ஜூலை 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Wisdom 12:13, 16-19 - சா ஞா 12 : 13, 16 - 19
Ps 86:5-6, 9-10, 15-16
Rom 8:26-27 - உரோ 8 : 26, 27
Matt 13:24-43 - மத் 13 : 24 – 43
நற்செய்தி வாசகம்
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன.
நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, `ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், `இது பகைவனுடைய வேலை' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், `நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' என்று கேட்டார்கள். அவர், `வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், `முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்' என்று கூறுவேன்'' என்றார்.
இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.''
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ``பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.''
இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேச வில்லை. ``நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவர் அருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர்.
அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு;அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''
(thanks to arulvakku.com)
அமெரிக்க பிஷப்கள் எல்லாம், இணைந்து கத்தோலிக்க மணமாற்றத்தை எப்படி செய்தல் வேண்டும் என்று வறையறுத்துள்ளனர். அதன் தலைப்பு "செல்லுங்கள், சீடர்களை உருவாக்குங்கள்".("Go and Make Disciples." ) இது மூன்று முக்கிய கட்டங்களை குறிப்பிடுகிறது.
1) உங்கள் விசுவாசத்தை நன்கு வளர்த்திடுங்கள்:
2) மற்றவர்களை மணமாறுதலுக்கு அழைத்திடுங்கள்
3) கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றிடுங்கள்
இன்றைய நற்செய்தியில், இயேசுவும் இதனையே மணமாற்றத்திற்கான நோக்கங்களாக உவமைகளாக சொல்கிறார்.
1) உங்கள் விசுவாசத்தை நன்கு வளர்த்திடுங்கள்: இறையரசில், நாமெல்லாம், களைகளுக்கிடையே உள்ள நல்ல கோதுமை பயிர்களாக இருக்கிறோம். நாம் பரிசுத்த வாழ்வில், மிக சரியாக வளரவில்லையென்றால், களைகள் நம்மை விட அதிகமாக வளர்ந்துவிடும், நம்மை நசுக்கிவிடும், உங்கள் பரிசுத்த வாழ்விலிருந்து களைகளை அகற்ற என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையற்றோரிடமும், சாத்தான் வழி செல்பவர்களிடமும் இடையே நீங்கள் வாழும்பொழுது, உங்கள் விசுவாச வாழ்வு எவ்வாறு பலனடைகிறது? , உங்கள் தந்தை கடவுள் - உலகை படைத்தவர் நீங்கள் பரிசுத்த வாழ்வில் வளர, உங்களுக்கு தேவையான எல்லா ஆற்றலையும், அதிகாரத்டையும் வழங்குகிறார்.
2) மற்றவர்களை மணமாறுதலுக்கு அழைத்திடுங்கள்: இறையரசில், நாம் கடுகை போல மிகச்சிறிய அளவுடன் உள்ளோம், ஆனால் வளர்ந்த பின் எல்லோருக்கும் அதிக பலனும் நன்மையும் கிடைக்கிறது. உங்கள் விசுவாசத்தால் யாரெல்லாம் பலன் அடைகிறார்கள்? உங்கள் பரிசுத்த வாழ்வின் வளர்ச்சி, மற்றவர்கள் இயேசுவோடு இனைய எவ்வாறு அழைக்கிறது? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எல்லா ஆற்றலையும் கொடுத்து, அவர்களின் விசுவாசத்தை வளர்க்க உதவிடுகிறார். ஆனால், நீங்கள் மனமுவந்து அவர்களை இறைவனின் பரிசுத்த வாழ்வை அனுபவிக்க அழைக்க வேண்டும்.
3) கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றிடுங்கள் : இறையரசில், நாம் எல்லாம் புளிப்பு மாவை போன்றவர்கள். அதனை மற்ற மாவோடு கலந்தால், எல்லா மாவையும் புளிக்க செய்துவிடும், அதே போல, நாம் கிற்ஸ்தவர்களாக , இவ்வுலகை முன்னேற்ற என்ன செய்து கொண்டிருக்கிறோம்? உங்கள் பரிசுத்த வாழ்வு, நீங்கள் வேலை செய்யும் இடத்தில், கோவிலில், சமூகத்தில் என்ன வித்தியாசத்தை கொடுக்கிறீர்கள்? திருப்பலியில் நீங்கள் பெற்று கொள்ளும் திவ்ய நற்கருணையினால், நீங்கள் இவ்வுலகை உங்கள் நன்மைகளால் இன்னும் வளமாக்க முடியும்.
© 2011 by Terry A. Modica
Friday, July 15, 2011
Friday, July 8, 2011
ஜுலை 10, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜுலை 10, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Isaiah 55:10-11
Ps 65:10-14 (with Luke 8:8)
Rom 8:18-23
Matt 13:1-23
நற்செய்தி வாசகம்
விதைப்பவர் விதைக்கச் சென்றார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-23
அக்காலத்தில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ``விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ,அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார்.
சீடர்கள் அவர் அருகே வந்து, ``ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ``விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.
இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: `நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது;காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.' உங்கள் கண்களோ பேறுபெற்றவை;ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.''
மறையுரை
இன்றைய ஞாயிறின் நற்செய்தி, விதை விதைப்பதை பற்றி கூறுகிறது. இதிலிருந்து நாம் கற்று கொள்வது என்னவென்றால், விதைக்கப்பட்ட விதை நிலத்தில் விழுந்து பலன் தராவிட்டால், விதை விதைத்ததற்கு உண்டான முயற்சி வீனாகிவிடும். ஒவ்வொரு விதையும், அது முன்னாடி இருந்தது போல் இல்லாமல், அழிந்து வேறொரு செடியை கொடுக்க வேண்டும். அந்த விதை மண்ணோடு அழிந்து, புதிய செடியை , தண்டிலிருந்து ஆரம்பித்து, பல மடங்காக பெருகி பெரிய மரமாக பலபேருக்கு உதவக்கூடியதாக மாறும். ஆனால், விதையிலிருந்து, மரமாக ஆகும், வரை தரமான பராமரிப்பு, வேண்டிய ஊட்டசத்தும் கொடுக்க வேண்டும்.
விதை மண்ணிலேயே அழிந்து, சரியான ஊட்ட்சத்துடன் வளரும்பொழுது, அது செடியாக மரமாக வளர்ந்து, பல மடங்காக பெருகி, இயற்கையின் எல்லா வளங்களும், இதன் பலனை அடைவது தான் இதன் நோக்கமாகும்.
இயேசு உவமையை சொல்லி நாம் கேட்கும் பொழுது, நாம் அதற்கு ஆம் என்று சொல்கிறோம். நாம் நல்ல விதையாக இருந்து, நல்ல பழங்களை தருவோம் என்று இயேசுவிடம் 'ஆம்' என்று சொல்கிறோம். நாம் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைபடுவது மட்டும், நம்மை அப்படியே மாற்றிவிடாது. நமது வாழ்வின் மண்ணை, எப்படி மாற்றினால், நாம் நல்ல பழங்களை தரமுடியும் ?
இறைவாக்கினர் எசாயா வாசகத்தில், கடவுளே நல்ல விளைச்சலை தரும் மண் என்று சொல்கிறார். கடவுளும், அவர் வார்த்தைகளும், மேலும் அவர் எதையெல்லாம் விரும்புகிறாரோ அதனையெல்லாம் கொடுக்க கூடிய மண்ணாவகே கடவுள் இருக்கிறார். புனித பவுல் இரண்டாவது வாசகத்தில், துன்பப்பட்டால், தான், ஒன்றை உருவாக்க முடியும் என்று சொல்கிறார்.(விதைகள் மண்ணில் அழிந்து மீண்டும் செடியாக உருவானால் தான் பழங்களை தரமுடியும்). துன்பத்திலும், இறப்பிலும் தான் நமக்கு மீட்பு கிடைக்கும்.
நாம் மண்ணாக மாறி, கடவுள் நம்மை மாற்றியமைக்க அனுமதித்தால் மட்டுமே, நாம் உண்மையாகவே முழுதுமாக கணி தரும் மரமாக மாறமுடியும்.
© 2011 by Terry A. Modica
ஆண்டின் 15ம் ஞாயிறு
Isaiah 55:10-11
Ps 65:10-14 (with Luke 8:8)
Rom 8:18-23
Matt 13:1-23
நற்செய்தி வாசகம்
விதைப்பவர் விதைக்கச் சென்றார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-23
அக்காலத்தில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ``விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ,அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார்.
சீடர்கள் அவர் அருகே வந்து, ``ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ``விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.
இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: `நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது;காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.' உங்கள் கண்களோ பேறுபெற்றவை;ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.''
மறையுரை
இன்றைய ஞாயிறின் நற்செய்தி, விதை விதைப்பதை பற்றி கூறுகிறது. இதிலிருந்து நாம் கற்று கொள்வது என்னவென்றால், விதைக்கப்பட்ட விதை நிலத்தில் விழுந்து பலன் தராவிட்டால், விதை விதைத்ததற்கு உண்டான முயற்சி வீனாகிவிடும். ஒவ்வொரு விதையும், அது முன்னாடி இருந்தது போல் இல்லாமல், அழிந்து வேறொரு செடியை கொடுக்க வேண்டும். அந்த விதை மண்ணோடு அழிந்து, புதிய செடியை , தண்டிலிருந்து ஆரம்பித்து, பல மடங்காக பெருகி பெரிய மரமாக பலபேருக்கு உதவக்கூடியதாக மாறும். ஆனால், விதையிலிருந்து, மரமாக ஆகும், வரை தரமான பராமரிப்பு, வேண்டிய ஊட்டசத்தும் கொடுக்க வேண்டும்.
விதை மண்ணிலேயே அழிந்து, சரியான ஊட்ட்சத்துடன் வளரும்பொழுது, அது செடியாக மரமாக வளர்ந்து, பல மடங்காக பெருகி, இயற்கையின் எல்லா வளங்களும், இதன் பலனை அடைவது தான் இதன் நோக்கமாகும்.
இயேசு உவமையை சொல்லி நாம் கேட்கும் பொழுது, நாம் அதற்கு ஆம் என்று சொல்கிறோம். நாம் நல்ல விதையாக இருந்து, நல்ல பழங்களை தருவோம் என்று இயேசுவிடம் 'ஆம்' என்று சொல்கிறோம். நாம் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைபடுவது மட்டும், நம்மை அப்படியே மாற்றிவிடாது. நமது வாழ்வின் மண்ணை, எப்படி மாற்றினால், நாம் நல்ல பழங்களை தரமுடியும் ?
இறைவாக்கினர் எசாயா வாசகத்தில், கடவுளே நல்ல விளைச்சலை தரும் மண் என்று சொல்கிறார். கடவுளும், அவர் வார்த்தைகளும், மேலும் அவர் எதையெல்லாம் விரும்புகிறாரோ அதனையெல்லாம் கொடுக்க கூடிய மண்ணாவகே கடவுள் இருக்கிறார். புனித பவுல் இரண்டாவது வாசகத்தில், துன்பப்பட்டால், தான், ஒன்றை உருவாக்க முடியும் என்று சொல்கிறார்.(விதைகள் மண்ணில் அழிந்து மீண்டும் செடியாக உருவானால் தான் பழங்களை தரமுடியும்). துன்பத்திலும், இறப்பிலும் தான் நமக்கு மீட்பு கிடைக்கும்.
நாம் மண்ணாக மாறி, கடவுள் நம்மை மாற்றியமைக்க அனுமதித்தால் மட்டுமே, நாம் உண்மையாகவே முழுதுமாக கணி தரும் மரமாக மாறமுடியும்.
© 2011 by Terry A. Modica
Friday, July 1, 2011
ஜூலை 3, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜூலை 3, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு
Zec 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Rom 8:9, 11-13
Matt 11:25-30
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 11
தந்தையும் மகனும்
(லூக் 10:21 - 22)
25 அவ்வேளையில் இயேசு, ' தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ' என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்
28 மேலும் அவர், ' பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இயேசுவின் நுகத்தை சுமையை ஏற்று கொண்டதால், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கிறீர்களா? அல்லது கவலையோடு இருக்கிறீர்களா? இயேசுவின் நுகம், சுமை - அவரது வாழ்வில் வெளிப்படுத்தியது போல, சேவை செய்பவராகவும், மற்றவர்களின் மேல் அக்கறை கொண்டவர்களாகவும், தியாகமுள்ள அன்புடனும் இருப்பது தான் இயேசுவின் நுகம், சுமை ஆகும்.
எனினும், நமக்கு , பல சுய போராட்டங்கள் இருக்கிறது. நமது சொந்த சிலுவைகளை நாமே சுமக்க வேண்டியுள்ளது. பலரின் கவனம் நம் மேல் இருக்கும். அந்த சுமைகளெல்லாம் சேர்ந்து, நம்மை கிழே தள்ளும், சோர்வுற செய்யும். பிறகு ஏன் இன்றைய நற்செய்தியில், இயேசு, என் நுகம், எளிதானது, அதன் சுமைகள் அழுத்தாது என்று கூறுகிறார்.?
இயேசுவின் இறைசேவகளில் நாம் பங்கெடுக்கும்பொழுது, அது எப்படி நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ?
நமது வாழ்வின் சுமைகள் நம்மை கீழே தள்ளி விடும், ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட, அதிகமாக, நம் பொறுப்புகளை எடுத்து கொண்டு செய்கிறோம்.
அல்லது, இயேசு நம் சுமைகளை எடுத்து கொண்டவுடன், சிலுவைகளை நாம் எடுத்து கொண்டு, அதிகமாக நமது ஆற்றலை செலவிடுகிறோம். இந்த சுமைகளால், நாம் களைத்து போகும்பொழுது, கடவுள் நம்மை சோர்வுறசெய்கிறார். ஏனெனில், அவர் நம்மை எச்சரிக்கிறார். "மெதுவாக செய்யவும்!, உங்கள் வாழ்க்கையை சுலபமாக்குங்கள்!, ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள்!. ஜெபத்தில் அதிக நெரம் செலவிடுங்கள்!"
இதெல்லாம், உங்களுக்கு, கோபத்தையும், மனக்கசப்பையும் கொடுத்தால், சுலபமான வாழ்க்கை வாழ விரும்பும், உங்கள் சுய நலத்தினால் தான், உங்கள் வாழ்வு இன்னும் கடினமாகியுள்ளது என்று கடவுள் நமக்கு காட்டுகிறார்.
நமது சுய தேவைகளை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும், அதற்கு பிறகு தான் இயேசுவின் சுமையை நம்மால் எடுத்து அவர் கேட்டதை செய்ய முடியும். கிறிஸ்துவின் நுகம், நமக்கு சுமையாக இருக்கும், எப்பொழுது? கிறிஸ்துவிடமிருந்து நாம் எதையும் வாங்காமல், நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது தான். இயேசு நமக்கு என்ன தேவையோ அதனை கொடுப்பார். அவரோடு இனைந்து, நாம் மற்றவர்களுக்கு அவர்களுக்கு தேவையானதை கொடுக்கலாம். அதன் பிறகு, நமது கோபமும், மனக்கசப்பும் நம்மை விட்டு விலகிவிடும். மேலும், பரிசுத்த வாழ்வின் இன்பத்தினை , நமது செயல்கள் மூல்ம் நாம் சுவைப்போம். ஏனெனில், கிறிஸ்துவின் சுமையையும், ஆற்றலையும், சக்தியையும் நாம் இயேசுவோடு இனைந்து, அவரது சுமையையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
© 2011 by Terry A. Modica
ஆண்டின் 14ம் ஞாயிறு
Zec 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Rom 8:9, 11-13
Matt 11:25-30
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 11
தந்தையும் மகனும்
(லூக் 10:21 - 22)
25 அவ்வேளையில் இயேசு, ' தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ' என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்
28 மேலும் அவர், ' பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இயேசுவின் நுகத்தை சுமையை ஏற்று கொண்டதால், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கிறீர்களா? அல்லது கவலையோடு இருக்கிறீர்களா? இயேசுவின் நுகம், சுமை - அவரது வாழ்வில் வெளிப்படுத்தியது போல, சேவை செய்பவராகவும், மற்றவர்களின் மேல் அக்கறை கொண்டவர்களாகவும், தியாகமுள்ள அன்புடனும் இருப்பது தான் இயேசுவின் நுகம், சுமை ஆகும்.
எனினும், நமக்கு , பல சுய போராட்டங்கள் இருக்கிறது. நமது சொந்த சிலுவைகளை நாமே சுமக்க வேண்டியுள்ளது. பலரின் கவனம் நம் மேல் இருக்கும். அந்த சுமைகளெல்லாம் சேர்ந்து, நம்மை கிழே தள்ளும், சோர்வுற செய்யும். பிறகு ஏன் இன்றைய நற்செய்தியில், இயேசு, என் நுகம், எளிதானது, அதன் சுமைகள் அழுத்தாது என்று கூறுகிறார்.?
இயேசுவின் இறைசேவகளில் நாம் பங்கெடுக்கும்பொழுது, அது எப்படி நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ?
நமது வாழ்வின் சுமைகள் நம்மை கீழே தள்ளி விடும், ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட, அதிகமாக, நம் பொறுப்புகளை எடுத்து கொண்டு செய்கிறோம்.
அல்லது, இயேசு நம் சுமைகளை எடுத்து கொண்டவுடன், சிலுவைகளை நாம் எடுத்து கொண்டு, அதிகமாக நமது ஆற்றலை செலவிடுகிறோம். இந்த சுமைகளால், நாம் களைத்து போகும்பொழுது, கடவுள் நம்மை சோர்வுறசெய்கிறார். ஏனெனில், அவர் நம்மை எச்சரிக்கிறார். "மெதுவாக செய்யவும்!, உங்கள் வாழ்க்கையை சுலபமாக்குங்கள்!, ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள்!. ஜெபத்தில் அதிக நெரம் செலவிடுங்கள்!"
இதெல்லாம், உங்களுக்கு, கோபத்தையும், மனக்கசப்பையும் கொடுத்தால், சுலபமான வாழ்க்கை வாழ விரும்பும், உங்கள் சுய நலத்தினால் தான், உங்கள் வாழ்வு இன்னும் கடினமாகியுள்ளது என்று கடவுள் நமக்கு காட்டுகிறார்.
நமது சுய தேவைகளை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும், அதற்கு பிறகு தான் இயேசுவின் சுமையை நம்மால் எடுத்து அவர் கேட்டதை செய்ய முடியும். கிறிஸ்துவின் நுகம், நமக்கு சுமையாக இருக்கும், எப்பொழுது? கிறிஸ்துவிடமிருந்து நாம் எதையும் வாங்காமல், நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது தான். இயேசு நமக்கு என்ன தேவையோ அதனை கொடுப்பார். அவரோடு இனைந்து, நாம் மற்றவர்களுக்கு அவர்களுக்கு தேவையானதை கொடுக்கலாம். அதன் பிறகு, நமது கோபமும், மனக்கசப்பும் நம்மை விட்டு விலகிவிடும். மேலும், பரிசுத்த வாழ்வின் இன்பத்தினை , நமது செயல்கள் மூல்ம் நாம் சுவைப்போம். ஏனெனில், கிறிஸ்துவின் சுமையையும், ஆற்றலையும், சக்தியையும் நாம் இயேசுவோடு இனைந்து, அவரது சுமையையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
© 2011 by Terry A. Modica
Friday, June 24, 2011
ஜூன் 26, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜூன் 26, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
இயேசுவின் திரு உடல் , திரு இரத்த பெருவிழா
Deut 8:2-3, 14b-16a
Psalm 147:12-15, 19-20
1 Cor 10:16-17
John 6:51-58
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 6
மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறில், நாம் கடவுளின் திரு உடலும், திரு இரத்தமும் திருவிழாவை கொண்டாடுகிறோம். ஏனெனில் இயேசு கிறிஸ்து உண்மையாகவே திவ்ய நற்கருணையில் இருக்கிறார் என்பதை நாம் நம்புகிறோம், விசுவசிக்கிறோம்.
முதல் வாசகத்தில், தந்தை கடவுள் எப்பொழுதுமே, நமது கடினமான காலங்களில் , பாலைவனத்தில், அவர் தண்ணீரும், உணவும் தந்தது போல, நமக்கும் கொடுப்பார் என்பதை பார்க்கிறோம். நமது நம்பிக்கையற்ற வாழ்விலும், சோதனை காலங்களிலும் கூட , இஸ்ரேயலருக்கு செய்தது போல, கடவுள் நமக்கு எல்லாம் செய்வார். உண்மையான கிறிஸ்துவின் ப்ரசன்னம் மூலம், நமக்கு தேவையானவற்றை தந்தை கடவுள் கொடுக்கிறார். கிறிஸ்து நற்கருணையில் மட்டுமல்ல, பரிசுத்த ஆவியின் மூலமும் நம்மிடம் வருகிறார். பரிசுத்த ஆவியானவர், நமது ஞானஸ்நாணத்தின் மூலம் நம்மில் வந்து தங்கி நம்மை வழி நடத்தியும், நமது பரிசுத்த வாழ்வையும் வளரச் செய்கிறார்.
நற்செய்தி வாசகம், திவ்ய நற்கருணை வெறும் உணவும், திராட்சை ரசமும் அல்ல, உண்மையாகவே கிறிஸ்து தான் என்று சொல்கிறது. இந்த உணவும், இரசமும் நமக்கு எப்படி பாம்பும், தேளும், நீரும் இல்லாத பாலைவனத்தில் நமக்கு உதவப்போகிறது. இயேசு உண்மையாகவே நமது தாகத்தை தீர்க்கிறார் மேலும், நமது பசியை நீக்குகிறார். நாம் அவரை முழுமையாகவே ஏற்றுகொள்வதை போல, அவரும் நம்மை முழுதுமாக எற்றுகொள்கிறார். நாம் அவரை உள்ளிழுப்பது போல, அவரும் நம்மை அவருள் இழுத்து கொள்கிறார். இந்த இனைப்பில், நமது சோதனைகளில் வெற்றியடைகிறோம்.
இரண்டாவது வாசகம், திவ்ய நற்கருணை நாம் இயேசுவோடு இனைந்திருப்பதை இன்னும் கிறிஸ்துவின் உடலோடு ,இவ்வுலகில் உள்ள எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது என்று சொல்கிறது. அதன் மூலமாக நமக்கு தேவையானதை இறைவன் கொடுக்கிறார். இந்த இனைப்பில், எதுவெல்லாம் உயிர்ப்புள்ளதோ, அதெல்லாம் உயிர்ப்புடன் இருக்கும், எல்லா திறமைகளும், அன்பளிப்புகளும், பகிர்ந்து கொள்ளப்படுகிற பொழுது , யாரும் குறையுடன் இருப்பதில்லை. மேலும், இந்த இனைப்பில், இயேசு நமக்கு உறுதியளித்தது போல, நமக்கு விண்ணக வாழ்வு நமக்கு முழுமையாக கிடைக்க விருக்கிறது.
© 2011 by Terry A. Modica
இயேசுவின் திரு உடல் , திரு இரத்த பெருவிழா
Deut 8:2-3, 14b-16a
Psalm 147:12-15, 19-20
1 Cor 10:16-17
John 6:51-58
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 6
மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறில், நாம் கடவுளின் திரு உடலும், திரு இரத்தமும் திருவிழாவை கொண்டாடுகிறோம். ஏனெனில் இயேசு கிறிஸ்து உண்மையாகவே திவ்ய நற்கருணையில் இருக்கிறார் என்பதை நாம் நம்புகிறோம், விசுவசிக்கிறோம்.
முதல் வாசகத்தில், தந்தை கடவுள் எப்பொழுதுமே, நமது கடினமான காலங்களில் , பாலைவனத்தில், அவர் தண்ணீரும், உணவும் தந்தது போல, நமக்கும் கொடுப்பார் என்பதை பார்க்கிறோம். நமது நம்பிக்கையற்ற வாழ்விலும், சோதனை காலங்களிலும் கூட , இஸ்ரேயலருக்கு செய்தது போல, கடவுள் நமக்கு எல்லாம் செய்வார். உண்மையான கிறிஸ்துவின் ப்ரசன்னம் மூலம், நமக்கு தேவையானவற்றை தந்தை கடவுள் கொடுக்கிறார். கிறிஸ்து நற்கருணையில் மட்டுமல்ல, பரிசுத்த ஆவியின் மூலமும் நம்மிடம் வருகிறார். பரிசுத்த ஆவியானவர், நமது ஞானஸ்நாணத்தின் மூலம் நம்மில் வந்து தங்கி நம்மை வழி நடத்தியும், நமது பரிசுத்த வாழ்வையும் வளரச் செய்கிறார்.
நற்செய்தி வாசகம், திவ்ய நற்கருணை வெறும் உணவும், திராட்சை ரசமும் அல்ல, உண்மையாகவே கிறிஸ்து தான் என்று சொல்கிறது. இந்த உணவும், இரசமும் நமக்கு எப்படி பாம்பும், தேளும், நீரும் இல்லாத பாலைவனத்தில் நமக்கு உதவப்போகிறது. இயேசு உண்மையாகவே நமது தாகத்தை தீர்க்கிறார் மேலும், நமது பசியை நீக்குகிறார். நாம் அவரை முழுமையாகவே ஏற்றுகொள்வதை போல, அவரும் நம்மை முழுதுமாக எற்றுகொள்கிறார். நாம் அவரை உள்ளிழுப்பது போல, அவரும் நம்மை அவருள் இழுத்து கொள்கிறார். இந்த இனைப்பில், நமது சோதனைகளில் வெற்றியடைகிறோம்.
இரண்டாவது வாசகம், திவ்ய நற்கருணை நாம் இயேசுவோடு இனைந்திருப்பதை இன்னும் கிறிஸ்துவின் உடலோடு ,இவ்வுலகில் உள்ள எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது என்று சொல்கிறது. அதன் மூலமாக நமக்கு தேவையானதை இறைவன் கொடுக்கிறார். இந்த இனைப்பில், எதுவெல்லாம் உயிர்ப்புள்ளதோ, அதெல்லாம் உயிர்ப்புடன் இருக்கும், எல்லா திறமைகளும், அன்பளிப்புகளும், பகிர்ந்து கொள்ளப்படுகிற பொழுது , யாரும் குறையுடன் இருப்பதில்லை. மேலும், இந்த இனைப்பில், இயேசு நமக்கு உறுதியளித்தது போல, நமக்கு விண்ணக வாழ்வு நமக்கு முழுமையாக கிடைக்க விருக்கிறது.
© 2011 by Terry A. Modica
Friday, June 17, 2011
ஜூன் 19, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜூன் 19, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா
Ex 34:4b-6, 8-9
Dan 3:52-56
2 Cor 13:11-13
John 3:16-18
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 3
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)
பெந்தகொஸ்தே ஞாயிறில் நாம் பரிசுத்த ஆவி விழ கொண்டாடுகிறோம், அதன் அடுத்த ஞாயிறில், நாம் மூவொரு கடவுள் விழவை கொண்டாடுகிறோம்.
முதல் வாசகம் தந்தை இறைவன் இரக்கமும் பரிவும் கொண்டவர் என்றும், எப்படி அவர் இஸ்ரேயல் நாட்டை தந்தை போல காத்தார் என்பதையும் நமக்கு எடுத்து காட்டுகிறது. அவர் "இரக்கமும், பரிவும், கோபம் கொள்ள மிக அதிக நேரமும், நம்பிக்கையும் " கொண்டவர் என்பதை பார்க்கிறோம். -- மிகச் சரியான தந்தை -- . அவரை இப்படி பார்ப்பதில் நமக்கு மிகவும் கடினமாக இருந்தால், நமது ஆண்மாவிற்கு மருந்திட வேண்டும். நமது இவ்வுலக தந்தையிடமிருந்து, கடவுள் தந்தையை முழுமனதுடன் பிரித்து பார்க்க வேண்டும்.
இரண்டாவது வாசகம் மூன்று கடவுளையும் நமக்கு காட்டுகிறது:, இயேசுவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் நட்புறவும் நம்மோடு இருப்பதாக. இதோடு, இதனாலும், மகிழ்ச்சியாகவும், நல்ல நடத்தையோடும், மன ஒற்றுமையோடும், அமைதியோடும் நாம் வாழவேண்டும்.
இதையே மாறாக சொல்வதானால், நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்து மரணத்தை வெற்றி கொண்டார். நாம் பாவங்களை எதிர்த்து செல்ல நமக்கு தேவையான அருளை கொடுக்கிறார், மேலும் தந்தை கடவுளின் அன்பையும் கொடுத்து, நாம் ஒருவரையொருவர் அன்பு செய்ய உதவி செய்கிறார். மேலும் தூய ஆவியை கொடுத்து, நாம் பரிசுத்த கிறிஸ்தவர்களாக தொடர்ந்து வாழ உதவி செய்கிறார்.
நற்செய்தி வாசகம் கடவுளின் அன்பின் ஆழத்தை நமக்கு சொல்கிறது. அவர் நமது பாவங்களுக்காக தீர்ப்பளிக்க வரவில்லை, மாறாக, அவர் தமது மகனை கொடுத்து தீர்ப்பிலிருந்து நம்மை காப்பாற்றுகிறார். நமது பாவங்கள் நம்மை இவ்வுலக மரணத்திற்கு இட்டு செல்கிறது, ஆனால், இயேசு, நம் பாவங்களை எடுத்து கொண்டு, நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்கிறார். ஆனால், நாம் அதற்கு விருப்ப பட வேண்டும். !
© 2011 by Terry A. Modica
மூவொரு கடவுள் திருவிழா
Ex 34:4b-6, 8-9
Dan 3:52-56
2 Cor 13:11-13
John 3:16-18
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 3
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)
பெந்தகொஸ்தே ஞாயிறில் நாம் பரிசுத்த ஆவி விழ கொண்டாடுகிறோம், அதன் அடுத்த ஞாயிறில், நாம் மூவொரு கடவுள் விழவை கொண்டாடுகிறோம்.
முதல் வாசகம் தந்தை இறைவன் இரக்கமும் பரிவும் கொண்டவர் என்றும், எப்படி அவர் இஸ்ரேயல் நாட்டை தந்தை போல காத்தார் என்பதையும் நமக்கு எடுத்து காட்டுகிறது. அவர் "இரக்கமும், பரிவும், கோபம் கொள்ள மிக அதிக நேரமும், நம்பிக்கையும் " கொண்டவர் என்பதை பார்க்கிறோம். -- மிகச் சரியான தந்தை -- . அவரை இப்படி பார்ப்பதில் நமக்கு மிகவும் கடினமாக இருந்தால், நமது ஆண்மாவிற்கு மருந்திட வேண்டும். நமது இவ்வுலக தந்தையிடமிருந்து, கடவுள் தந்தையை முழுமனதுடன் பிரித்து பார்க்க வேண்டும்.
இரண்டாவது வாசகம் மூன்று கடவுளையும் நமக்கு காட்டுகிறது:, இயேசுவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் நட்புறவும் நம்மோடு இருப்பதாக. இதோடு, இதனாலும், மகிழ்ச்சியாகவும், நல்ல நடத்தையோடும், மன ஒற்றுமையோடும், அமைதியோடும் நாம் வாழவேண்டும்.
இதையே மாறாக சொல்வதானால், நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்து மரணத்தை வெற்றி கொண்டார். நாம் பாவங்களை எதிர்த்து செல்ல நமக்கு தேவையான அருளை கொடுக்கிறார், மேலும் தந்தை கடவுளின் அன்பையும் கொடுத்து, நாம் ஒருவரையொருவர் அன்பு செய்ய உதவி செய்கிறார். மேலும் தூய ஆவியை கொடுத்து, நாம் பரிசுத்த கிறிஸ்தவர்களாக தொடர்ந்து வாழ உதவி செய்கிறார்.
நற்செய்தி வாசகம் கடவுளின் அன்பின் ஆழத்தை நமக்கு சொல்கிறது. அவர் நமது பாவங்களுக்காக தீர்ப்பளிக்க வரவில்லை, மாறாக, அவர் தமது மகனை கொடுத்து தீர்ப்பிலிருந்து நம்மை காப்பாற்றுகிறார். நமது பாவங்கள் நம்மை இவ்வுலக மரணத்திற்கு இட்டு செல்கிறது, ஆனால், இயேசு, நம் பாவங்களை எடுத்து கொண்டு, நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்கிறார். ஆனால், நாம் அதற்கு விருப்ப பட வேண்டும். !
© 2011 by Terry A. Modica
Saturday, June 11, 2011
ஜுன் 12, 2011 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஜுன் 12, 2011 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு
Acts 2:1-11
Psalm 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13
John 20:19-23
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 20
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
"தந்தையே உமது ஆவியை அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பித்தருளும்." என்று இன்றைய வாசகத்தின் பதிலுரையில், நாம் ஜெபிக்கிறோம். இதனால் தான், திருச்சபை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.
பரிசுத்த ஆவியின் துனையின்றி, கிறிஸ்தவம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தழைத்து வளர்ந்திருக்க வாய்ப்பில்லை.
கிறிஸ்துவின் ஆவியின் துனையின்றி, நாம் கிறிஸ்தவர்கள் அனைவரும் இவ்வுலகில் இப்போது கிறிஸ்துவாக இருக்க முடியாது. தந்தை கடவுள் நம்மை என்ன செய்ய சொன்னாரோ அதனை செய்ய நம்மால் முடியாது.
பரிசுத்த ஆவியின் ஞாயிறு திருச்சபையின் பிறந்த நாளை கொண்டாடுகிறது, அதே போல, நமக்கு இது நமது ஆண்மீக வாழ்விற்கு பிறந்த நாளாகும். அது என்னவெனில், இந்த திருச்சபையின் உறுப்பினாராக, நாம் குழுவாக எல்லோரும் இனைந்து , நமது ஞானஸ்நாணம் நமது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை குறித்தும், உறுதிபூசுதலில், ஆயர், ஞானஸ்நாணத்தில், நமக்கு பரிசுத்த ஆவியை வழங்கியதை உறுதி படுத்தியும் இவ்விழாவை கொண்டாடுகிறோம்.
ஞான்ஸநாணத்தின் மூலமும்,உறுதி பூசுதலின் மூலமும், நாம் பெற்ற பரிசுத்த ஆவியின் திருவிழா, நாம் கடவுளின் ஆற்றலை பெற்று , பாவங்களை விட்டு நம்மால் வெளியே வரமுடியும் என்பதை இந்த பெந்த கோஸ்தே திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது. பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நம்மை சுற்றியுள்ள உலகை நம்மால் மாற்ற முடியும் என்பதையும் இவ்விழா நமக்கு நினைவூட்டுகிறது. கடவுள் எப்படி இவ்வுலகின் முகத்தை மாற்ற போகிறார்? . நம் மூலமாக!, முதலில், தந்தை கடவுள், இயேசுவிற்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, இவ்வுலகில் இயேசுவிற்கு கொடுக்க பட்ட அழைப்பை அவர் செய்து முடிக்க உதவினார். இப்போது, தந்தை கடவுள், நமக்கு பரிசுத்த ஆவியை வழங்கி, யேசு விட்ட இடத்திலிருந்து, இப்பூமியை புதுபிக்க, நம்மை தொடர செய்துள்ளார்.
இறைசேவை செய்யவோ, அல்லது தீங்கிற்கு எதிராக , நியாயத்தை பேசவோ, உங்களுக்கு தகுதி குறைவாக உள்ளது என நீங்கள் நினைத்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருப்பதே போதுமானது. பரிசுத்த ஆவியோடு உள்ள தொடர்பில், முன்னேறி செல்லுங்கள். !
© 2011 by Terry A. Modica
பரிசுத்த ஆவியின் ஞாயிறு
Acts 2:1-11
Psalm 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13
John 20:19-23
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 20
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
"தந்தையே உமது ஆவியை அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பித்தருளும்." என்று இன்றைய வாசகத்தின் பதிலுரையில், நாம் ஜெபிக்கிறோம். இதனால் தான், திருச்சபை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.
பரிசுத்த ஆவியின் துனையின்றி, கிறிஸ்தவம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தழைத்து வளர்ந்திருக்க வாய்ப்பில்லை.
கிறிஸ்துவின் ஆவியின் துனையின்றி, நாம் கிறிஸ்தவர்கள் அனைவரும் இவ்வுலகில் இப்போது கிறிஸ்துவாக இருக்க முடியாது. தந்தை கடவுள் நம்மை என்ன செய்ய சொன்னாரோ அதனை செய்ய நம்மால் முடியாது.
பரிசுத்த ஆவியின் ஞாயிறு திருச்சபையின் பிறந்த நாளை கொண்டாடுகிறது, அதே போல, நமக்கு இது நமது ஆண்மீக வாழ்விற்கு பிறந்த நாளாகும். அது என்னவெனில், இந்த திருச்சபையின் உறுப்பினாராக, நாம் குழுவாக எல்லோரும் இனைந்து , நமது ஞானஸ்நாணம் நமது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை குறித்தும், உறுதிபூசுதலில், ஆயர், ஞானஸ்நாணத்தில், நமக்கு பரிசுத்த ஆவியை வழங்கியதை உறுதி படுத்தியும் இவ்விழாவை கொண்டாடுகிறோம்.
ஞான்ஸநாணத்தின் மூலமும்,உறுதி பூசுதலின் மூலமும், நாம் பெற்ற பரிசுத்த ஆவியின் திருவிழா, நாம் கடவுளின் ஆற்றலை பெற்று , பாவங்களை விட்டு நம்மால் வெளியே வரமுடியும் என்பதை இந்த பெந்த கோஸ்தே திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது. பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நம்மை சுற்றியுள்ள உலகை நம்மால் மாற்ற முடியும் என்பதையும் இவ்விழா நமக்கு நினைவூட்டுகிறது. கடவுள் எப்படி இவ்வுலகின் முகத்தை மாற்ற போகிறார்? . நம் மூலமாக!, முதலில், தந்தை கடவுள், இயேசுவிற்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, இவ்வுலகில் இயேசுவிற்கு கொடுக்க பட்ட அழைப்பை அவர் செய்து முடிக்க உதவினார். இப்போது, தந்தை கடவுள், நமக்கு பரிசுத்த ஆவியை வழங்கி, யேசு விட்ட இடத்திலிருந்து, இப்பூமியை புதுபிக்க, நம்மை தொடர செய்துள்ளார்.
இறைசேவை செய்யவோ, அல்லது தீங்கிற்கு எதிராக , நியாயத்தை பேசவோ, உங்களுக்கு தகுதி குறைவாக உள்ளது என நீங்கள் நினைத்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருப்பதே போதுமானது. பரிசுத்த ஆவியோடு உள்ள தொடர்பில், முன்னேறி செல்லுங்கள். !
© 2011 by Terry A. Modica
Saturday, June 4, 2011
ஜூன் 5 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜூன் 5 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறின் 7ம் ஞாயிறு
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 17
இயேசுவின் வேண்டல்
1 இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்.2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.6 நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.8 ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன்.11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் எல்லா வாசகங்களும் நமக்கு சந்தோசத்தை கொடுப்பவை, ஆனால் இன்றைய பதிலுரை பாடல், வாசகங்களின் ஒருமித்த கருத்தை நமக்கு கூறுகிறது. "
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் ."
இந்த வசனத்தை நமது சுவரில் மாட்டி வைத்திருக்கலாம், நமது மேஜையில் இருக்கலாம், எல்லோருக்கும் பிடித்தமான ஒரு வசனம். ஏனெனில், நாம் இருளிலிலும், நம்பிக்கையில்லாமலும் இருக்கும்பொழுது, நம்மை இந்த வசனம் தான் தூக்கிவிடுகிறது. அல்லேலூயா!.
பல வருடங்களுக்கு முன்பு, என்னோடு வாழ்வின் முக்கியமான வசனமாக ஆனது. அதனை ஒரு போட்டாவாக தயார் செய்து எனது மேஜையில் வைத்துள்ளேன். http://gnm.org/RandomQuotes/inspire102.htm .எனக்கு மன சோர்வாக இருக்கும்பொழுது அதனை பார்த்து கொள்வேன். கடவுளின் அனைத்து வாக்குறுதிகளும், அவர் நிறைவேற்றுவார் என்பதை நாம் நம்புகிறேன். நான் எதற்காக வேண்டினேனோ அவை என்ன வந்து சேரவும், கடவுளின் நல்ல பலன்கள் நம்மை வந்து சேர , பல காலங்கள் ஆகும். இன்னும் பல நேரங்களில், முழுமையாக வந்தடையாமல் இருக்கும். ஆனால் இந்த வசனம் கடவுள் மேல் நான் கொண்ட விசுவாசத்தை இன்னும் வளர்க்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு கடவுள் இவ்வுலகில் அவர் காட்டிய மாட்சிமையை எடுத்து கூறுகிறார். இயேசு எப்படி அவரை பின் செல்பவர்கள், இயேசுவின் மேல் விசுவாசமும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பதை, அவர்களை பாராட்டி கூறுகிறார். நாம் அக்கறை கொண்டுள்ள பலர், நாம் சொல்வதை கேட்டு , நம்மில் நம்பிக்கை வைத்து நம்மை முழுதுமாக அவர்கள் ஏற்று கொள்ளும்பொழுது, நாம் எப்படி சந்தோசப்படுகிறோம்.
இப்படி யாராவது உங்கள் அன்பை, இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தை நிராகரித்தால் , நீங்கள் இயேசுவிடம் சென்று அந்த நிராகரித்த அன்பை நாம் இயேசுவிடம் கொடுபோம். நற்செய்தியில் சொல்லியிருப்பது போல, இயேசுவின் வார்த்தைகளை நாம் கேட்டு, அவர் தந்தை கடவுளிடமிருந்து தான் வந்தார் என்பதை நாம் ஏற்று கொள்கிறோம். அதன் மூலம் கடவுளின் திட்டத்தில் நாம் நம்பிக்கை வைக்கிறோம். இயேசு உங்களுக்காக வேண்டிகொள்கிறார். கூடிய விரைவில், நல்ல விசயங்களை , ஆண்டவரின் நலன்களை இந்த பூமியில் கான்பீர்கள்
© 2011 by Terry A. Modica
ஈஸ்டர் ஞாயிறின் 7ம் ஞாயிறு
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 17
இயேசுவின் வேண்டல்
1 இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்.2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.6 நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.8 ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன்.11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் எல்லா வாசகங்களும் நமக்கு சந்தோசத்தை கொடுப்பவை, ஆனால் இன்றைய பதிலுரை பாடல், வாசகங்களின் ஒருமித்த கருத்தை நமக்கு கூறுகிறது. "
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் ."
இந்த வசனத்தை நமது சுவரில் மாட்டி வைத்திருக்கலாம், நமது மேஜையில் இருக்கலாம், எல்லோருக்கும் பிடித்தமான ஒரு வசனம். ஏனெனில், நாம் இருளிலிலும், நம்பிக்கையில்லாமலும் இருக்கும்பொழுது, நம்மை இந்த வசனம் தான் தூக்கிவிடுகிறது. அல்லேலூயா!.
பல வருடங்களுக்கு முன்பு, என்னோடு வாழ்வின் முக்கியமான வசனமாக ஆனது. அதனை ஒரு போட்டாவாக தயார் செய்து எனது மேஜையில் வைத்துள்ளேன். http://gnm.org/RandomQuotes/inspire102.htm .எனக்கு மன சோர்வாக இருக்கும்பொழுது அதனை பார்த்து கொள்வேன். கடவுளின் அனைத்து வாக்குறுதிகளும், அவர் நிறைவேற்றுவார் என்பதை நாம் நம்புகிறேன். நான் எதற்காக வேண்டினேனோ அவை என்ன வந்து சேரவும், கடவுளின் நல்ல பலன்கள் நம்மை வந்து சேர , பல காலங்கள் ஆகும். இன்னும் பல நேரங்களில், முழுமையாக வந்தடையாமல் இருக்கும். ஆனால் இந்த வசனம் கடவுள் மேல் நான் கொண்ட விசுவாசத்தை இன்னும் வளர்க்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு கடவுள் இவ்வுலகில் அவர் காட்டிய மாட்சிமையை எடுத்து கூறுகிறார். இயேசு எப்படி அவரை பின் செல்பவர்கள், இயேசுவின் மேல் விசுவாசமும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பதை, அவர்களை பாராட்டி கூறுகிறார். நாம் அக்கறை கொண்டுள்ள பலர், நாம் சொல்வதை கேட்டு , நம்மில் நம்பிக்கை வைத்து நம்மை முழுதுமாக அவர்கள் ஏற்று கொள்ளும்பொழுது, நாம் எப்படி சந்தோசப்படுகிறோம்.
இப்படி யாராவது உங்கள் அன்பை, இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தை நிராகரித்தால் , நீங்கள் இயேசுவிடம் சென்று அந்த நிராகரித்த அன்பை நாம் இயேசுவிடம் கொடுபோம். நற்செய்தியில் சொல்லியிருப்பது போல, இயேசுவின் வார்த்தைகளை நாம் கேட்டு, அவர் தந்தை கடவுளிடமிருந்து தான் வந்தார் என்பதை நாம் ஏற்று கொள்கிறோம். அதன் மூலம் கடவுளின் திட்டத்தில் நாம் நம்பிக்கை வைக்கிறோம். இயேசு உங்களுக்காக வேண்டிகொள்கிறார். கூடிய விரைவில், நல்ல விசயங்களை , ஆண்டவரின் நலன்களை இந்த பூமியில் கான்பீர்கள்
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Posts (Atom)