Friday, February 27, 2009

மார்ச் 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Genesis 9:8-15
Ps 25:4-9
1 Peter 3:18-22
Mark 1:12-15
http://www.usccb.org/nab/readings/030109.shtml
Audio:
http://ccc.usccb.org/cccradio/NABPodcasts/09_03_01.mp3

அதிகாரம் 1
12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.13 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், யேசு கிறிஸ்து, யோர்தான் ஆற்றில் ஞானஸ்நாணம் பெற்றவுடன், அவருக்கு நடந்த முதல் நிகழ்ச்சியை பற்றி கூறுகிறது. சோதனைகளுக்கு ஆட்படுத்தபட்டார்.

யேசு கிறிஸ்து தந்தையின் விருப்பத்திற்கு தன்னை முழுமையாக கையளித்ததை இந்த ஞானஸ்நாணம் குறிப்பிடுகிறது. அந்த தண்ணியிலிருந்து எழுந்து வரும்போது, அவரின் பழைய வாழ்க்கையை தொலைத்து, புதிய கடவுளின் சேவை வாழ்வை துவங்கினார்.

கடவுள் அவர் மேல் பெருமிதமடைந்தை அங்கே கூறுகிறார். மனிதனான கிறிஸ்துவை, பரிசுத்த ஆவியானவர், முழுமையாக ஆவியால் நிரப்புகிறார். யேசு கடவுளாக முழுமையான பரிசுத்த ஆவியை கொண்டிருப்பவர். (100 சதவீதம், முழுமையான ஆவியை கொண்டிருப்பவர், ஏனெனில் யேசுவும், பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்), ஆனால், யேசு முழுமையான மனிதனாக இப்போது இருக்கும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் ஆவியால் யேசுவை முழுதும் நிரப்பினார். நாம் இந்த அனுபவத்தை யோர்தான் ஆற்றில் எப்படி நடந்திருக்கும் என்று கற்பனை பன்னி பார்த்தால், இந்த பரிசுத்த ஆவியின் கொடை எப்படி யேசுவை ஆவியால் அவரை இறைவனில் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றார் என்பது புரியும். அதற்கு அடுத்ததாக சாத்தானின் சோதனை நடக்கிறது.

இதே மாதிரியாகத்தான் நமக்கும் நடக்கிறது. புதிய விசுவாசத்தில் நாம் அதிகம் வளர்ப்பதற்கான ஆயத்தங்களில் இருக்கும்போதும், அல்லது, கடவுளின் விருப்பத்திற்கு இணங்க, அவர் இறையரசிற்காக, நமக்கு அழைப்பு விடுக்கப்படும்போது, நம்முடைய விசுவாசத்திர்கும், மனப்புர்வமான விருப்பத்திற்கும் சோதனை உண்டாகின்றது. எனினும், இப்படி ஒரு சோதனை வந்தால் தான், நம்முடைய விசுவாசம் தீவிர விசுவாசமானது என நமக்கு தெரியும். நமது ஆன்மீக வாழ்வு நல்ல முதிர்ச்சி அடைந்திருக்கிறது என்று எப்படி நமக்கு தெரியும்? நாம் எப்படி இறையரசிற்கு இறைசேவை செய்து மார்றத்தை உண்டாக்கலாம், அதற்கு நாம் தயாராய் இருக்கிறோம் என்பதை நாம் எப்படி அறிவோம்.

சில நேரங்களில், நம் உணர்வுக்கு தெரியாமலே, நமது புது விசுவாச வளர்ச்சி, போதுமானதாக இல்லை நாம் முடிவுக்கு வந்து விடுகிறோம். நமக்கு சோதனை வந்தால், நாம் சாத்தானிடம் தோற்றுவிடுவோம் என்று எண்ணி, நமது விசுவாச வளர்ப்பில் நாம் அப்படியே தேங்கி நிற்கிறோம். கிறிஸ்துவோடு சேர்ந்து இறையரசிற்காக நாம் உழைப்பதற்கு ஈடுபடுவதில்லை. நமது ஆன்மீக வாழ்வில் உயர்வதில்லை ?

மேலும் பல சோதனைகள்!


இந்த தவக்காலத்தில் தான், நமக்கு தினமும் வரும் சோதனைகள் என்ன என்று நாம் சிந்தனை செய்ய சரியான தருனம். விசுவாசத்தில் நாம் வளர தடையாக இருக்கும் சோதனைகள் யாவை என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாம் ஒவ்வொரு முறையும் நமது பாவத்திற்காக ஆண்டவரிடம் மண்னிப்பு கேட்கும்பொழுது, நாம் இன்னும் வலிமை அடைகிறோம். மேலும் ஒரு அடி எடுத்து, பாவசங்கீர்த்தனம் செய்யும் போது, பங்கு தந்தை மூலம் ஆண்டவர் நமக்கு நிறைய அருளை பொழிந்து , அந்த கொடையால், உங்களுக்கு வரும் சோதனைகள் அனைத்தும் வலிமையிழந்து போகும்.

இந்த உலகில் சாத்தானை ஒழிக்க வேண்டும் என்ற கடவுளின் நோக்கத்திற்கு நாம் துனையாக இருக்க இப்படி நடந்து கொண்டால் முடியும்.
சோதனகள் எல்லாம் கடவுளின் ஆசிர்வாதமாக நினைத்துபார். உங்கள் வாழ்க்கையை புனிதபடுத்தி கொள்ள ஒரு வாய்ப்பாக பயனபடுத்திகொள். யேசுவை போல மாற இது உதவும். மேலும் விசுவாசத்தில் வளர உதவும்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, February 20, 2009

பிப்ரவரி 22, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 22, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 7 வது ஞாயிறு

Is 43:18-19, 21-22, 24b-25
Ps 41:2-5, 13-14
2 Cor 1:18-22
Mark 2:1-12

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 2
1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ' மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்.6 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?7 இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?9 முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,11 ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார்.12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், ஒரு முடவனை வீட்டின் கூரை மேல் ஓட்டை போட்டு கீழ் இறக்கி யேசுவிடம் கொண்டு சென்றதையும், அவரின் நண்பர்களால், அவர் யேசுவிடமிருந்து குணம் பெற்றார் என்பதை பார்க்கிறோம். .

கடவுள் நாமெல்லாறும் கடினமான வாழ்வை சந்தித்து அதில் உழன்று வரவேண்டும் என எப்போதுமே நினைப்பதில்லை. மேலும், கிறிஸ்துவ குழுவின் மூலம் நமது ஜெபங்களுக்கு பதிலும் அருளும் தருகிறார். மற்றவர்கள் நம்மை கட்டி பிடிக்கும்போது, யேசு நம்மை அவர்கள் மூலம் அரவணைக்கிறார். நாம் யேசுவை அவரின் திவ்ய நற்கருணையின் மூலம் இந்த பூமியில் அறிந்து அனுபவிக்கிறோம். அது எப்படியென்றால், தூரத்தில் இருப்பவர்களை நாம் எப்படி போன் மூலமும், குறுஞ்செய்தி மூலமும் நெருங்கி இருக்கிறோமோ அப்படி கிறிஸ்துவை, நமது பங்கு குழுவினரிடமிருன்ந்தும், நற்கருணை வழிபாடு மூலமாக அவரோடு நெருங்கி இருக்கிறோம்.

நாம் விசுவாசத்தில் மிகவும் விரைவில் முன்னேற்றம் அடைகிறோம். மிகவும் ஆழமாக குணமடைகிறோம். மேலும், எப்படி கடவுளை விசுவசிப்பது என்பதனை கற்று அறிகிறோம். நாம் அவரை தேடுவதிலும், அவரை கண்டடைவதிலும், கிறிஸ்துவின் நண்பர்களின் மூலம் பெறும் அன்பிலும் நாம் மேலும் வளர்வோம். இதனையெல்லாம் அடைவதற்கு, நாம் நமக்கு உள்ளதெல்லாம் போதும், என்ற சுய கொளரவத்தை விட்டு, மற்றவர்கள் நமக்கு என்ன கொடுக்க விருபுகிறார்களோ, அதனை நாம் ஏற்கவேன்டும்.

உங்களை பாயில் வைத்து யேசுவிடம் தூக்கிகொண்டு போக, நெருங்கிய நான்கு நன்பர்கள் இருக்கிறார்களா? அப்படிபட்ட நன்பர்களை கண்டறிய, நாம் பங்கு குழுவுடன் சேர்ந்து, அவர்களோடு இறைபணியிலும், சமூக பணியிலும் ஈடுபட வேண்டும். உங்கள் பங்கில், நிச்சயம் நிறைய வாய்ப்புகள் இருக்கும், திருப்பலி திருப்பணிகள்,சமூக பணிகள் , மற்றும் பலருடன் சேர்ந்து சந்தோசமாக பல பணிகளில் ஈடுபடலாம்.

எந்த ஒரு குழுவிலும் இல்லாமல், நாம் கடவுளோடு நல்ல உறவுடன் இருப்பதாக சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நல்ல விசுவாசம் கொண்ட குழுவோடு , பல பேருடன் சேர்ந்து கடவுளை அடைவதில் தான் நாம் ஈடுபட வேன்டும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, February 13, 2009

பிப்ரவரி 15, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 15, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 6வது ஞாயிறு

Lev 13:1-2, 44-46
Ps 32:7, 1-2, 5, 11
1 Cor 10:31--11:1
Mark 1:40-45

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்

அதிகாரம் 10
31 அதற்கு நான் சொல்வது: நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்.32 யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்.

மாற்கு நற்செய்தி
40 ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ' நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ' என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.41 இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ' நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ' என்றார்.42 உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.43 பிறகு அவரிடம், ' இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.44 நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.45 ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

(thanks to www.arulvakku.com)



இன்றைய இரண்டாவது வாசகத்தில், மிக பெரிய நீதி மொழியை கூறுகிறது. அதனை உங்கள் கண்ணாடி முன் ஒட்டி வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் கண் விழிக்கும் ஒவ்வொரு கணமும் நீங்கள் அதனை பார்க்க வேண்டும்: " எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்"

எல்லா செயல்களையும்! கடவுளின் மகிமைக்காகவே செய்யுங்கள். பல் துலக்கும் போது கூட கடவுளின் மாட்சிமைக்காக செய்யுங்கள்!. உங்கள் குடும்பத்தினருக்கு , கடவுளின் மகிமைக்காக முத்தம் கொடுங்கள். (என்னவென்றால், உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று பார்ப்பதை விட), உங்கள் வேலைகளை கடவுளின் மாட்சிக்காக செய்யுங்கள். கார் ஓட்டும்போது, அமைதியாக, மெதுவாகவும், கடவுளின் மாட்சிக்காக ஓட்டுங்கள். பொருட்கள் வாங்கும்போது, உணவு அருந்தும் போதும், மற்றவர்களை நோக்கி நேசத்துடன் பழகும்போதும், கடவுளின் மகிமைக்காக, அவரது புகழுக்காகவும் செய்யுங்கள். நமது பங்கின், திருச்சபையின் தேவைக்காக , ஆம் என்று சொல்லி கடவுளின் மாட்சிமைக்காக செய்யுங்கள். கடவுள் உங்களுக்கு கொடுத்த எல்லா திறமைகளையும், அன்பளிப்புகளையும் (சம்பாதிக்கும் பணம, உங்கள் வேண்டுதல்களுக்கு கிடைத்த கொடைகள், நல்ல நேரங்கள்) அனைத்தையும் கடவுளின் மாட்சிமைக்காக செய்யுங்கள்.


இந்த ஜெபத்தை, தினமும் ஜெபியுங்கள்: "பரிசுத்த ஆவியே, இன்று செய்யும் எல்லா செயல்களும், கடவுளின் மாட்சிமைக்காக செய்ய உதவி செய்தருளும்! ஆமென்!"

இதனை நீங்கள் தினமும் செய்வதால், உங்கள் நற்குணமாக்கும். நாம் நமது தின நடவடிக்கைகளை ஒரு கன்னாடி முன் அமர்ந்து பார்த்தால், "நீங்கள் எதனை செய்தாலும், கடவுளின் மாட்சிமைக்காக செய்யுங்கள்" என்ற போதனை உங்களுக்கு நினைவுறுத்தும். நாம் பாவங்களை உதறி தள்ளுவதில் இன்னும் உறுதியடைவோம். ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கனமும் சுத்தமாகும். ஒவ்வொரு கனமும் ஆசிர்வதிக்கபடும்.

சமய நடவடிக்கைகளை, நாம் எப்போதுமே பிரித்தே பார்க்கிறோம். நமது தின நடவடிக்கைகளில், சில நேரம் ஒதுக்கி நாம் கோவிலுக்கு செல்கிறோம். நாம் ஜெபம் செய்யும்போது, மற்ற வேலைகளை நிறுத்தி விடுகிறோம். ஒருவர் ரொம்பவும் பக்தியாக இருக்கும்போது, அவரை பக்தி வெறி கொண்டவர் என்று நினைக்கிறோம். ஏன்?

திருப்பலியில் பங்கு கொள்ளுதல், சமய சடங்குகளில் கலந்து கொள்ளுதல், ஜெபங்கள், கோவில் பணிகளில் பங்கு கொள்வது மட்டும் தான், பரிசுத்தமானது என்றும், கடவுளின் மாட்சிமைக்காக செய்கிறோம் என்று நாம் நினைத்து கொள்கிறோம். நாம் ஒவ்வொரு கனத்தையும், நாம் புனிதமாக்கி கொள்ள முடியும். எப்படியெனில், நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும், கடவுளை மகிமைபடுத்தவதற்காக செய்தால். !

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, February 6, 2009

பிப்ரவரி 8, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 8, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5 வது ஞாயிறு

Job 7:1-4, 6-7
Ps 147:1-6
1 Cor 9:16-19, 22-23
Mark 1:29-39

யோபு

அதிகாரம் 7
1 மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே?2 நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும்,3 வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன: இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.4 படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்: விடியும்வரை புரண்டு உழல்வேன்,5 புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின என் உடலை: வெடித்தது என் தோல்: வடிந்தது சீழ்.6 என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன: அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.7 என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்: என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்

அதிகாரம் 9
16 நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!17 இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது.18 அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு: நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.19 நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.20 யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு யூதரைப் போலானேன். நான் திருச்சட்டத்திற்கு உட்படாதவனாயிருந்தும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர அச்சட்டத்திற்கு உட்பட்டவர் போலானேன்.21 திருச்சட்டத்திற்கு உட்படாதவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர திருச்சட்டத்திற்கு உட்படாதவர் போலவும் ஆனேன். ஆனால் நானோ கடவுளின் சட்டத்திற்கு உட்படாதவனல்ல: ஏனெனில் நான் கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவன்.22 வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.23 நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1
29 பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.30 சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.31 இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.32 மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.33 நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.34 பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.35 இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.36 சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.37 அவரைக் கண்டதும், ' எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ' என்றார்கள்.38 அதற்கு அவர், ' நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் ' என்று சொன்னார்.39 பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.

(thanks to www.arulvakku.com)

http://www.gnm.org


இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இரண்டாவது வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது நான் செய்யும் இறைசேவையை சுட்டி விளக்குவது போல் உள்ளது.

நான் நற்செய்தியை அறிவிப்பதால், பலருக்கு விளக்கி சொல்வதால், நான் அதனை பெரிதாக அலட்டி கொள்ள தேவையில்லை,
இதனை நாம் செய்துதான் ஆகவேண்டும், அந்த சேவையை செய்ய வேண்டும் என எனக்கு கட்டளையிடப்படவில்லை.
நான் நற்செய்தியை அறிவிக்கவில்லை என்றால், எனக்கு தான் மிகவும் வேதனையாகும்.
நான் மிகவும் விருப்பபட்டு செய்தால், எனக்கு ஒரு கைமாறு உண்டு.
நான் அதனை விருப்பமின்றி செய்தால், எனக்கு அது நிர்வாகத்தினால் ஒப்படைக்கப்பட்டது போல் ஆகும்.
எனக்கு என்ன கைம்மாறு?
நான் நற்செய்தியை அறிவிக்கும்போது, அதனை இலவசமாக செய்யும்போது அதன் மூலம் கிடைக்கும் மனநிறைவே!

அதனால் தான், நாம் இந்த இறைசேவை செய்ய அன்பளிப்புகளை எப்போதாவது தான் கேட்கிறேன். என்னுடைய இணையதளத்தில் கடைசி பகுதியில் அன்பளிப்பிற்கான இணைப்பை கொடுத்திருக்கிறேன். அதனை கவனித்து உள்ளீர்களா? இந்த இறைசேவை மையத்தின், பொருளாதார நிலை தொய்வு அடையும்போது தான், நாம் மற்றவர்களிடம் கேட்கிறேன். சில நேரங்களில்,எனது நண்பர்கள், இந்த மாதிரியான் நிதி வாங்கும் நிகழ்ச்சிகளை அடிக்கடி செய்ய சொல்வார்கள். இந்த கொரிந்தியார் வாசகத்தினால் தான், நான் அதிகமாக நிதி வசூல் செய்வதில்லை. இந்த நிறுவனத்திற்காக, நிதி வசுல், அதனுடைய திட்ட அறிக்கைக்காக இல்லாமல், பரிசுத்த ஆவியான எத்தனை பேரை இதற்கு நிதி கொடுக்க துண்டுகிறார் என்பதனை பொறுத்தது.

தூய பவுலானவர், கடவுளின் நற்செய்தியை அறிவிக்க, நிதி வசூல் செய்வதை தவறில்லை என்று கூறுகிறார். யேசுவே கூட, வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் (லூக்காஸ் 10:7) என்று கூறுகிறார். ஆனால், தூய பவுலுக்கு தெரியும், கடவுள் கொடுத்த எல்லா அன்பளிப்புகளாலும், அவருக்கு நல்ல ஊழியனாக இருப்பதே மிகவும் முக்கியமானது.

கிறிஸ்துவின் இறைசேவையை நாமெல்லாம், தொடர வேண்டும் என நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு நாம் கடமைபட்டிருக்கிறோம். இந்த நவநாகரிக உலகிற்கு நாம் செய்ய வேண்டும். ஒரு கிறிஸ்தவர், இந்த இறைசேவையில் ஈடுபடவில்லையென்றால், அவருடைய விசுவாசம் சோம்ப்லானது ஆகும். அந்த விசுவாசத்தில் ஓர் உயிர் இல்லை என்று அர்த்தம். உங்களுக்கு கிடைத்த அன்பளிப்புகளை, திறமைகளை, அறிவை, இரக்கத்தை, மற்றும் எல்லாவற்றையும், மற்றவர்களின் விசுவாசம் வளர உபயோகப்படுத்துங்கள். உங்களுக்கு அதனால் உடனே கிடைக்கும் கைம்மாறு, யேசுவோடு சேர்ந்து நாம் கடவுளரசிற்காக சேவை செய்கிறோம் என்று நினைக்கும்போதே பேரானந்தம் ஆகும்.

இன்றைய நற்செய்தியில், பீட்டர் அவர்களின் மாமியாரின், தாராள மனதை காட்டுகிறது. அவர் வீட்டிற்கு வந்த அனைவரையும், மனம் குளிர வரவேற்று அவர்களுக்கு தேவையானதை செய்தார். அது அவருக்கு கிடைத்த திறமை ஆகும், அதனை கிறிஸ்துவிற்காக செய்தார். மேலும், யேசு நற்செய்தியை எல்லா இடத்திலும் அறிவிக்க ஆவலாய் இருந்ததையும், தொய்வின்றி எந்த ஒரு கலைப்புமின்றி இருந்ததையும் காட்டுகிறது. இவை இரண்டுமே ஒரு உழியனுக்கு தேவையானது என எடுத்து காட்டுகிறது. எல்லா அன்பளிப்புகளும், நமக்கு கிடைக்கும் பண வரவும், கடவுளின் ஆசிர்வாதங்கள் , அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, January 30, 2009

பிப்ரவரி 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4 வது ஞாயிறு

Deut 18:15-20
Ps 95:1-2, 6-9
1 Cor 7:32-35
Mark 1:21-28

அதிகாரம் 1
21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24 அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25 ' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார்.26 அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28 அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறு நற்செய்தி, யேசுவின் அதிகாரத்தை தெளிவுபடுத்துகிறது. நாமும் அவருடைய அதிகாரத்தை புரிந்து கொண்டு, அதனை ஏற்றுகொண்டால், நாம் இறைவனில் மகிழ்ச்சியோடு இருக்கலாம், என்ன கஷ்டம் நமக்கு வந்தாலும், நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்ளலாம். ஏன்? ஏனெனில், அவருடைய அதிகாரம் தான் எல்லாவற்றிற்கும் மேலானது என்று நமக்கு தெரியும். அதன் அர்த்தம் என்னவென்றால், அவர் அதிகாரத்தின் கீழ் இருக்கும் எல்லாமே, கெட்டதாக இருந்தாலும், நல்லதாக மாற்றப்படும். சோகத்தில் முடியும் எந்த ஒரு நிகழ்வும், வெற்றியாக மாற்ற்ப்படும். கவலைகள் சந்தோசமாக மாறும். செயலற்று போகும் நிலை, நமக்கு புது வளர்ச்சிக்கு திறவுகோலாக மாறும். புதிய அறிவாற்றலையும், மற்றவர்களை மனம் மாற்றக்கூடிய செயல்கள் செய்ய புதிய தெம்பையும் தரும்.

எனினும், கிறிஸ்துவின் அதிகாரத்தை நாம் நிராகரித்தால், (நாம் தான் நமது செயல்களுக்கு பொறுப்பானவர்கள் என்று நினைத்து கொண்டு, நமது ப்ரச்னைகளுக்கு முடிவெடுப்பதிலும், கடனமான தருனத்திலிருந்து வெளியே செல்ல நினைப்பதும்) இன்னும் ப்ரச்னையை தீவரப்படுத்தும்.

சந்தோசத்தின் வழியானது யேசுவின் காலடிதடங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தீயனவற்றிற்கும், நமது துன்பங்களிலிருந்து வெளியே வர , நாம் கிறிஸ்துவின் அதிகாரம் மூலம், பயன் பெற, நாம் அவருடைய முன் மாதிரியை பார்த்து பின செல்லவேண்டும் மேலும், அவரது போதனைகளின் படி வாழவேன்டும்.இதன் அர்த்தம் என்ன வெனில், நாம் அவரை நம்ப வேண்டும். அவருடைய வழிகள் தான் சரியானவை என்று புரிந்து கொண்டு, (கொஞ்சம் கடினமாக இருந்தாலும்), அதன்படி நடக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால், யேசு யேசுவின் உயிர்ப்பை நாமும் யேசுவோடு சேர்ந்து அடைய விருப்பமாக உள்ளோம் என்று அர்த்தம்.

வெற்றியடைய, எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை. தீயவைகளை வென்றிட எந்த ஒரு சுலபமான வழியும் இல்லை. இவைகள யாவும் உன்மை இல்லையெனில், யேசு ஏன் சிலுவையில் இறக்க வேண்டும்?

நல்ல செய்தி - நாம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு என்ன காரனமெனில் - மிகவும் அதிகம் அன்பு செய்கின்ற, மிகவும் ஆற்றலுடைய, அதிக ஞானமுடைய கடவுள் அவருடைய வானளாவிய அதிகாரத்தை நமக்காக உபயோகிகிறார். கேள்வி என்னவென்றால்:நீங்கள் உங்களை அவர் முன் (அதிகாரத்தின்) சமர்ப்பீர்கள?

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, January 23, 2009

ஜனவரி 25, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 25, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3 வது ஞாயிறு


The Feast of the Conversion of Saint Paul
Acts 9:1-22 (or Acts 22:3-16)
Ps 117:1bc, 2 (with Mark 16:15)
1 Cor 7:29-31
Mark 16:15-18

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் பணி)

அதிகாரம் 9
1 இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி,2 இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.3 இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.4 அவர் தரையில் விழ, சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.5 அதற்கு அவர், ஆண்டவரே நீர் யார்? எனக்கேட்டார். ஆண்டவர், நீ துன்புறுத்தும் இயேசு நானே.6 நீ எழுந்து நகருக்குள் செல்: நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.9 அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.10 தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, அனனியா என அழைக்க, அவர், ஆண்டவரே, இதோ அடியேன் என்றார்.11 அப்போது ஆண்டவர் அவரிடம், நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார் என்று கூறினார்.13 அதற்கு அனனியா மறுமொழியாக, ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்றார்.15 அதற்கு ஆண்டவர் அவரிடம், நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்.16 என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன் என்றார்.17 அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார் என்றார்.18 உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.19 பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார்.20 உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.21 கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன் தானே இவன் என்றார்கள்.22 சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், இயேசுவே கிறிஸ்து என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்.

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 16
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார்.



(thanks to www.arulvakku.com)


இன்றைய திருத்தூதர் பணிகளில் வரும் யூதாவும், அனனியாவும் சாதாரன மனிதர்கள். ஆனாலும், திருச்சபையின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர். ஏனெனில், திருச்சபையின் மிக பெரிய எதிரியாக இருந்தவருக்கும், மிகவும் கருனையுடன் பவுலுக்கு உதவு புரிந்தனர்.

முதலில், யூதா பவுலுக்காக அவருடைய வீட்டை மிகவும் அதிமுக்க்கியமான காரனத்திற்காக, திறந்தார். அப்படி திறந்தால், பல விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தெரிந்தும், கிறிஸ்துவின் மிக முக்கிஅ எதிரியாக இருந்த பவுலுக்காக திறந்து உதவினார்.

பிறகு அனனியா, அவர் வீட்டில் அமைதியாக ஜெபித்து கொண்டு இருக்கும்போது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, அனனியா என அழைக்க, அவர், ஆண்டவரே, இதோ அடியேன் என்றார்.11 அப்போது ஆண்டவர் அவரிடம், நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார் என்று கூறினார்


"கண்டிப்பாக செய்கிறேன், எப்படி நான் அவருக்கு உதவவேண்டும்" என்று அனனியா கேட்டார்.
"அவர் கன்கள் கட்டப்பட்டுள்ளன, நீ போய் அவரது கண்களில், உனது கையை வை, அப்போது அவர் கண்கள் திறக்கபடும்" என்று கூறினார்.

அனனியா இந்த செயலை செய்வதற்கு போதிய தகுதி இல்லாதவர். எனினும், யேசுவின் மூலமாக பல அருஞ்செயல்கள் செய்ய முடிந்ததால், அவர் இதனை ஏற்றார்.

"நான் செய்கிறேன், ஏற்கனவே, என் மூலம் நீங்கள் நோயுற்று இருப்போரை குணமாக்கி உள்ளீர்கள்" என்று கூரினார்.
"ஆமாம், ஆனால், நீ குணமாக்க வேண்டிய நபர் டார்சஸ் நகரின் சவுல் " என்று கடவுள் கூறினார்.
ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்றார்
அதற்கு ஆண்டவர் அவரிடம், நீ செல். என்று கூறினார். அனனியா சென்றார்.

யூதாவும், அனனியாவும் தூய பவுலை மனம் மாற்றினார்கள். யேசுவிற்காக அதனை செய்தனர். அதற்கு பிறகு நற்செய்தியில் அவரிக்ள் பெயர் குறிப்பிடபடவில்லை. அவர்கள் தூய பவுலுக்க என்ன செய்தார்களோ, அது அகில உலகிற்கும்,பெரிய நல்ல விளைவை ஏற்படுத்தியது. இன்றும் அதன் பலனை நாம் அனுபவித்து வருகிறோம். யேசு பவுலை மிகப்பெரிய இறைதூதராக , பலரை மனமாற்றுபவராக ஆக்குவதற்கு துனை நின்றார்கள்.

நாமும் அனைவரையும் மணமாற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். நாமும் தூய பவுலை போல, மிக பெரிய ப்ர்சங்கம் செய்ய வேண்டும் என்றோ, மிகபெரிய பேச்சாளரகவோ இருக்க வேண்டும் என்றில்லை. அல்லது, தினமும் நாம் செய்யும் முயற்சி, மணம் மாறுதலாக இருக்க வேண்டும் என்றில்லை.

மணம் மாற்றுதல் என்பது, தினமும் நாம் செய்கிற சாதாரன செயல்களில் யேசுவை போல் நாம் நடந்து கொண்டு, நம்மிடம் நற்செய்தி கேட்பவர்கள் ஆர்வம் கொண்டிருந்தால், அவர்களுக்கு யேசுவை நாம் வெளிப்படுத்தி, மணம் மாற்ற வேண்டும்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, January 2, 2009

ஜனவரி 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து பிறப்பின் இரண்டாவது ஞாயிறு

Sirach 24:1-4, 8-12
Ps 147:12-15, 19-20
Ephesians 1:3-6, 15-18
John 1:1-18
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 1
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. 'அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது' என்னும் சொற்றொடரை 'அவ்வாக்கு கடவுள் தன்மையும் கொண்டிருந்தது' எனவும் மொழிபெயர்க்கலாம். 2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.3 அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.4 அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.'இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதை 'இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை' எனவும் மொழிபெயர்க்கலாம். 6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8 அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்' என்னும் சொற்றொடரை 'அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்' எனவும் மொழிபெயர்க்கலாம். 12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.15 யோவான் அவரைக் குறித்து, ' எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன் ' என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.16 இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.17 திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன.18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்
(thanks to www.arulvakku.com)



கிறிஸ்துமஸ் விழாக்காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று, நாம் யேசுவை கடவுளின் வார்த்தை உருவாக பார்க்கிறோம். ஒவ்வொரு திருப்பலியிலும், வாசிக்கும் வாசகங்களிலும், யேசு நம்மிடம் வார்த்தையாக வருகிறார். கத்தோலிக்க திருச்சபை, நற்செய்தியை (பைபிள்) மையமாக கொண்டு அதனை வழி கொண்டு வாழும் திருச்சபையாகும். அதனால் தான், ஞாயிறு திருப்பலியில் நான்கு வாசகங்களும், மற்ற நாட்களில் 3 வாசகங்களும் வாசிக்கப்படுகின்றன. அந்த் வாசகங்கள் மூலம் நம்மை சிந்திக்க வைக்கின்றன.

யேசு நம்மிடம் பேசிகொண்டிருக்கிறார்! அதனால் தான் வாசகம் வாசிப்பவர்களுக்கு அதனை முழுமையாகக, அதிகாரத்துடனும் வாசிக்க வேண்டிய கடமை இருக்கிறது. யேசு நம்மிடம் பேசுகிறார்.! அதனால், நமக்கும் அதனை நன்றாக கவனிக்க வேன்டிய கடமை இருக்கிறது. மேலும் எதாவது ஒரு வார்த்தையோ அல்லது வாக்கியமோ உங்கள் புத்தி சஞ்சலமோ உண்டாக்கினால், கவனமாக கேளுங்கள், ஏனெனில், அந்த வார்த்தைகள் யேசு தான். அவர் முழுவதுமாக அங்கே ப்ரசன்னமாகயிருக்கிறார். உங்களுடன் தனியே பேசுகிறார். உங்கள் மனதில் ஏதாவது ப்ரச்னை இருக்கிறதா? அதனை பற்றிய் யேசு உங்களிடம் பேச விரும்புகிறார்.

சீராக் ஆகமத்தில், (24:1௪, 8- 12), எப்படி ஞாணம் (பரிசுத்த ஆவி) பேசுகிறது என கவனித்து கேளுங்கள். உங்கள் ப்ரச்னையை பற்றி இந்த வார்த்தைகளில் யேசு எவ்வாறு பேசுகிறார்?

இன்றைய பதிலுரையில், (திருப்பாடல்கள் 147: 12 - 15, 19 - 20 ) எவ்வாறு ஆண்டவரின் வார்த்தை விரைவாக வந்தது என்பதை நினைவுபடுத்துகிறது. கடவுள் கொடுக்கும் எல்லா கட்டளை அனைத்தும் அப்படியே உண்மையாக நிகழ்ந்தது. உமது இதயத்திற்கு தேவையான அமைதியை எப்படி கொடுப்பது என்று யேசு இங்கே யேசு குறிப்பிடுகிறார். இந்த பூமியில் தேவையான அனைத்து நல்ல பொருட்களையும் எப்படி நிரப்பினார் இங்கே குறிப்பிடுகிறார். உனது ப்ரச்னகள் இந்த சங்கீதத்தின் மூலம் எப்படி குறைக்கப்படுகின்றன?


எபேசியர் திருமுகத்தில் (1:3 - 6 , 15 - 18 ) , நமக்கு ஞானத்தின் அன்பளிப்பு (பரிசுத்த ஆவி) எவ்வாறு கொடுக்கபடுகிறது என்று கூறுகிறது. அதனால், கடவுளின் வார்த்தை நம்மிடைய நல்ல சிந்தனையை தூன்டி, அதனை புரிந்து கொள்ள உதவுகிறது. யேசுவின் ஒப்பற்ற அருளை பற்றி என்ன கூறுகிறார். விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். உனது ப்ரச்னைகளுக்கு இந்த அருளெல்லாம், எப்படி நம்பிக்கை கொடுக்கிறது. ?

யோவான் நற்செய்தியில் (1: 1 - 18 ), ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேளுங்கள், அதில் யேசுவின் ஒவ்வொரு தகுதியும், குனாதிசயங்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது. உனது அழிவிலிருந்து (ப்ரச்னையினால்), யேசு உனக்கு எப்படி வாழ்வு கொடுக்கிறார் என்பதை பார். இருளில், அவர் எப்படி உண்மையின் ஒளியாய் இருக்கிறார்? நீ கடவுளின் குழந்தையாய் இருப்பதால், உனக்கு எப்படி நம்பிக்கையை கொடுக்கிறது?

கடவுள் என்னவெல்லாம் பேசுகிறாரோ, அது எல்லாம் யேசுதான். கடவுள் நம் வாழ்வை பேசிதான் உண்டாக்கினார். மேலும் யேசு அவரையே தியாகம் செய்து, அழிவின் வாழ்விலிருந்து, நித்திய வாழ்வை நமக்கு கொடுத்தார்.

எப்போழுதெல்லாம் நீ கடவுளிடம் உதவி கேட்கிறாயோ? அவர் "ஆம்" என்று தான் சொல்கிறார். அவர் குறிப்பிடுவது. யேசுவை தான். யேசு உன்னோடு நடந்து கொண்டு, கடவுள் உனக்கு கொடுக்க விரும்பியதையெல்லாம் கொடுக்கிறார்.



நற்கருணை திருவழிபாட்டில், "கடவுளே உம்மை பெற நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆன்மா குனமடையும்" என்று வேண்டுகிறோம். கடவுள் இவ்வாறு பதில் கூறுகிறார். "ஆம், என்னை ஏற்று கொள்", யேசுவை தான் , நாம் ஏற்று கொள்கிறோம். அந்த யேசுவில், கடவுளின் எல்லாவற்றையும் நாம் பெறுகிறோம். யேசுவால் நாம் குணமடைகிறோம். நாம் கோவிலில் உள்ளே செல்லும்போது, யேசுவை பெற்ற பின் நாம் மாறுதலுக்கு உண்டாகி கோவிலை விட்டு வெளியே வருகிறோம். என்ன மாறுதலை நீ எதிர்பார்த்து அப்படி ஆக வேண்டும் என நினைக்கிறாய்?


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm