களுக்கும், யாருக்கு உதவக்கூடாதோ அவர்களுக்கும், நம் உதவியால், நமக்கு சில இழப்புகள் ஏற்பட்டாலும்,கண்டிப்பாக உதவி செய்வோம். அவர்கள் மேல் அக்கறை கொள்வோம்.
கிறிஸ்துவின் மூலம் நம்மால், இந்த உலகை மாற்ற முடிந்தாலும், பெரும்பாலான கிறிஸ்தவர்களாகிய நாம்  எந்த தியாகம் செய்யாமலும், மற்றவர்கள் மேல் அக்கறை கொள்ளாமல் இருப்பதாலும் தான், இந்த உலகில் அதிக பிரசினைகள் இங்கே இருந்து கொண்டு இருக்கிறது. நம் வேலை செய்யும் இடத்திலும்,  குடும்பத்திலும் ஏற்படும் பல பிரச்சினைகள் அகலாமல் இருக்க காரணமே நம் அருகில் உள்ள கிறிஸ்தவர்கள் யாரும் முழுமையான அன்பை கடவுள் மேல் கொள்ளாமல் ,மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வதில்லை. நாம் அனைவருமே முழு அக்கறை எப்போதும் கொள்வதில்லை.
நீங்கள் எந்த அளவிற்கு கடவுள் மேல் அன்பு வைத்துள்ளீர்கள்? நீங்கள் மற்றவர்களுக்காக எந்த அளவிற்கு தியாகம் செய்ய  தயாராய் இருப்பது தான் இதற்கான பதில் உள்ளது. இன்றைய உவமையின் மூலம் இயேசு கற்பித்த உண்மையான அன்பின் இலக்கணம் எது? இயேசுவின் வாழ்வும் , அவர் கூறிய இந்த உவமையும் தான் அன்பின் அடையாளம்.
நாம்  யாருமே  கடவுளை முழுமையாக  அன்பு செய்வதில்லை. உத்தரிக்கிற ஸ்தலத்தில் தான் நாம் முழு அன்பு  செய்யவில்லை  என்று உணர்ந்து , அதற்காக வருந்தி, பல துன்பங்கள் அடைந்து,  இன்னும் நம்மை ஆழ்ந்த அன்பில் ஆழ்த்தி முழுமையான அன்போடு கடவுளின் பரலோகத்தில் செல்வோம். அது வரை ஒவ்வொரு நாளும், நம் வாழ்வை மெருகேற்றி கொள்ள பல வாய்ப்புகள் வரும். (சிறு வலியோடு நாம் ஏற்று கொள்வோம்). ஒவ்வொரு நாளும் நாம் மற்றவர்களை அன்பு செய்ய நமக்கு பல சோதனை நிகழ்வுகள் நடைபெறும்.
தினமும் பரிசுத்த ஆவியிடம், (உங்கள் போதகர், உங்களுக்கு ஆற்றல் கொடுப்பவர், உங்கள் பரிசுத்தத்தின் உற்று ) நீங்களும் கிறிஸ்துவை போல மாற்ற வேண்டிக்கொள்ளுங்கள். கிறிஸ்து மற்றவர்களை எப்படி அன்பு செய்கிறாரோ அதே போல நீங்களும் அன்பு செய்யவேண்டும் என்று பரிசுத்த ஆவியிடம் வேண்டி கொள்ளுங்கள்.
இந்த ஆன்மிக பயிற்சியை தினமும் நாம்  செய்யும்பொழுது,நீங்கள்  புதிய சந்தோசத்தை பெறுவீர்கள், மேலும் மற்றவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி  நடத்த வேண்டும் என்றும் நாம் அதிகம் அனுபவம் பெறுவோம். மேலும், கடவுள் மேல் இன்னும் அன்பு செலுத்துவோம். அதன் மூலம் இன்னும் கடவுளோடு நெருங்குவோம்.
© 2019 by Terry A. Modica



Sunday, July 10, 2016

ஜூலை 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
லூக்கா நற்செய்தி
நல்ல சமாரியர்

25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

26அதற்கு இயேசு
திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?
 என்று அவரிடம் கேட்டார்.
27அவர் மறுமொழியாக,
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக
என்று எழுதியுள்ளது என்றார்.

28இயேசுசரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்
 என்றார்.
29அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டார்.

30அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: 
ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

31குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.

32அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

33ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.

34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.

35மறுநாள் இருதெனாரியத்தைஎடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்என்றார்.
36
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?”
 என்று இயேசு கேட்டார்.

37அதற்கு திருச்சட்ட அறிஞர், அவருக்கு இரக்கம் காட்டியவரே என்றார். இயேசு
நீரும் போய் அப்படியே செய்யும்
 என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இந்த உலகை குணப்படுத்த தேவையான அன்பு இருக்கிறதா ?

அன்பிற்கு எதிர்பதம் வெறுப்பு அல்ல, அக்கறை இன்மை தான் அன்பிற்கு எதிரானது, ஒருவரின்  தேவையை அறிந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பது, அக்கறையுடன் எதனையும் அணுகாமல் இருப்பது. துன்பத்தை போக்க நம்மால் ஏதாவது  செய்ய முடிந்தும், நாம் எதுவும் செய்யாமல் இருப்பது எல்லாம் அன்பிற்கு எதிரானது. இன்றைய நற்செய்தியில் இயேசு நல்ல சமாரியனின் கதையை உவமையாக கூறுகிறார் . முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கொள்ளும் பொழுது, கண்டிப்பாக நாம் மற்றவர்களை அன்பு செய்வோம். அவர்கள் நமக்கு தெரியாதவர்களிடம் கூட நாம் அன்பு கொள்வோம். மேலும் நமக்கு தீங்கு செய்தவர்களிடம் அன்பு காட்டுவோம்.   
இன்றைய உலகில் உள்ள நிறைய பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு நம்மை போன்றவர்கள் கிறிஸ்துவின் பின் செல்பவர்கள் , அந்த பிரச்சினைகளின் மேல் அக்கறை கொள்ளாமல் இருப்பதே ஆகும். கிறிஸ்து அனைத்தையும் மாற்றும்  ஆற்றல் கொண்டவர், அதே ஆற்றலை நமக்கும் கொடுத்துள்ளார். ஆனால் நாம் சொந்த வேளைகளில் நாம் நேரத்தை செலவிடுகிறோம். நமது குடும்பத்தில் , வேலை இடத்தில், பங்கு கோவிலில் நடக்கும் சோதனைகள், துன்பங்கள், மற்றும் பாதிப்புகள்  எல்லாம் சரியாகிவிடும், எப்போது ?, கிறிஸ்தவர்கள் அனைவரும் அன்புடன் , மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு சேவை செய்யும்போது நடக்கும்.
நீங்கள் கடவுளை எவ்வளவு அன்பு செய்கிறீர்கள் ? இதற்கான பதில் : மற்றவர்களை அன்பு செய்ய நீங்கள் எந்த அளவிற்கு தியாகம் செய்யம் தயாராய் இருக்கிறீர்கள் , நம் அருகிலுள்ள சகோதரர்களை அன்பு செய்வதில் தான் இயேசுவின் அன்பு இருக்கிறது. இதனை தான் இயேசு அவர் வாழ்விலும் , இந்த உவமையிலும் சொல்கிறார்.
நம்மில் யாருமே கடவுளை முழுதும் அன்பு செய்வதில்லை. உத்திரிக்கிற ஆத்மா ஸ்தலத்தில், நாம் முழுமையான அன்பு செய்யாமல் இருந்ததற்கு வருந்துவோம், அங்கேயே முழு அன்பை மற்றவர்கள் மேல் காட்ட , நாம் முயற்சி செய்து, கடவுளின் முழுமையை மோட்சத்தில் அடைவோம். அது வரைக்கும் இந்த உலகில், நமக்கு கிடைக்கும் அனுதின வாய்ப்பில் நமது வாழ்வை தூய்மையாக்கி , கடவுளின் அன்பில் நிலைத்திருபோம். தினமும், நாம் மற்றவர்களை எவ்வளவு அன்பு செய்கிறோம் என்பதற்கு பல சோதனைக்கால காத்திருக்கின்றன. அதன் மூலம் நாம் இன்னும் பலரை அன்பு செய்ய பயில்வோம்.
 அதனால், நமது ஆசிரியர், கரு, பரிசுத்தத்தின் ஊற்று, நமக்கு ஆற்றல் கொடுப்பவருமான பரிசுத்த ஆவியை தினமும் கேளுங்கள், கிறிஸ்துவை போல நீங்களும் மாற அவரிடம் உதவி வேண்டுங்கள், கிறிஸ்து மற்றவர்களை அன்பு செய்வது போல நீங்கள் அன்பு செய்ய பரிசுத்த ஆவியின் உதவியை ஆலோசனையை கேளுங்கள்.
இந்த பரிசுத்த பயிற்சியை தொடர்ந்து செய்யும்பொழுது , நமக்கு மிக பெரிய மகிழ்ச்சியும் சந்தோசமும் வரும், மேலும் மற்றவர்களுடன் நாம் அன்புடன் கையாள நமக்கு நன்றாக தெரிய வரும். கடவுளின் மிக பெரிய அன்பை நாம் உணர்ந்து நம் மேல் இன்னும் அதிகமாக நெருக்கமாக அவர் அன்புடன் நாம் கலப்போம்.


© 2016 by Terry A. Modica