மார்ச் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
Jer 31:31-34
Ps 51:3-4, 12-15
Heb 5:7-9
John 12:20-33
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 12
கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல்
20 வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.21 இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ' ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள்.22 பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.23 இயேசு அவர்களைப் பார்த்து, ' மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.25 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் ' என்றார்.
மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும்
27 மேலும் இயேசு, ' இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ' தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.28 தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் ' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ' மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது.29 அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ' அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், ' அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர்.30 இயேசு அவர்களைப் பார்த்து, ' இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் ' என்றார்.33 தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)
இயேசு நம்மை எவ்வழியில் அழைத்து செல்கிறாரோ அந்த வழியில் செல்ல நமக்கு கஸ்டமாக இருந்தாலும் நாம் அவரை நம்பி, விசுவாசித்தோமானால் , நாம் அதனை செய்வோம்.
நாம் , நமது வாழ்வையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். (அது என்னவெனில், நமது சொந்த விருப்பங்கள், நிகழ்ச்சிகள், எண்ணங்கள், மற்ற நேரங்களில் நாம் செய்யும் வேலைகள் ) அனைத்தையும் விட தயாராக இருக்க வேண்டும். அப்பொழுது, நாம் கிறிஸ்துவோடு இனைந்து, இறைசேவையாற்ற முடியும். எனினும், நாம் இழப்பை விருப்ப வேண்டும் என்பதில்லை.
இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின் தியாகத்தை/சிலுவையில் மரணத்தை நினைத்து பதட்டப்பட்டார் என்று சொல்கிறது. ஆமாம், இயேசுவும் சங்கடமாக நினைத்தார், கடவுளோ அவரை மகிமைபடுத்தினார்.
கடவுளின் வழியையும், கடவுளின் அன்பையும் நமக்கு வெளிப்படுத்தி நம்மையெல்லாம் மோட்சத்திற்கு அழைத்து செல்லவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இப்போது, நாம் அவரை பின்செல்வதால், நாமும், கடவுளின் அன்பை நம்மை சுற்று உள்ளவர்களிடத்தில் வெளிப்படுத்த அழைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளால் தயார்படுத்த பட்டிருக்கிறோம். நாம் கடவுளின் அன்பை வெளிப்படுத்தி, அதன் மூலம் இயேசு அவர்களை மோட்சத்திற்கு அழைத்து செல்ல்கிரார். இது தான் நமது கடமை, இறைசேவை, திருச்சபையில் உள்ள ஒவ்வொருவரும், குருக்களும், நாமும் செய்ய வேண்டும்.
ஞாணஸ்நாண அருட்சாதனம் நம்மை இந்த அழைப்பிற்கு தொடங்கி வைக்கிறது. உறுதிபுசுதல் அருட்சாதனம், இச்சேவையை நம்மிடம் ஒப்படைக்கிறது. பாவசங்கீர்த்தனம், இறைசேவையை இன்னும் நன்றாக செய்ய நம்மை இன்னும் சுத்தபடுத்தி நம்மை இன்னும் பலமாக்குகிறது. திருமணச்சடங்குகளும், கடவுளின் அன்பு கட்டளைகளும், நமக்கு இன்னும் இறைசேவையை பிழையற்று செய்ய நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நோயாளிகளை அர்ச்சிப்பது, அவர்களை குணமாக்குவது, கிறிஸ்துவின் இறைசேவையை செய்ய சாட்சியாக இருக்கிறது. திவ்ய நற்கருணை கிறிஸ்துவின் முழு பயணத்தில் நம்மை இணையவைத்து, நம் இறைசேவயை தொடர செய்கிறது.
மணம் திருந்த வைப்பது நம் ஒவ்வொரு நாளின் இறைசேவையாகும்: இயேசு அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்கிறோம், இயேசு அவர்களுக்கு என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே நாம் செய்கிறோம். நற்செய்தியை அவர்களுக்கு பரப்பி, நாம் இயேசுவைன் இறைசேவயை தொடர்கிறோம்.
இறைசேவையை செய்யும்பொழுது, நாம் தியாகம் செய்ய வேண்டும். நம்மை ஒதுக்கி வைப்பவர்கள், துன்பபடுத்துபவர்கள், மோசம் செய்தவர்கள் மேல் நாம் நல்லது செய்ய வேண்டும்.
இது தான் நாம் கிறிஸ்துவோடு இனைந்து இருப்பது. நம் நோக்கமும் கூட. நாம் இதனை செய்ய ஆசைபட தேவையில்லை ஆனால் நாம் செய்ய வேண்டிய கடமை.
கடவுள் இதற்காக நம்மை மகிமைபடுத்துகிறார். இயேசுவை மகிமைபடுத்துவதை போல, நம்மையும், கடவுள் அவரது முழு இரக்கத்தினாலும், அன்பினாலும், நம்மை மகிபடுத்துகிறார். அன்பளிப்பும், வெகுமதியும் நமக்கு தருகிறார்.
நமது இறைசேவையில் பல தொந்தரவுகளை , கஷ்டங்களை சந்திப்பது சாதாரண விசயம் ஆகும். கடவுள் தான் நம்மை ஒவ்வொரு முறையும் எழுப்பி தாங்கி கொள்கிறார். துன்பத்திற்கு பிறகு சந்தோசமும், வெற்றியும் உண்டு.
© 2012 by Terry A. Modica
Showing posts with label யோவான் (அருளப்பர்) நற்செய்தி கிரேக்கர். Show all posts
Showing posts with label யோவான் (அருளப்பர்) நற்செய்தி கிரேக்கர். Show all posts
Friday, March 23, 2012
Subscribe to:
Posts (Atom)