ஜனவரி 15, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 2ம் ஞாயிறு
1 Sam 3:3b-10, 19
Ps 40:2, 4, 7-10
1 Cor 6:13c-15a, 17-20
John 1:35-42
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
முதல் சீடர்களை அழைத்தல்
35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். 39 அவர் அவர்களிடம், ' வந்து பாருங்கள் 'என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்' என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இராயப்பரிடம் இயேசு என்ன கேட்டாரோ, அதையே நம்மிடமும்: "'என்ன தேடுகிறீர்கள்?'" என்று கேட்கிறர். நீங்கள் ஜெபம் செய்யும் பொழுதும், சிலுவையை உற்று நோக்கும்பொழுதும், இயேசுவின் திரு உருவ படத்தை பார்க்கும்பொழுதும், நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?
இயேசு சொல்கிறார்: "வந்து பாருங்கள்!" , வந்து எதனை பார்ப்பது? அவரின் நோய் குணமாக்கும் ஆற்றல், நமது ஜெபத்திற்கான பதிலாக நமக்கு தரும் கொடைகளையா? தெய்வீக ஆற்றலையா? நாம் இதையெல்லாம் தேடுவது, நம்மிடம் இவை இல்லை என்பதலா ?
தந்தை கடவுள் கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் இயேசு பூர்த்தி செய்பவராக இருந்தார். முழு அன்போடும், முழு இரக்கத்தோடும் , தெய்வீக குணமளிப்பவராகவும் , நமது ஜெபத்திற்கெல்லாம், தந்தையிடம் எடுத்து செல்பவராகவும், நமக்கு உண்மையாகவே தேவையான எல்லாவற்றிற்குமாக இயேசு இருக்கிறார். பிறகு ஏன் நமக்கு இன்னும் ஏதோ தேவையாக இருக்கிறது? ஏன் நமது வாழ்வு இன்னும் முழுமையாக இல்லை? ஏன் நமது ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை.?
இதற்கு எல்லாம் பதில், இராயப்பர், இயேசுவை பின் சென்ற பின் என்ன நடந்ததோ அதன் மூலம், நமக்கு கிடைக்கிறது. கடவுளின் அழைப்பிற்கு சாமுவேல் என்ன பதில் சொன்னாரோ : "இதோ! அடியேன், உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்பது தான் பதில்.
இயேசுவின் தெய்வீக செயல்களை கண் முன்னே பார்க்கும் பாக்கியம் இராயப்பருக்கு கிடைத்தது. தாமாகவே கடவுளின் அன்பை , இயேசுவின் கண்கள் மூலம், இராயப்பர் அனுபவித்தார். இயேசுவின் குரலில் இரக்கத்தையும், இயேசுவின் சிரிப்பில் மன்னிப்பையும் இராயப்பர் உணர்ந்தார்.
இதெல்லாம் இருந்தும், இராயப்பர் என்ன தேடி வந்தாரோ, அதனை உண்மையாகவே கண்டு புடிக்க வில்லை. இராயப்பர் எப்படி குழப்பமாகவும், முடிவெடுக்க முடியாமலும் இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இயேசு உயிரோடு இருந்த வரை இராயப்பர் இயேசுவின் முழுமையை முழுதாக உணரவில்லை. கிறிஸ்துவின் அழைப்பை முதல் திருச்சபைக்கு தலைமை ஏற்க இராயப்பர் இயேசு இறந்த பிறகு ஏற்று கொண்டார்.
இதே தான் நமக்கும், இயேசுவின் உண்மையான, கண்களையும், அவரது குரலையும், இன்னும் பார்க்காமால் இருந்தால், நாம் எதனை தேடுகிறோமோ, அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும்பொழுது, நாம் அதனை கண்டுகொள்வோம். ஏன்? இவையெல்லாவற்றையும், நம்மொடு வைத்திருந்தோம், அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது தான், நம்மிடம் இருப்பதை நாம் உணர்கிறோம். இது தான் தெய்வசெயலாக, : "இதோ! அடியேன், உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்று கூறுகிறோம்.
© 2012 by Terry A. Modica
Saturday, January 14, 2012
Friday, January 6, 2012
ஜனவரி 8, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜனவரி 8, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்துவின் ஞாணஸ்நானம்
Isaiah 42:1-4,6-7 or Isaiah 55:1-11
Ps 29:1-4,9-10 or Isaiah 12:2-6
Acts 10:34-38 or 1 John 5:1-9
Mark 1:7-11
மாற்கு நற்செய்தி
அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
(thanks to www.arulvakku.com)
ஏன் இயேசுவுக்கு ஞாணஸ்நாணம் கொடுக்கப்பட்டது? அவருக்கு பாவ மன்னிப்பு தேவையில்லையே? ஏன்,? இயேசு ஏதாவது செய்தாரா? நாம் பாவங்களிலிருந்து நம்மை காப்பாற்ற நமக்காக சிலுவையில் இறந்தார்! இன்னும் இதைவிட இயேசுவுக்கு அதிகம் இருந்தது.
இயேசுவே அவராக பாவிகளோடு இணைத்து கொண்டார். முதலில் நம்மில் ஒருவராக பணிவுடன் நம்மோடு இணைந்து கொண்டார், சாதாரண மனிதனாக நமக்குள்ள தேவைகளை போல, அவரும் வாழ்ந்தார். நமக்கு ஞாணஸ்நாணம் கொடுக்கும்பொழுது, தண்ணீரில் கிறிஸ்து நம்மில் வரத்தான், இயேசுவும் தண்ணீரில் ஞாண்ஸ்நாணம் பெற்று கொண்டார். நம் தண்ணீர் ஞாணஸ்நாணத்தால், நாம் புது வாழ்வை தொடங்கி, பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நித்திய வாழ்வில் இணையலாம்.
நாம் யார் என்பதை இயேசுவும் ஒவ்வொரு முறையும் அவர் நமக்கு எடுத்து காட்டும் செயல்களிலும், முன் மாதிரியாகவும் இருந்தார். நாம் கடவுளின் குழந்தைகளாகவே படைக்கபட்டிருக்கிறோம். இயேசுவிற்கு ஞாணஸ்நாணம் கொடுக்கும்பொழுது, பரிசுத்த ஆவி இறங்கி வந்தார், ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' அப்பொழுது, கடவுள் இவ்வாறு கூறினார். இதே மாதிரி நம் ஒவ்வொருவர் ஞாணஸ்நாணத்திலும் நடக்கும் என்பதை இயேசு அன்று நமக்கு காட்டினார்,
பரிசுத்த ஆவி உங்கள் மேலும் இறங்கி வந்தார் , மேலும் கடவுள் "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று சொல்வார்.
ஞாணஸ்நாணம் தண்ணீர்தான் கடவுளின் கருவறையாக இருந்து , நாம் அவரின் குடும்பத்தில் மீண்டும் பிறந்து , அவரது இறைசேவையில் நாம் இணைகிறோம். தீர்த்த நீரை எடுத்து நாமே சிலுவை இட்டுக் கொள்ளும்பொழுது , நாம் நமது ஞாணஸ்நாணத்தை மீண்டும் புதுபித்து கொள்கிறோம்.
யோர்தான் ஆற்றில், இயேசு சாதாரண வாழ்விலிருந்து, இறைசேவை வாழ்விற்காக மீண்டும் பிறந்தார். நமக்கும் ஞாணஸ்நாணம் மறுபிறப்பை கொடுக்கிறது. உங்கள் வாழ்வில் நீங்கள் மறு பிறப்பை எடுக்கும்போது, நீங்கள் மணம் வருந்தி, மன்னிப்பை பெற வேண்டுமா? கடவுள் உங்கள எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ, அதற்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும். இறை சேவைக்கும் நம்மை ஆயத்தமாக்கி கொள்ள வேண்டும்.
திருச்சபையின் இவ்வருட வாழ்வை தொடங்கும்போது, நாம் நமது ஞாணஸ்நாண மறுபிறப்பில், நமது பொறுப்பை உறுதி செய்து, நம்மையே சுத்த படுத்தி கொண்டு, பரிசுத்த வாழ்விலும், இறைசேவையிலும், நாம் கிறிஸ்துவை பின் செல்பவர்களாக :
சாத்தானை எதிர்க்கிறீர்களா?
சாத்தானின் செயல்களை எதிர்க்கிறீர்களா?
சாத்தானின் பொய் வாக்குறுதிகளை எதிர்க்கிறீர்களா?
கடவுளை விசுவசிக்கிறீர்களா?
எல்லாம் வல்ல கடவுள், இப்பூமியையும் , வானத்தையும் படைத்த கடவுளை ஏற்று கொள்கிறீர்களா?
தந்தை கடவுளின் ஒரே மகனான கிறிஸ்துவை நம்புகிறீர்களா? கன்னி மரியாளின் மூலம் பிறந்தவரும், சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, நல்லடக்கம் செய்யபட்டு, மீண்டும் உய்ரித்தெழுந்து, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்து இருக்கும் கிறிஸ்துவை விசுவசிக்கீறீர்களா?
பரிசுத்த ஆவியை நம்புகிறீர்களா? பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை நம்புகிறீர்களா? புனிதர்களின் பட்டத்தை நம்புகிறீர்களா? பாவ மன்னிப்பை விசுவசிக்கிறீர்களா ? மறு பிறப்பை நம்புகிறீர்களா? நித்திய வாழ்வை நம்புகிறீர்களா?
இந்த ஜெபத்தை பின் வருமாறு சொல்லுங்கள்:
அன்பு கடவுளே, நாம் பாவி, உன்னையே என் வாழ்வில் முதல்வனாக வைக்க பல்வேறு சமயங்களில் மறந்தும் ஒதுக்கியும் வைத்து விடுகிறேன். என்னை மன்னியும், என்னை மாற்றும், என்னை புதுப்பித்தருளும், உணமையாகவே, நீங்கள் என் கடவுளாக வாழ்நாள் முழுது இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இயேசு அவரது வாழ்வை தந்தையின் கைகளில் சமர்பித்தது போல், யோவான் ஞாணஸ்நாணத்தில் தன்னை அர்ப்பணித்தது போல, நானும் செய்கிறேன். என்னையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன். ஆமென்!.
கடவுள் இதற்கு மறுமொழியாக:
' என் அன்பார்ந்த மகன்/மகழ் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று சொல்வார்.
© 2011 by Terry A. Modica
கிறிஸ்துவின் ஞாணஸ்நானம்
Isaiah 42:1-4,6-7 or Isaiah 55:1-11
Ps 29:1-4,9-10 or Isaiah 12:2-6
Acts 10:34-38 or 1 John 5:1-9
Mark 1:7-11
மாற்கு நற்செய்தி
அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
(thanks to www.arulvakku.com)
ஏன் இயேசுவுக்கு ஞாணஸ்நாணம் கொடுக்கப்பட்டது? அவருக்கு பாவ மன்னிப்பு தேவையில்லையே? ஏன்,? இயேசு ஏதாவது செய்தாரா? நாம் பாவங்களிலிருந்து நம்மை காப்பாற்ற நமக்காக சிலுவையில் இறந்தார்! இன்னும் இதைவிட இயேசுவுக்கு அதிகம் இருந்தது.
இயேசுவே அவராக பாவிகளோடு இணைத்து கொண்டார். முதலில் நம்மில் ஒருவராக பணிவுடன் நம்மோடு இணைந்து கொண்டார், சாதாரண மனிதனாக நமக்குள்ள தேவைகளை போல, அவரும் வாழ்ந்தார். நமக்கு ஞாணஸ்நாணம் கொடுக்கும்பொழுது, தண்ணீரில் கிறிஸ்து நம்மில் வரத்தான், இயேசுவும் தண்ணீரில் ஞாண்ஸ்நாணம் பெற்று கொண்டார். நம் தண்ணீர் ஞாணஸ்நாணத்தால், நாம் புது வாழ்வை தொடங்கி, பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நித்திய வாழ்வில் இணையலாம்.
நாம் யார் என்பதை இயேசுவும் ஒவ்வொரு முறையும் அவர் நமக்கு எடுத்து காட்டும் செயல்களிலும், முன் மாதிரியாகவும் இருந்தார். நாம் கடவுளின் குழந்தைகளாகவே படைக்கபட்டிருக்கிறோம். இயேசுவிற்கு ஞாணஸ்நாணம் கொடுக்கும்பொழுது, பரிசுத்த ஆவி இறங்கி வந்தார், ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' அப்பொழுது, கடவுள் இவ்வாறு கூறினார். இதே மாதிரி நம் ஒவ்வொருவர் ஞாணஸ்நாணத்திலும் நடக்கும் என்பதை இயேசு அன்று நமக்கு காட்டினார்,
பரிசுத்த ஆவி உங்கள் மேலும் இறங்கி வந்தார் , மேலும் கடவுள் "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று சொல்வார்.
ஞாணஸ்நாணம் தண்ணீர்தான் கடவுளின் கருவறையாக இருந்து , நாம் அவரின் குடும்பத்தில் மீண்டும் பிறந்து , அவரது இறைசேவையில் நாம் இணைகிறோம். தீர்த்த நீரை எடுத்து நாமே சிலுவை இட்டுக் கொள்ளும்பொழுது , நாம் நமது ஞாணஸ்நாணத்தை மீண்டும் புதுபித்து கொள்கிறோம்.
யோர்தான் ஆற்றில், இயேசு சாதாரண வாழ்விலிருந்து, இறைசேவை வாழ்விற்காக மீண்டும் பிறந்தார். நமக்கும் ஞாணஸ்நாணம் மறுபிறப்பை கொடுக்கிறது. உங்கள் வாழ்வில் நீங்கள் மறு பிறப்பை எடுக்கும்போது, நீங்கள் மணம் வருந்தி, மன்னிப்பை பெற வேண்டுமா? கடவுள் உங்கள எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ, அதற்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும். இறை சேவைக்கும் நம்மை ஆயத்தமாக்கி கொள்ள வேண்டும்.
திருச்சபையின் இவ்வருட வாழ்வை தொடங்கும்போது, நாம் நமது ஞாணஸ்நாண மறுபிறப்பில், நமது பொறுப்பை உறுதி செய்து, நம்மையே சுத்த படுத்தி கொண்டு, பரிசுத்த வாழ்விலும், இறைசேவையிலும், நாம் கிறிஸ்துவை பின் செல்பவர்களாக :
சாத்தானை எதிர்க்கிறீர்களா?
சாத்தானின் செயல்களை எதிர்க்கிறீர்களா?
சாத்தானின் பொய் வாக்குறுதிகளை எதிர்க்கிறீர்களா?
கடவுளை விசுவசிக்கிறீர்களா?
எல்லாம் வல்ல கடவுள், இப்பூமியையும் , வானத்தையும் படைத்த கடவுளை ஏற்று கொள்கிறீர்களா?
தந்தை கடவுளின் ஒரே மகனான கிறிஸ்துவை நம்புகிறீர்களா? கன்னி மரியாளின் மூலம் பிறந்தவரும், சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, நல்லடக்கம் செய்யபட்டு, மீண்டும் உய்ரித்தெழுந்து, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்து இருக்கும் கிறிஸ்துவை விசுவசிக்கீறீர்களா?
பரிசுத்த ஆவியை நம்புகிறீர்களா? பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை நம்புகிறீர்களா? புனிதர்களின் பட்டத்தை நம்புகிறீர்களா? பாவ மன்னிப்பை விசுவசிக்கிறீர்களா ? மறு பிறப்பை நம்புகிறீர்களா? நித்திய வாழ்வை நம்புகிறீர்களா?
இந்த ஜெபத்தை பின் வருமாறு சொல்லுங்கள்:
அன்பு கடவுளே, நாம் பாவி, உன்னையே என் வாழ்வில் முதல்வனாக வைக்க பல்வேறு சமயங்களில் மறந்தும் ஒதுக்கியும் வைத்து விடுகிறேன். என்னை மன்னியும், என்னை மாற்றும், என்னை புதுப்பித்தருளும், உணமையாகவே, நீங்கள் என் கடவுளாக வாழ்நாள் முழுது இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இயேசு அவரது வாழ்வை தந்தையின் கைகளில் சமர்பித்தது போல், யோவான் ஞாணஸ்நாணத்தில் தன்னை அர்ப்பணித்தது போல, நானும் செய்கிறேன். என்னையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன். ஆமென்!.
கடவுள் இதற்கு மறுமொழியாக:
' என் அன்பார்ந்த மகன்/மகழ் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று சொல்வார்.
© 2011 by Terry A. Modica
Friday, December 2, 2011
டிசம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
டிசம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து வருகை கால இரண்டாம் ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1
1. முன்னுரை
திருமுழுக்கு யோவானின் உரை
(மத் 3:1 - 12; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி வாசகங்கள், கடவுளுக்கு ஆயத்தமாகுங்கள் என்று சொல்கிறது -- அவர் நமக்கு எது கொடுக்க விரும்பினாலும், நமக்காக எதனை செய்தாலும், நம்மை எது வேண்டுமானாலும் செய்ய சொன்னாலும் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறது; அவரிடம் ஒரு தெய்வீக நோக்கம் இருக்கிறது, அதன் மூலம் நாமெல்லாம் உண்மையான அர்த்தமுள்ள கடவுளின் குழந்தைகளாக , இவ்வுலகை மீட்ட கிறிஸ்துவோடு இருப்போம்.
நாம் கிறிஸ்துவோடு இனைந்தால் தான், நமது இயல்பான ஆற்றலுக்கான கடமையை முழுதும் நல்வழிக்கும், பரிசுத்த பாதைக்கும் நாம் நிறைவேற்ற முடியும்.
நாம் சரியான பாதையில் தான் இருக்கிறோம் என்பது நமக்கு எப்படி தெரிவது? அந்த பயனத்தின் கணிகளை , அதன் பலன்களை கொண்டு நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பது நாம் அறியலாம். பரிசுத்த வழிகள் எப்பொழுதுமே நல்ல கனிகளை தான் கொடுக்கும்.
கிறிஸ்துவின் வருகை காலம் நமக்கு கிறிஸ்துமஸ்ஸுக்கு தயாராகும் காலமாகும். மேலும், கடவுளை நாம் மீண்டும் புதிதாக சந்திக்கும் நேரமாகும். நமது பாவங்களை கழுவ நமக்கு இது நல்ல சமயாமாகும், கடவுளோடும் மீண்டும் இணைந்து , யேசுவை பின் சென்று பரிசுத்த பாதையில் செல்லுங்கள். இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், கிறிஸ்துமஸ் ஒரு சாதாரண விடுமுறையாக தான் இருக்கும். நமது வாழ்வில் பயிர் செய்ய முடியாத நிலமாக இருந்து கிறிஸ்துவை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாமல் இருக்கும். நம்மிடம் ஒன்றும் இல்லாதது போல நாம் நினைப்போம், அடுத்த வருடம் நம்மிடம் ஒன்றும் இல்லை என்று நினைப்போம்.
கடவுளின் பாதையை செம்மையாக்குங்கள்! அவர் உங்களுக்கு கொடுப்பதற்காக அதிகமான அன்பை வைத்திருக்கிறார்! உங்கள் காயங்களை குணப்படுத்தவும், அதிக சந்தோசம் கொடுக்கவும் , உங்கள் தரிசான நிலத்தை கடவுளுக்காக விரைவு சாலையாகவும் மாற்றா கடவுள் தயாராய் வருகிறார்!. நற்கருணை அருட்சாதனத்திற்கு சென்று பாவ மன்னிப்பு கேட்டு , இயேசு உங்கள் இதயத்தில் சுலபமாக செல்ல பாதையை அகலமாக்குங்கள். அதன் மூலம், மிக விரைவாகவும், மகிமையுடன் உங்களிடத்தில் வருவார். எல்லா மனிதர்களும், புல்லை போல வலிமையற்றவர்கள் தான், மேலும், நமது புகழ், பூக்கள் மலர்ந்து வாடுவது போல ஆகிவிடும். கடவுளின் மகிமை மட்டும் தான் எப்பொழுதும் புகழோடும், கீர்த்தியோடும், புகழொளியோடும் இருக்கும்.
இந்த கிறிஸ்து வருகை காலத்தில், உங்களின் போரட்டங்களும், ப்ரச்னைகளும் என்ன? அதற்கு தான் இயேசு இறைசேவை செய்ய விரும்புகிறர், இந்த ப்ரச்னைகளில் தான், உங்களை பாவங்கள் தாக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் எது வெல்லாம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது? எந்த செயல்கள், நல்ல பலன்களை கொடுக்கிறது? பஞ்ச நாட்களில் ஓடி போய் விட கூடிய செயல்களாக இருக்கிறது? இன்றிலிருந்து இன்னும் 100 வருடங்களுக்கு அந்த செயல்கள் ப்ரதி பலனை கொடுக்குமா?
கடவுள் உங்களுக்கு சில திறமைகளை கொடுத்து, அந்த திறமைகளை கொண்டு நீங்கள் சில முக்கியமான வேலைகளை செய்ய சொல்கிறார். கண்டிப்பாக, நீங்கள் பல பலன்களை கொடுக்க கூடிய முழுமையான வாழ்வு வாழ உங்களை அழைக்கிறார். அதன் மூலம், என்றென்றும் ஒரு வேறுபாட்டை காட்ட முடியும். நாம் அன்னை மேரியை போல கிறிஸ்துவை இவ்வுலகிற்கு கொடுக்க நாம் அழைக்க பட்டிருக்கிறோம். இயேசு நம் வாழ்வில் மிக பெரிய வித்தியாசத்தை கொண்டு வர நம்மிடம் நேராக வர ஆசைபடுகிறார்.
உங்கள் நேரத்தை வீணாக்கி கொண்டு இருக்கிறீர்களா? அப்படி என்றால், நற்கருணை அருட்சாதனத்திற்கு சென்று , மனந்திருந்தி, கடவுளின் பாதையை ஆயத்தமாக்குங்கள். உங்கள் மூலம் மிகப்பெரிய நித்திய வாழ்வில் மிக பெரிய வேறுபாட்டை காட்ட இயேசு ஆசைபடுகிறார்.
© 2011 by Terry A. Modica
கிறிஸ்து வருகை கால இரண்டாம் ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1
1. முன்னுரை
திருமுழுக்கு யோவானின் உரை
(மத் 3:1 - 12; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி வாசகங்கள், கடவுளுக்கு ஆயத்தமாகுங்கள் என்று சொல்கிறது -- அவர் நமக்கு எது கொடுக்க விரும்பினாலும், நமக்காக எதனை செய்தாலும், நம்மை எது வேண்டுமானாலும் செய்ய சொன்னாலும் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறது; அவரிடம் ஒரு தெய்வீக நோக்கம் இருக்கிறது, அதன் மூலம் நாமெல்லாம் உண்மையான அர்த்தமுள்ள கடவுளின் குழந்தைகளாக , இவ்வுலகை மீட்ட கிறிஸ்துவோடு இருப்போம்.
நாம் கிறிஸ்துவோடு இனைந்தால் தான், நமது இயல்பான ஆற்றலுக்கான கடமையை முழுதும் நல்வழிக்கும், பரிசுத்த பாதைக்கும் நாம் நிறைவேற்ற முடியும்.
நாம் சரியான பாதையில் தான் இருக்கிறோம் என்பது நமக்கு எப்படி தெரிவது? அந்த பயனத்தின் கணிகளை , அதன் பலன்களை கொண்டு நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பது நாம் அறியலாம். பரிசுத்த வழிகள் எப்பொழுதுமே நல்ல கனிகளை தான் கொடுக்கும்.
கிறிஸ்துவின் வருகை காலம் நமக்கு கிறிஸ்துமஸ்ஸுக்கு தயாராகும் காலமாகும். மேலும், கடவுளை நாம் மீண்டும் புதிதாக சந்திக்கும் நேரமாகும். நமது பாவங்களை கழுவ நமக்கு இது நல்ல சமயாமாகும், கடவுளோடும் மீண்டும் இணைந்து , யேசுவை பின் சென்று பரிசுத்த பாதையில் செல்லுங்கள். இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், கிறிஸ்துமஸ் ஒரு சாதாரண விடுமுறையாக தான் இருக்கும். நமது வாழ்வில் பயிர் செய்ய முடியாத நிலமாக இருந்து கிறிஸ்துவை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாமல் இருக்கும். நம்மிடம் ஒன்றும் இல்லாதது போல நாம் நினைப்போம், அடுத்த வருடம் நம்மிடம் ஒன்றும் இல்லை என்று நினைப்போம்.
கடவுளின் பாதையை செம்மையாக்குங்கள்! அவர் உங்களுக்கு கொடுப்பதற்காக அதிகமான அன்பை வைத்திருக்கிறார்! உங்கள் காயங்களை குணப்படுத்தவும், அதிக சந்தோசம் கொடுக்கவும் , உங்கள் தரிசான நிலத்தை கடவுளுக்காக விரைவு சாலையாகவும் மாற்றா கடவுள் தயாராய் வருகிறார்!. நற்கருணை அருட்சாதனத்திற்கு சென்று பாவ மன்னிப்பு கேட்டு , இயேசு உங்கள் இதயத்தில் சுலபமாக செல்ல பாதையை அகலமாக்குங்கள். அதன் மூலம், மிக விரைவாகவும், மகிமையுடன் உங்களிடத்தில் வருவார். எல்லா மனிதர்களும், புல்லை போல வலிமையற்றவர்கள் தான், மேலும், நமது புகழ், பூக்கள் மலர்ந்து வாடுவது போல ஆகிவிடும். கடவுளின் மகிமை மட்டும் தான் எப்பொழுதும் புகழோடும், கீர்த்தியோடும், புகழொளியோடும் இருக்கும்.
இந்த கிறிஸ்து வருகை காலத்தில், உங்களின் போரட்டங்களும், ப்ரச்னைகளும் என்ன? அதற்கு தான் இயேசு இறைசேவை செய்ய விரும்புகிறர், இந்த ப்ரச்னைகளில் தான், உங்களை பாவங்கள் தாக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் எது வெல்லாம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது? எந்த செயல்கள், நல்ல பலன்களை கொடுக்கிறது? பஞ்ச நாட்களில் ஓடி போய் விட கூடிய செயல்களாக இருக்கிறது? இன்றிலிருந்து இன்னும் 100 வருடங்களுக்கு அந்த செயல்கள் ப்ரதி பலனை கொடுக்குமா?
கடவுள் உங்களுக்கு சில திறமைகளை கொடுத்து, அந்த திறமைகளை கொண்டு நீங்கள் சில முக்கியமான வேலைகளை செய்ய சொல்கிறார். கண்டிப்பாக, நீங்கள் பல பலன்களை கொடுக்க கூடிய முழுமையான வாழ்வு வாழ உங்களை அழைக்கிறார். அதன் மூலம், என்றென்றும் ஒரு வேறுபாட்டை காட்ட முடியும். நாம் அன்னை மேரியை போல கிறிஸ்துவை இவ்வுலகிற்கு கொடுக்க நாம் அழைக்க பட்டிருக்கிறோம். இயேசு நம் வாழ்வில் மிக பெரிய வித்தியாசத்தை கொண்டு வர நம்மிடம் நேராக வர ஆசைபடுகிறார்.
உங்கள் நேரத்தை வீணாக்கி கொண்டு இருக்கிறீர்களா? அப்படி என்றால், நற்கருணை அருட்சாதனத்திற்கு சென்று , மனந்திருந்தி, கடவுளின் பாதையை ஆயத்தமாக்குங்கள். உங்கள் மூலம் மிகப்பெரிய நித்திய வாழ்வில் மிக பெரிய வேறுபாட்டை காட்ட இயேசு ஆசைபடுகிறார்.
© 2011 by Terry A. Modica
Friday, November 25, 2011
நவம்பர் 27 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
நவம்பர் 27 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து பிறப்பின் முதல் ஞாயிறு
Isaiah 63:16b-17,19b;64:2-7
Ps 80:2-3,15-16,18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 13
மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(மத் 24:36 - 44; லூக் 17:26 - 30, 34 - 36)
' ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35 அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37 நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறு கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறாக நாம் தொடங்குகிறோம். உங்கள் வாழ்வில் உள்ள முக்கியமான ரொம்பவும் நெருங்கிய நபர்களுக்கு உங்கள் ப்ரியத்தை எப்படி கான்பிக்க போகிறோம் என்றவாறே , அவர்களுக்கு பிடத்தமான அன்பளிப்பை , அவர்களுக்கு எவ்வாறு உதவியாக இருக்கும் என்று இந்த கிறிஸ்துமஸ் காலத்தை தொடங்குங்கள். ஆனால் அவர்களது வாழ்க்கையில் நல்லதோரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?
இயேசு பிறந்த நாளை நாம் கிறிஸ்துமசாக கொண்டாடுவதால், அவருக்கும் ஒரு அன்பளிப்பு கொடுப்போம். மற்றவர்களை விட கடவுளுக்கு தான் நாம் அதிக அன்பளிப்பு கொடுக்க வேண்டும், ஏற்கனவே பல செல்வங்களை வைத்துள்ளவர்களுக்கு இன்னும் அன்பளிப்பு ஏன் கொடுக்கிறீர்கள்.? இயேசு என்ன அன்பளிப்பு கொடுத்தால், அது என்றென்றும் நிலைத்திருக்கும்? அதே அன்பளிப்பை வேறு யாரும் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். அவரிடம் இல்லாத அன்பளிப்பை உங்களால் கொடுக்க முடியுமா? இயேசுவிடம் கொடுக்க வேண்டியதை இன்னும் என்ன வைத்து கொண்டு இருக்கிறீர்கள்? என்ன திறமை அல்லது சேவை அல்லது உங்கள் வாழ்வில் மாற்றம் அவருக்கு பிடித்தமானதாக இருக்கும்?
இன்றைய ஞாயிறின் முதல் வாசகத்தில், கடவுள் நமது தந்தை என நினைவுறுத்துகிறது. பதிலுரை பாடல் கடவுளிடம் நம்மை திருப்ப வேண்டும் என ஜெபமாக சொல்கிறது. இரண்டாவது வாசகமோ கடவுள் நமக்கு செய்த எல்லாவற்றிர்கும் நன்றி சொல்கிறது. கடவுள் உங்களுக்கு கொடுத்த எல்லாவற்றிற்கும் நீங்கள் என்ன கைமாறு செய்ய போகிறீர்கள்?
இன்றைய நற்செய்தியில், நாம் தயாராக/ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று நமக்கு நினைவுறுத்தபடுகிறது. - கிறிஸ்துவின் வருகைக்காக , ஏதாவது ஒன்றை செய்து வித்தியாசத்தை காமிக்க வேண்டும் . இது ஒன்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை குறிப்பதல்ல. நாம் இறுதி மூச்சை விடும் நேரம் போன்றானது இந்த கிறிஸ்துமஸ். கிறிஸ்துவாக இந்த கிறிஸ்துமஸ்சில் உன்னிடம் வருவதற்கான வருகை இது. இப்பொழுதே , இன்றே உங்களிடம் கிறிஸ்து வருகிறார்.
உங்களிடமிருந்து புதிதாக ஒன்றை உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர் அதனை உங்களிடம் கொடுக்கும்பொழுது, நிங்கள் சரியானதை செய்கிறீர்களா? (முதல் வாசகத்தில் கூறியிள்ளது போல) , அவரின் ஆன்மிக அன்பளிப்புகளை நீங்கள் உபயோகிப்பதை கிறிஸ்து கான்பாரா? (இரண்டாவது வாசகத்தில் கூறியுள்ளது போல) நீங்கள் எதற்கும் தயாரக இருக்கிறீர்களா? (நற்செய்தியில் உள்ளது போல ).
கிறிஸ்துவின் வருகை காலம் கிறிஸ்து நமக்கு கொடுத்த அன்பளிப்புகளை கொடைகளை நாம் நினைத்து பார்க்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. அதே போல, அவருக்கும் நாம் கொடுக்கும் அன்பளிப்பும் அவரிடத்தில் இல்லாத ஒன்றாக இருக்க நாம் இக்காலத்தை உபயோகிக்க வேண்டும். இது தான் என்றென்றும் வித்தியாசமாக இருக்கும், நமக்கும், அவருக்கும்.
© 2011 by Terry A. Modica
கிறிஸ்து பிறப்பின் முதல் ஞாயிறு
Isaiah 63:16b-17,19b;64:2-7
Ps 80:2-3,15-16,18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 13
மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(மத் 24:36 - 44; லூக் 17:26 - 30, 34 - 36)
' ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35 அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37 நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறு கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறாக நாம் தொடங்குகிறோம். உங்கள் வாழ்வில் உள்ள முக்கியமான ரொம்பவும் நெருங்கிய நபர்களுக்கு உங்கள் ப்ரியத்தை எப்படி கான்பிக்க போகிறோம் என்றவாறே , அவர்களுக்கு பிடத்தமான அன்பளிப்பை , அவர்களுக்கு எவ்வாறு உதவியாக இருக்கும் என்று இந்த கிறிஸ்துமஸ் காலத்தை தொடங்குங்கள். ஆனால் அவர்களது வாழ்க்கையில் நல்லதோரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?
இயேசு பிறந்த நாளை நாம் கிறிஸ்துமசாக கொண்டாடுவதால், அவருக்கும் ஒரு அன்பளிப்பு கொடுப்போம். மற்றவர்களை விட கடவுளுக்கு தான் நாம் அதிக அன்பளிப்பு கொடுக்க வேண்டும், ஏற்கனவே பல செல்வங்களை வைத்துள்ளவர்களுக்கு இன்னும் அன்பளிப்பு ஏன் கொடுக்கிறீர்கள்.? இயேசு என்ன அன்பளிப்பு கொடுத்தால், அது என்றென்றும் நிலைத்திருக்கும்? அதே அன்பளிப்பை வேறு யாரும் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். அவரிடம் இல்லாத அன்பளிப்பை உங்களால் கொடுக்க முடியுமா? இயேசுவிடம் கொடுக்க வேண்டியதை இன்னும் என்ன வைத்து கொண்டு இருக்கிறீர்கள்? என்ன திறமை அல்லது சேவை அல்லது உங்கள் வாழ்வில் மாற்றம் அவருக்கு பிடித்தமானதாக இருக்கும்?
இன்றைய ஞாயிறின் முதல் வாசகத்தில், கடவுள் நமது தந்தை என நினைவுறுத்துகிறது. பதிலுரை பாடல் கடவுளிடம் நம்மை திருப்ப வேண்டும் என ஜெபமாக சொல்கிறது. இரண்டாவது வாசகமோ கடவுள் நமக்கு செய்த எல்லாவற்றிர்கும் நன்றி சொல்கிறது. கடவுள் உங்களுக்கு கொடுத்த எல்லாவற்றிற்கும் நீங்கள் என்ன கைமாறு செய்ய போகிறீர்கள்?
இன்றைய நற்செய்தியில், நாம் தயாராக/ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று நமக்கு நினைவுறுத்தபடுகிறது. - கிறிஸ்துவின் வருகைக்காக , ஏதாவது ஒன்றை செய்து வித்தியாசத்தை காமிக்க வேண்டும் . இது ஒன்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை குறிப்பதல்ல. நாம் இறுதி மூச்சை விடும் நேரம் போன்றானது இந்த கிறிஸ்துமஸ். கிறிஸ்துவாக இந்த கிறிஸ்துமஸ்சில் உன்னிடம் வருவதற்கான வருகை இது. இப்பொழுதே , இன்றே உங்களிடம் கிறிஸ்து வருகிறார்.
உங்களிடமிருந்து புதிதாக ஒன்றை உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர் அதனை உங்களிடம் கொடுக்கும்பொழுது, நிங்கள் சரியானதை செய்கிறீர்களா? (முதல் வாசகத்தில் கூறியிள்ளது போல) , அவரின் ஆன்மிக அன்பளிப்புகளை நீங்கள் உபயோகிப்பதை கிறிஸ்து கான்பாரா? (இரண்டாவது வாசகத்தில் கூறியுள்ளது போல) நீங்கள் எதற்கும் தயாரக இருக்கிறீர்களா? (நற்செய்தியில் உள்ளது போல ).
கிறிஸ்துவின் வருகை காலம் கிறிஸ்து நமக்கு கொடுத்த அன்பளிப்புகளை கொடைகளை நாம் நினைத்து பார்க்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. அதே போல, அவருக்கும் நாம் கொடுக்கும் அன்பளிப்பும் அவரிடத்தில் இல்லாத ஒன்றாக இருக்க நாம் இக்காலத்தை உபயோகிக்க வேண்டும். இது தான் என்றென்றும் வித்தியாசமாக இருக்கும், நமக்கும், அவருக்கும்.
© 2011 by Terry A. Modica
Friday, November 18, 2011
நவம்பர் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
நவம்பர் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து அரசர்
Ezek 34:11-12, 15-17
Ps 23:1-3, 5-6
1 Cor 15:20-26, 28
Matt 25:31-46
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 25
மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ' என்பார்.37 அதற்கு நேர்மையாளர்கள் ' ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ' என்று கேட்பார்கள்.40 அதற்கு அரசர், ' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார்.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். '
(thanks to www.arulvakku.com)
நாம் ஆயர்களை என்றுமே அரசர்களாக மன்னர்களாக நினைப்பதில்லை. ஆனால் இன்றைய நற்செய்தியோ, நமது நல்லாயன் இயேசுவின் ஆற்றலை, சக்தியை இங்கே விளைக்கி சொல்கிறது. மன்னர்கள் தனது படை பலத்தினால், தனது ராஜ்ஜியத்தை பெரிதாக்கி, தனது ஆட்சியை நல் வழியில் நடத்துவார்கள். அதனால் தான் இயேசு சொல்கிறார். "சிறியோர்களுக்கு நீங்கள் செய்த அனைத்தும் எனக்காக செய்தீர்கள்".
எடுத்து காட்டாக, நமது நல்லாயனும், மன்னருமாகிய இயேசு பசியாய் இருப்போருக்கு உணவளிக்க விரும்பினால், அவர் இறையரசிடமிருந்து எப்படி கொடுப்பது? நம்மில் சிலருக்கு அதிகமான உணவை கொடுத்து , யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொடுக்க சொல்கிறார்.
அரசரின் கட்டளைகளை நாம் செய்யா விட்டால் என்ன ஆகும்? பசியாய் இருப்போர் , கடவுள் தயாள குணமுடையவர் என்று நினைப்பார்களா? கடவுள் என்ன செய்ய சொன்னாரோ, அதனை நாம் செய்யும் பொழுது தான், அவர்கள் கடவுள் இரக்கமுள்ளவர் என்று நினைப்பார்கள்.
உங்களை சுற்றி இருப்பவர்களை நினைத்து பாருங்கள். ஒவ்வொருவரும், நமக்கு கடவுள் நல்லவர் என்று கான்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளனர்.
உங்களுக்கு அதிகம் பிடிக்காதவர்கள் யார்? அவர் உங்களை கோபப்படுத்தியிருக்கலாம் அல்லது பயமுறுத்தியிருக்கலாம், அல்லது காய்ப்படுத்தியிருக்கலாம். அதெல்லாம் இருக்கட்டும்: அவர் எதனை அடைய ஆசைப்பட்டார்? உங்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் பரிசுத்த ஆவியை கேளுங்கள் , அந்த நபரை நன்றாக கவனித்து, அவர் அடிமனதில் என்ன வலியோடும், பயத்தோடும் இருக்கிறார் என்று அறிய முற்படுங்கள்.
அவருக்கு கொடுப்பது மாதிரி , உங்களிடத்தில் கடவுள் அளவிற்கு அதிகமாக எதனை கொடுத்திருக்கிறார் , மேலும் கிறிஸ்து அரசரிடமிருந்து நீங்கள் பெற்று அவரிடம் நமது அரசர் எவ்வளவு தாராள குணமுள்ளவர் என்று நீங்கள் கான்பிக்க வேண்டாமா?
நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை , நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நாம் மறுக்கும் பொழுது, ஆயனிடமிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஆட்டினை போல் ஆகிறோம். மாறாக நாம் கடவுளின் பணிக்கு ஆம் என்று சொல்லி அதில் ஈடுபடும்பொழுது கடவுள் அரசரின் நல்ல விசயங்கள் எல்லா இடமும் பரவும், மேலும் நாம் எல்லோரும் ஆசிர்வதிக்கபடுவோம்.
© 2011 by Terry A. Modica
கிறிஸ்து அரசர்
Ezek 34:11-12, 15-17
Ps 23:1-3, 5-6
1 Cor 15:20-26, 28
Matt 25:31-46
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 25
மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ' என்பார்.37 அதற்கு நேர்மையாளர்கள் ' ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ' என்று கேட்பார்கள்.40 அதற்கு அரசர், ' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார்.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். '
(thanks to www.arulvakku.com)
நாம் ஆயர்களை என்றுமே அரசர்களாக மன்னர்களாக நினைப்பதில்லை. ஆனால் இன்றைய நற்செய்தியோ, நமது நல்லாயன் இயேசுவின் ஆற்றலை, சக்தியை இங்கே விளைக்கி சொல்கிறது. மன்னர்கள் தனது படை பலத்தினால், தனது ராஜ்ஜியத்தை பெரிதாக்கி, தனது ஆட்சியை நல் வழியில் நடத்துவார்கள். அதனால் தான் இயேசு சொல்கிறார். "சிறியோர்களுக்கு நீங்கள் செய்த அனைத்தும் எனக்காக செய்தீர்கள்".
எடுத்து காட்டாக, நமது நல்லாயனும், மன்னருமாகிய இயேசு பசியாய் இருப்போருக்கு உணவளிக்க விரும்பினால், அவர் இறையரசிடமிருந்து எப்படி கொடுப்பது? நம்மில் சிலருக்கு அதிகமான உணவை கொடுத்து , யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொடுக்க சொல்கிறார்.
அரசரின் கட்டளைகளை நாம் செய்யா விட்டால் என்ன ஆகும்? பசியாய் இருப்போர் , கடவுள் தயாள குணமுடையவர் என்று நினைப்பார்களா? கடவுள் என்ன செய்ய சொன்னாரோ, அதனை நாம் செய்யும் பொழுது தான், அவர்கள் கடவுள் இரக்கமுள்ளவர் என்று நினைப்பார்கள்.
உங்களை சுற்றி இருப்பவர்களை நினைத்து பாருங்கள். ஒவ்வொருவரும், நமக்கு கடவுள் நல்லவர் என்று கான்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளனர்.
உங்களுக்கு அதிகம் பிடிக்காதவர்கள் யார்? அவர் உங்களை கோபப்படுத்தியிருக்கலாம் அல்லது பயமுறுத்தியிருக்கலாம், அல்லது காய்ப்படுத்தியிருக்கலாம். அதெல்லாம் இருக்கட்டும்: அவர் எதனை அடைய ஆசைப்பட்டார்? உங்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் பரிசுத்த ஆவியை கேளுங்கள் , அந்த நபரை நன்றாக கவனித்து, அவர் அடிமனதில் என்ன வலியோடும், பயத்தோடும் இருக்கிறார் என்று அறிய முற்படுங்கள்.
அவருக்கு கொடுப்பது மாதிரி , உங்களிடத்தில் கடவுள் அளவிற்கு அதிகமாக எதனை கொடுத்திருக்கிறார் , மேலும் கிறிஸ்து அரசரிடமிருந்து நீங்கள் பெற்று அவரிடம் நமது அரசர் எவ்வளவு தாராள குணமுள்ளவர் என்று நீங்கள் கான்பிக்க வேண்டாமா?
நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை , நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நாம் மறுக்கும் பொழுது, ஆயனிடமிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஆட்டினை போல் ஆகிறோம். மாறாக நாம் கடவுளின் பணிக்கு ஆம் என்று சொல்லி அதில் ஈடுபடும்பொழுது கடவுள் அரசரின் நல்ல விசயங்கள் எல்லா இடமும் பரவும், மேலும் நாம் எல்லோரும் ஆசிர்வதிக்கபடுவோம்.
© 2011 by Terry A. Modica
Friday, November 11, 2011
நவம்பர் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
நவம்பர் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Proverbs 31:10-13, 19-20, 30-31
Ps 128:1-5
1 Thes 5:1-6
Matt 25:14-30
தாலந்து உவமை
(லூக் 19:11 - 27)
14 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.19நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ' ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ' என்றார்.21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே qபெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ' என்றார்.22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ' ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ' என்றார்.23அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ' என்றார்.24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ' ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ' என்றார்.26 அதற்கு அவருடைய தலைவர், ' சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?27அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ' என்று கூறினார்.28 ' எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.29ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்
இன்றைய நற்செய்தியில், நமக்கு கடவுள் கொடுத்த திறமைகளை, அன்பளிப்புகளை, புதைத்துவிட வேண்டாம் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. அப்படி செய்தால், "பொல்லாதவர்களாகவும், சோம்பேறியாகவும்" நாம் இருப்போம்.
நாம் எல்லோருமே, சில புதைக்கப்பட்ட திறமைகளை கொண்டுள்ளோம். இறையரசிற்காக இன்னும் நிறைய நாம் செய்யலாம், ஆனால், நாமோ "என்னால் முடியாது, எனக்கு போதுமான திறமைகள் இல்லை" அல்லது "வேறு யாராவது என்னை விட நன்றாக செய்ய முடியும்" அல்லது "கடவுள் எனக்கு இதனை செய் என்று சொல்ல முடியாது " அல்லது " எனக்கு நேரமில்லை, பணமில்லை, எப்படி செய்வது என்று தெரியாது, உடல் நலமில்லை" அல்லது " நாம் ரிடையர் ஆகிவிட்டேன், என்னுடைய சுய தேவைகளை செய்து கொள்ள வேண்டும்" என்றும் நாம் சொல்கிறோம்.
கடவுள் கொடுத்த எதையும் வீனாக்க நாம் எந்த ஒரு சாக்கு போக்கையும் சொல்ல முடியாது, ஆனால், இது அடிக்கடி நடக்கிறது, ஏனெனில், நமது திறமைகள் இறையர்சிற்காக, திருச்சபைக்காகவும், கிறிஸ்துவை இவ்வுலகிற்கு கொண்டு செல்லவும் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை.
உங்கள் அன்பளிப்புகளும், திறமகளும் உங்களை எங்கே இட்டு செல்கிறது? இறையரசிற்கு உங்கள் திறமைகள் உபயோகபடாமல் இருக்க எது உங்களை தடுக்கிறது? இது தான் சரியான தருணம்/சமயம், உங்கள் திறமைகளை கடவுளின் திட்டத்திற்காக நாம் களமிறக்க வேண்டும்.
இறையர்சிற்காக நாம் செய்ய வேண்டிய அளவிற்கு, நமக்கு திறமைகள் உள்ளன. ஏனெனில், அந்த திறமைகள் கடவுளிடமிருந்து வருகிறது. நாமெல்லாம் அவருடைய சேவகர்கள், கடவுள் தான் நம்மால் என்ன செய்ய முடியும் என்று நிர்ணயிப்பவர். படுத்த படுக்கையாக இருப்பவர்கள் கூட கடவுளுக்காக செய்ய வேண்டிய வேளைகள், அதனை, அவர்கள் வேதனைகளோடு, க்ஷ்டட்தோடு செய்ய முடியும். அடிக்கடி, இவைகள் தான் மிகவும் சக்தி வாய்ந்த ஜெபமாகவும், இவ்வுலகில் நாம் பெறும், ஞானமாகவும் அமையும்.
"கடவுள் நன்மை செய்பவராக இருந்தால், ஏன் அவர் சாத்தானை , கெட்ட செயல்களை இவ்வுலகில் அனுமதிக்கிறார்? " என்ற கேள்வியை சிலர் நம்மிடம் கேட்டிருக்கலாம். அதற்கு பதில்: "கடவுள் இதனை அனுமதிக்கவில்லை, நாம் தான் அனுமதிக்கிறோம்!, நாம் கிறிஸ்து உடலின் ஒரு அங்கமாக இவ்வுலகில் இருக்கிறோம். அவருடைய கைகள், கால்களாக, குரலாக இருக்கிறோம். இயேசு உண்மையிலே இவ்வுலகை மோட்சமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார், ஆனால் நம்மில் பலர், நமது திறமைகளை புதைத்து விட்டு, எந்த வித்தியாசத்தை இவ்வுலகில் காட்ட வேண்டுமோ, அதை விட்டு விட்டு, நாம் சோம்பேறிகளாக இருக்கிறோம்.
© 2011 by Terry A. Modica
ஆண்டின் 33ம் ஞாயிறு
Proverbs 31:10-13, 19-20, 30-31
Ps 128:1-5
1 Thes 5:1-6
Matt 25:14-30
தாலந்து உவமை
(லூக் 19:11 - 27)
14 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.19நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ' ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ' என்றார்.21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே qபெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ' என்றார்.22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ' ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ' என்றார்.23அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ' என்றார்.24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ' ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ' என்றார்.26 அதற்கு அவருடைய தலைவர், ' சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?27அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ' என்று கூறினார்.28 ' எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.29ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்
இன்றைய நற்செய்தியில், நமக்கு கடவுள் கொடுத்த திறமைகளை, அன்பளிப்புகளை, புதைத்துவிட வேண்டாம் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. அப்படி செய்தால், "பொல்லாதவர்களாகவும், சோம்பேறியாகவும்" நாம் இருப்போம்.
நாம் எல்லோருமே, சில புதைக்கப்பட்ட திறமைகளை கொண்டுள்ளோம். இறையரசிற்காக இன்னும் நிறைய நாம் செய்யலாம், ஆனால், நாமோ "என்னால் முடியாது, எனக்கு போதுமான திறமைகள் இல்லை" அல்லது "வேறு யாராவது என்னை விட நன்றாக செய்ய முடியும்" அல்லது "கடவுள் எனக்கு இதனை செய் என்று சொல்ல முடியாது " அல்லது " எனக்கு நேரமில்லை, பணமில்லை, எப்படி செய்வது என்று தெரியாது, உடல் நலமில்லை" அல்லது " நாம் ரிடையர் ஆகிவிட்டேன், என்னுடைய சுய தேவைகளை செய்து கொள்ள வேண்டும்" என்றும் நாம் சொல்கிறோம்.
கடவுள் கொடுத்த எதையும் வீனாக்க நாம் எந்த ஒரு சாக்கு போக்கையும் சொல்ல முடியாது, ஆனால், இது அடிக்கடி நடக்கிறது, ஏனெனில், நமது திறமைகள் இறையர்சிற்காக, திருச்சபைக்காகவும், கிறிஸ்துவை இவ்வுலகிற்கு கொண்டு செல்லவும் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை.
உங்கள் அன்பளிப்புகளும், திறமகளும் உங்களை எங்கே இட்டு செல்கிறது? இறையரசிற்கு உங்கள் திறமைகள் உபயோகபடாமல் இருக்க எது உங்களை தடுக்கிறது? இது தான் சரியான தருணம்/சமயம், உங்கள் திறமைகளை கடவுளின் திட்டத்திற்காக நாம் களமிறக்க வேண்டும்.
இறையர்சிற்காக நாம் செய்ய வேண்டிய அளவிற்கு, நமக்கு திறமைகள் உள்ளன. ஏனெனில், அந்த திறமைகள் கடவுளிடமிருந்து வருகிறது. நாமெல்லாம் அவருடைய சேவகர்கள், கடவுள் தான் நம்மால் என்ன செய்ய முடியும் என்று நிர்ணயிப்பவர். படுத்த படுக்கையாக இருப்பவர்கள் கூட கடவுளுக்காக செய்ய வேண்டிய வேளைகள், அதனை, அவர்கள் வேதனைகளோடு, க்ஷ்டட்தோடு செய்ய முடியும். அடிக்கடி, இவைகள் தான் மிகவும் சக்தி வாய்ந்த ஜெபமாகவும், இவ்வுலகில் நாம் பெறும், ஞானமாகவும் அமையும்.
"கடவுள் நன்மை செய்பவராக இருந்தால், ஏன் அவர் சாத்தானை , கெட்ட செயல்களை இவ்வுலகில் அனுமதிக்கிறார்? " என்ற கேள்வியை சிலர் நம்மிடம் கேட்டிருக்கலாம். அதற்கு பதில்: "கடவுள் இதனை அனுமதிக்கவில்லை, நாம் தான் அனுமதிக்கிறோம்!, நாம் கிறிஸ்து உடலின் ஒரு அங்கமாக இவ்வுலகில் இருக்கிறோம். அவருடைய கைகள், கால்களாக, குரலாக இருக்கிறோம். இயேசு உண்மையிலே இவ்வுலகை மோட்சமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார், ஆனால் நம்மில் பலர், நமது திறமைகளை புதைத்து விட்டு, எந்த வித்தியாசத்தை இவ்வுலகில் காட்ட வேண்டுமோ, அதை விட்டு விட்டு, நாம் சோம்பேறிகளாக இருக்கிறோம்.
© 2011 by Terry A. Modica
Friday, November 4, 2011
நவம்பர் 6, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
நவம்பர் 6, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
Wisdom 6:12-16
Ps 63:2-8
1 Thes 4:13-18
Matt. 25:1-13
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 25
பத்து தோழியர் உவமை
1 ' அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.6 நள்ளிரவில், ' இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள் ' என்ற உரத்த குரல் ஒலித்தது.7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ' எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் ' என்றார்கள்.9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ' உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது ' என்றார்கள்.10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ' ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ' என்றார்கள்.12 ' அவர் மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது ' என்றார்.13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், நாம் படித்தோமானால், இது பெரிய முட்டாள் தனமாக தெரியும். நாம் கிறிஸ்துவை நம்புகிறோம் - ஜெபம் செய்கிறோம்!, நமது விசுவாசத்தை வளர்க்க நேரம் செலவிடுகிறோம், விசுவாசத்திற்கான புதிய வாய்ப்புகளில் நாம் பங்கு கொள்கிறோம். இவையெல்லாம் புத்திசாலித்தனமானது. நாம் கடவுளை நம்புகிறோம் என்று சொல்கிறோம்!
ஆனால், நாம் கேட்கும் வரங்களை கேட்ட உடன் கடவுள் கொடுக்கவில்லையென்றால்? சாத்தானிடமிருந்து, கிறிஸ்து நம்மை காத்து அரவணைத்து கொள்ள வேண்டும் என்று நாம் ஆசைபடும்பொழுது, அது கிடைக்க வில்லை என்றால், இயேசு கிறிஸ்து எங்கே?
எப்பொழுதுமே, கடவுள் நாம் நினைக்கின்ற நேரத்தில், அவர் வருவதில்லை. சரியான நேரத்தில் தான் அவர் வருவார். கடவுள் எவ்வளவு சீக்கிரம் நம் ப்ரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அந்த நேரம் தான் சரியான நேரம் என்று நாம் நினைக்கலாம். ? ஆனால், கடவுள் அவர் எண்ணங்களின் வழி, அது சரியான நேரமாக இருக்காது!. (பிறகு ஏன் நாம் கடவுளிடம் நமது ப்ரச்னையை அவரிடத்தில் கொண்டு செல்கிறோம்? )
நாம் கேட்டது கிடைக்காத பொழுது, அதனால் நாம் நம்பிக்கை இழக்கும் பொழுது, கடவுளின் சரியான காலத்திற்கு நாம் தயாராகமல், நாம் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கவில்லை என்று நாம் மணம் நொந்து போகிறோம். அறிவிலிகளான மணமகள்கள், அவர்களது எண்ணெய் தீருவதற்குள் மணமகன் வந்து விடுவார் என நினைத்தனர். அவர்களுக்கு அங்கு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விட்டனர். நாமும் அப்படிதான் இருக்கிறோமோ?
மேலும், கடவுளின் திட்டம் நமக்கு முரண்பாடாக இருந்தால், நாம் அதனை நம்புவதில்லை. பிறகும், நாமே நம் ப்ரச்னையை கையாள ஆரம்பிக்கிறோம்.
நாமே நமக்கு பொருத்தமான திட்டத்தை நம்ப வேண்டியதில்லை. நம்முடைய புரிதலை, நாமாக ஒன்றை நினைத்து கொள்வதும் தேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் கடவுளின் வழிக்கு நாம் உடன்படுகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கடவுளின் வழிகள் நாம் நினைத்தை விட மேலானது, அற்புதமானது என்று புரியும்.!
நமது கற்பனைக்கு எட்டாத வழியாக அது இருக்கும்.!
© 2011 by Terry A. Modica
ஆண்டின் 32ம் ஞாயிறு
Wisdom 6:12-16
Ps 63:2-8
1 Thes 4:13-18
Matt. 25:1-13
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 25
பத்து தோழியர் உவமை
1 ' அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.6 நள்ளிரவில், ' இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள் ' என்ற உரத்த குரல் ஒலித்தது.7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ' எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் ' என்றார்கள்.9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ' உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது ' என்றார்கள்.10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ' ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ' என்றார்கள்.12 ' அவர் மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது ' என்றார்.13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், நாம் படித்தோமானால், இது பெரிய முட்டாள் தனமாக தெரியும். நாம் கிறிஸ்துவை நம்புகிறோம் - ஜெபம் செய்கிறோம்!, நமது விசுவாசத்தை வளர்க்க நேரம் செலவிடுகிறோம், விசுவாசத்திற்கான புதிய வாய்ப்புகளில் நாம் பங்கு கொள்கிறோம். இவையெல்லாம் புத்திசாலித்தனமானது. நாம் கடவுளை நம்புகிறோம் என்று சொல்கிறோம்!
ஆனால், நாம் கேட்கும் வரங்களை கேட்ட உடன் கடவுள் கொடுக்கவில்லையென்றால்? சாத்தானிடமிருந்து, கிறிஸ்து நம்மை காத்து அரவணைத்து கொள்ள வேண்டும் என்று நாம் ஆசைபடும்பொழுது, அது கிடைக்க வில்லை என்றால், இயேசு கிறிஸ்து எங்கே?
எப்பொழுதுமே, கடவுள் நாம் நினைக்கின்ற நேரத்தில், அவர் வருவதில்லை. சரியான நேரத்தில் தான் அவர் வருவார். கடவுள் எவ்வளவு சீக்கிரம் நம் ப்ரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அந்த நேரம் தான் சரியான நேரம் என்று நாம் நினைக்கலாம். ? ஆனால், கடவுள் அவர் எண்ணங்களின் வழி, அது சரியான நேரமாக இருக்காது!. (பிறகு ஏன் நாம் கடவுளிடம் நமது ப்ரச்னையை அவரிடத்தில் கொண்டு செல்கிறோம்? )
நாம் கேட்டது கிடைக்காத பொழுது, அதனால் நாம் நம்பிக்கை இழக்கும் பொழுது, கடவுளின் சரியான காலத்திற்கு நாம் தயாராகமல், நாம் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கவில்லை என்று நாம் மணம் நொந்து போகிறோம். அறிவிலிகளான மணமகள்கள், அவர்களது எண்ணெய் தீருவதற்குள் மணமகன் வந்து விடுவார் என நினைத்தனர். அவர்களுக்கு அங்கு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விட்டனர். நாமும் அப்படிதான் இருக்கிறோமோ?
மேலும், கடவுளின் திட்டம் நமக்கு முரண்பாடாக இருந்தால், நாம் அதனை நம்புவதில்லை. பிறகும், நாமே நம் ப்ரச்னையை கையாள ஆரம்பிக்கிறோம்.
நாமே நமக்கு பொருத்தமான திட்டத்தை நம்ப வேண்டியதில்லை. நம்முடைய புரிதலை, நாமாக ஒன்றை நினைத்து கொள்வதும் தேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் கடவுளின் வழிக்கு நாம் உடன்படுகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கடவுளின் வழிகள் நாம் நினைத்தை விட மேலானது, அற்புதமானது என்று புரியும்.!
நமது கற்பனைக்கு எட்டாத வழியாக அது இருக்கும்.!
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Posts (Atom)