Saturday, June 29, 2013

ஜூன் 30, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூன் 30, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு

1 Kings 19:16b, 19-21
Ps 16:1-2, 5, 7-11
Gal 5:1, 13-18
Luke 9:51-62

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9: 51-62
5. எருசலேம் நோக்கிப் பயணம்
இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியர்
51 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,52 தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.54அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள்.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள்
(மத் 8:19 - 22)
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.58 இயேசு அவரிடம்,' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.59இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார்.60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார்.61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார்.62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.
(Thanks to www.arulvakku.com)

உங்களை யாராவது  நிராகரீக்கும்  பொழுது, அதனை எப்படி கையாள்வீர்கள்? இன்றைய ஞாயிறின் நற்செய்தி, சீடர்கள் எப்படி அவர்களுக்கு ஏற்படும் மறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று பார்க்கிறோம். இயேசுவிற்கு முன் சமாரியர்களின் ஊருக்கு செல்கிறார்கள். ஏனெனில், இயேசு அவர்களிடம் கூறி மக்களை சந்திப்பதற்கு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார். ஆனால் சமாரியர்களோ, இயேசு எருசலேம் செல்லவிருப்பதை தெரிந்து கொண்டு, இயேசுவை வரவேற்க அவர்கள் தயாராகவில்லை. இயேசு அங்கேயே தங்கினாலும் தங்குவார் என்ற எண்ணத்திற்கு அவர்கள் இதயத்தில் விதைக்காமல் மூடிவிட்டார்கள். அதனால் மெசியாவுடன் அருகில் இருக்கும் வாய்ப்பை அவர்கள் தவறவிட்டனர்.

உங்களுக்கு மிகவும் நெருங்கிய ஒருவர், இயேசுவை அவர்களுக்கு கொண்டு வர செய்யும் எல்லா முயற்சிகளுக்கும் நிராகரிப்பை கொடுத்தால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்?   நீங்கள் சொல்வதை யாரும் காது கொடுக்க கேட்கவில்லையென்றால், உங்கள் எண்ணம் எண்ணவாக இருக்கும்.? அல்லது திருச்சபையின் போதனையை நீங்கள் விளக்கி சொல்ல முற்படும்பொழுது, அவர்கள் அதற்கு புரிந்து கொள்ளவில்லையென்றால்?


நம்மை போலவே, இயேசுவுடன் சென்ற சீடர்களும்,  நிராகரிப்புகளை விரும்பவில்லை. இயேசுவின் நெருங்கிய சீடர்கள் ஜேம்ஸும், ஜானும், இயேசுவிற்கு உதவி செய்வது போல, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள். இயேசு அவர்களீடம் ஏற்கனவே, யாராவது உங்களை நிராகரித்தால், உங்கள் காலனிகளில உள்ள தூசை தட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இயேசு என்ன சொன்னாரோ, அதனை தன் வாழ்வில் கடைபிடித்தார். அந்த சமாரியர்களிடமிருந்து, ஒதுங்கி வேறு இடத்திற்கு  சென்றார்.  இயேசுவின் நம்பிக்கைகளை, அந்த கிராமத்தினரிடம் தினிக்க விரும்பவில்லை. அவர்களுக்கு தேவையான  நீதிகளை இயேசுவால் போதித்திருக்க முடியும்.  ஆனால் இயேசு அதனை செய்யவில்லை.

இயேசுவின் பின் செல்ல நாம் அதிகம் விட்டு கொடுக்க வேண்டும். நம்மை நிராகரிப்பவர்களின் மேல், உள்ள கோபத்தையும், விட்டு விட வேண்டும்.  நம் எண்ணத்திற்கு, நாம் ஏன் கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும்.? நம் காலணிகளில் உள்ள தூசை தட்டிவிடுவது என்றால், நமது மகிழ்ச்சியை, குலைக்கும் எதையும்  நாம் தூர எறிந்துவிட வேண்டும்.


இந்த நற்செய்தியின், முடிவில், இயேசு, அவரை பின் செல்வது என்பது முன்னோக்கி தான் பார்க்கவேண்டும், திரும்பி பார்க்க கூடாது. என்று கூறுகிறார். நாம் எப்பொழுதுமே, ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஒதுங்கி , நிராகரிப்பிலிருந்திலிருந்து, அன்பில்லாதவர்களிடமிருந்தும், தனது இதயத்தை மூடியே வைத்திருப்பவர்களிடமிருந்தும். விலகியே செல்ல விரும்புகிறோம். அங்கிருந்து விலகி கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்க செல்கிறோம்.

முன்னோக்கி செல்ல, பரிசுத்த ஆவிதான் நமது இதயத்தை தயார் செய்து, இயேசுவை நம்மில் வரவேற்க ஆயத்துபடுத்துவார் என்பதை நினைவில் கொள்வோம். நாம் சிலருக்கு இயேசுவை கொண்டு வர, முயற்சி செய்து, அதில் தோற்றால், உண்மையிலேயே, நாம் தோற்கவில்லை, இப்பொழுது தான் நாம் விதையை விதைக்கிறோம், பரிசுத்த ஆவியானவர், அறுவடை செய்யும் வேலையை செய்யட்டும், நாம் அடுத்த வயலுக்கு செல்வோம்.

© 2013 by Terry A. Modica


Friday, June 21, 2013

ஜுன் 23, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 23, 2013 ஞாயிறு  நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9:18-24
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மத் 16:13 - 19; மாற் 8:27 - 29)
18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? ' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மத் 16:20 - 28; மத் 8:30; 9:1)
22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24 ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

(thanks to www.arulvakku.com)

“நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?”  இந்த கேள்வியை தான் இன்றைய ஞாயிறின் நற்செய்தியில் நம்மை நோக்கியும் எழுப்படுகிறது: உங்கள் வாழ்க்கை, இயேசு தான் கடவுள், மெசியா, மீட்பர் என்று உரத்து சொல்கிறதா? அவர் தான் அன்பின் வடிவம், போதகர், மேய்ப்பர் என்று உங்கள் வாழ்க்கை மூலமாக காட்டுகிறீர்களா? ஒவ்வொரு தருணத்திலும் இது நடக்கிறதா?

உங்கள் வாழ்வு நன்றாக இருக்கும்பொழுது, இயேசு தான், இவ்வாழ்க்கையை ஆசிர்வதித்து கொடுத்துள்ளார் என எல்லோரிடமும் சொல்கிறீர்களா? நீங்கள் மற்றவரால் காயப்படும்பொழுது, இயேசு உங்கள் மன வேதனையை, வலியை எடுத்து கொண்டார் , காயப்படுத்தியவரின் பாவத்தை இயேசு சிலுவைக்கு எடுத்து சென்றார் என்று எல்லோருக்கும் தெரியும்படி நடந்து கொள்கிறீர்களா?

வாயால் இயேசு தான் நமது கடவுள் என்று சொன்னாலும், நமது வாழ்வு அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறோம். நமது நடத்தையின் மூலம், நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை முறையாக கவனத்துடன் நடந்து காமிக்க வேண்டும். தெளிவுடனும், வெளிப்படையாகவும், நமது செயல்களும், வாழ்வும் நடந்திட வேண்டும். எங்கே  நாம் தவறி விடுகிறோம் என்பதை கவனமாக பார்க்க வேண்டும். நம் உள்ளே உள்ள மன வலியாலும், பயத்தினாலும், ஆறாத வடுக்கலாலும் தான் நாம் பாவம் செய்கிறோம். அதனால் ஏற்படும் எதிர்வினையால் தான் நாம் பாவம் செய்கிறோம். நமது நடத்தையில் உள்ள குறியீடுகளை, துப்புகளை உற்று நோக்கி, அதனை பரிசோதித்து, நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், இயேசு உண்மையிலேயே யார் என்பதனை அறிந்து, அவர் கொடுக்கும் அன்பை அனுபவித்து, நமது குறைகளை நீக்கும் வாய்ப்பிற்காக நாம் உபயோகிப்போம்.


“என் வாழ்வு உண்மையாகவே இயேசுவை உலகிற்கு காட்டுகிறதா? இந்த கேள்வியை நாம் தினமும் நாம் கேட்டு கொள்ள வேண்டும். அதன் பதில், நாம் எந்த விசயத்தில், அதிகம் கவனம் கொள்ள வேண்டும். என்பதை தெரியபடுத்தும். இதன் மூலம் நாம் ஏன் இன்னும் முழுமையாக மனம் திரும்பவில்லை என்பதையும் தெரியபடுத்தும். நமது வாழ்வு ஒன்றாகவும் வார்த்தை வேறாகவும் இருக்கும் பொழுது, நமது வார்த்தைகளை மக்கள் நம்புவதில்லை.

இயேசு யார்? உங்களை அவருக்கு மிகவும் நெருங்கிய உறவினர் போன்றும், உங்களை முழுதும் அக்கறை கொண்டவருமாக இருக்கிறார். உங்களுக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ, உங்களை முழுதும் அன்பு செய்கிறார். மேலும் எப்பொழுதுமே உங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அதனை நீங்கள் கண்டு அறியாமல் இருக்கும்பொழுதும், உங்களுக்கு உதவி செய்கிறார். உங்களை எப்பொழுதுமே ஒதுக்கியதில்லை.
இதனை நாம் ஓரளவிற்கு நம்பினாலும், எவ்வளவு கஷ்டமான சூழ் நிலை இருந்தாலும், அவரோடு இருக்கும்போது, நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். அவரின் உண்மையான அன்பை அறிந்து கொண்டு, அவரோடு நெருக்கத்துடன் இருக்கும் வாய்ப்பை உருவாக்கி கொண்டு, நமது அனுதின சிலுவையை சுமந்து கொண்டு, மற்றவர்களை அன்பு செய்து, அவர் பின் செல்வோம் .
© 2013 by Terry A. Modica


Saturday, June 15, 2013

ஜூன் 16, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 16, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 11ம் ஞாயிறு
2 Sam 12:7-10, 13
Ps 32:1-2, 5, 7, 11
Gal 2:16, 19-21
Luke 7:36–8:3
லூக்கா நற்செய்தி
பாவியான ஒரு பெண் நறுமணத் தைலம் பூசுதல்
(மத் 26:6 - 13; மாற் 14:3 - 9; யோவா 12:1 - 8)
36 பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.39 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ' இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.40 இயேசு அவரைப் பார்த்து, ' சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் ' என்றார். அதற்கு அவர், ' போதகரே, சொல்லும் ' என்றார்.41 அப்பொழுது அவர், 'கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். 42 கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்? ' என்று கேட்டார்.43 சீமோன் மறுமொழியாக, ' அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன் ' என்றார். இயேசு அவரிடம், ' நீர் சொன்னது சரியே ' என்றார்.44 பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ' இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.45 நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.46 நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.47ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர் ' என்றார்.48பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ' உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன 'என்றார்.49 ' பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்? ' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.50இயேசு அப்பெண்ணை நோக்கி, ' உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க ' என்றார்.

இயேசுவின் பெண் சீடர்கள்
1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)

நீங்கள் எப்போதாவது உங்கள் பாவங்கள் எப்படி மன்னிக்கபடுகின்றன? என்று நினைத்து பார்த்தது உண்டா? நாம் எப்படி பாவ நிலையிலிருந்து ,  நியாய வாழ்வில் எப்படி மாறுகிறோம். நியாய வாழ்வு என்பது “ஓரளவிற்கு, நியாயமாகவும்” என்று அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில், சில நேரங்களில் நாம் தவறாக நடந்து விடுகிறோம். இயேசு மிகவும் பரிசுத்தமானவர், மிகவும் சரியான ஒருத்தர், நம் பாவங்களை சிலுவையில் எடுத்து சென்றார். அநியாயங்கள் எல்லாம், அங்கேயே இறந்துவிட்டன.
நீதி என்பது ஒரு சட்டத்தின் வார்த்தை ஆகும். இன்றைய நற்செய்தியோ, ‘சட்டத்தினால், பாவங்களை மன்னிக்க முடியாது; நம் பாவங்கள்   இயேசுவின் மீது நம்பிக்கையினால் மட்டுமே மன்னிப்பு பெற முடியும் “ என்று கூறுகிறது. ஒருவேளை சட்டத்தினால் மட்டுமே மன்னிப்பென்றால், இயேசு எதற்காக சிலுவையில் இறந்தார்.
இன்றைய நற்செய்தியில், இயேசு இதனை விளக்கி சொல்கிறார். பாவப்பட்ட பெண், அவளுடைய கண்ணீரால் இயேசுவின் பாதங்களை கழுவினார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. அவரின் மிகுந்த அன்பினால், அவரின் பாவங்கள் மன்னிக்கபட்டன. பாவங்களின் சக்தியிலிருந்து, மீள அன்பினால் மட்டுமே முடியும். அன்பினால் மட்டுமே நியாயமாக வாழ முடியும்.
நாம் எப்பொழுதும் அன்புடன் இருக்க தான் ஆசைபடுகிறோம், ஆனால் பாவத்தில் விழுந்து விடுகிறோம். சில நேரங்களில், மற்றவர்களை காயபடுத்துகிறோம், என்று  நாம் அறியாமலே பாவத்திற்கு விழுகிறோம்.
நாம் இயேசுவின் மேல் பார்வையை எடுத்து விடும் நேரத்தில், நாம் பாவம் செய்கிறோம். நம்முடைய கடந்த காலத்திலும், இப்பொழுதும் உள்ள எழுச்சியும், ஊக்கத்தாலும், நாம் உடனே எதிர்ப்பாக செயல்படுகிறோம். ஆனால், இயேசுவிடம் ஜெபம் செய்ய அதிக காலம் எடுத்து கொண்டால், அவரோடு இனைய முயற்சி எடுக்காமல் இருந்தால், நாம் நம்மையே கன்ட்ரோல் செய்கிறோம். ஆனால் நாமே, அன்பு செய்ய முயற்சிக்கலாம்.
நாம் அன்பை மட்டுமே நம்முடைய முதல் ப்ரதானமாக ஆக்க முயலும்பொழுது, நம் பாவம் செய்ய தூண்டும் ஆர்வம் குறைந்து விடும். மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வதால், நம் பாவ தூண்டல்கள் கொஞ்சம் குறையும். நம் பாவத்தின் மூலமாக மற்றவர்களை காயப்படுத்திவிட்டோமோ என்று நாம் நினைத்துவிட்டால், அல்லது கண்டுபிடித்து விட்டால், அன்பினால், நாம் அதனை அந்த காயத்தை குறைக்க முடியும்.  அதன் மூலம், கடவுளின்  நீதி தீர்ப்புக்குள் நம்மால் நுழைய முடியும்.
இயேசுவை போலவே நாம் மற்றவர்களை அன்பு செய்தால், நமது விசுவாசம், நம் மீட்பாக மாறுகிறது. இன்றைய நற்செய்தியில் வரும் பெண்ணிற்கு சொன்னது போல, “' உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” என்று யேசு நம்மிடமும் சொல்கிறார்

© 2013 by Terry A. Modica

Friday, May 31, 2013

ஜூன் 2 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 2 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா
Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17

லூக்கா நற்செய்தி
11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள்.14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார்.15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
(thanks to www.arulvakku.com)

“அன்பானது, இரண்டு மீன்களுக்கும், 5 அப்பங்களுக்கும் ஒப்பானது. அது சிறியதாக இருந்தாலும், கொடுக்க ஆரம்பித்த பின்பு, பல மடங்காக மாறிவிடும்.”  கலிலேயா கடலின் வடக்கு புறத்தில் உள்ள கோவிலில், இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான், இயேசு இந்த உணவை பல மடங்காக பெருக்கு அங்கே வந்தவர்கள் அனைவருக்கும் உணவு வழங்க்கினார்.


அந்த கோவிலின் பீடத்தில், மொசைக் கல்லினால் செய்யப்பட்ட பிரெட் துண்டுகளும், மீணும் உள்ளன. இது கி.பி, 480ம் ஆண்டு செய்யப்பட்டது. இயேசு அந்த உணவை ஆசிர்வதித்த மலைக்கு அருகிலேயே இந்த பீடம் உள்ளது. அந்த மொசைக் கல்லில் 4 ரொட்டி துண்டுகள் தான் உள்ளது. ஏன் 5 துண்டுகளுக்கு பதிலாக 4 இருக்கிறது. ?
அந்த 5வது ரொட்டி துண்டு தினமும் திருப்பலியில் திவ்ய நற்கருணையாக வருவதை குறிக்கிறது. இதனை இந்த வெப் சைட்டில் நீங்கள் பார்க்கலாம்.


இயேசுவின் உண்மையான இயற்கையான, ப்ரசன்னத்தைவிட , திவ்ய நற்கருணை மேலானது  கிறிஸ்துவின் உடலாக உள்ள திருச்சபையின் சமூகத்தை விட மேலானது. இது தெய்வீக அற்ப்தமாகும். பல மடங்காக பெருகும் கடவுளிடமிருந்து வர வேண்டிய எதுவும், திவ்ய நற்கருணையில், இயேசுவாக பரிசுத்த ஆவி மூலம் நாம் பெறுகிறோம். திருப்பலியில் நாம் பங்கு கொள்ளும் பொழுது, நாம் திவ்ய நற்கருணயாக பெறுகிறோம். அப்பொழுது, இயேசுவிடம், நம் குறைகளை களைந்து, தேவையான திறமைகளை பல மடங்காக பெருக்க அவரிடம் வேண்டுவோம்.

இயேசு நமக்கு தேவையானதை கொடுப்பார், அதையும் சரியான நேரத்தில், எந்த வழியில் கொடுக்க வேண்டுமோ, அவ்வழியில் கொடுப்பார் என்று நாம் நம்பலாம்.

உங்களுக்கு போதுமான அன்பு உங்கள் வாழ்வில் கிடைக்கிறதா? பெரும்பாலும் நாம் இல்லை என்று தான் சொல்வோம். கடவுளை தவிர யாருமே நமக்கு முழுமையான அன்பை கொடுப்பதில்லை. எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அவரின் அன்பு கடவுளின் அன்பிற்கு ஈடாகாது. அவர்கள் கிறிஸ்துவிற்கு நெருக்கமாக இருந்தாலும், கடவுளின் அன்பே மேலானது.

கடவுளின் தூய்மையான, முழுமையான அன்பு திவ்ய நற்கருணை மூலமாக நேரடியாக நமக்கு கிடைக்கிறது. இந்த திவ்ய நற்கருணையோடு நாம் எப்படி இனைவது என்று புரியாமல் நாம் இருப்பதால் தான், கடவுளின் முழுமையான அன்பை நாம் உணர்வதில்லை. திவ்ய நற்கருணை, மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் அன்பை குறிப்பதாகும். நீங்கள் போதுமான அன்பை பெறவில்லை எனில், அதிகம் அன்பை கொடுங்கள். எந்த அன்பை பெற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ, அந்த அன்பாக இருங்கள். மற்றவர்களுக்கு திவ்ய நற்கருணையாக இருங்கள்.

© 2013 by Terry A. Modica

Saturday, May 25, 2013

மே 26 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 26 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Rom 5:1-5
John 16:12-15

12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.
(thanks to www.arulvakku.com)

கடவுள் உங்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இருப்பதை உங்களால் உணர முடியவில்லை. நீங்கள் இயேசுவிடம் கேட்டு இன்னும் அவர் பதில் அளிக்காமல் இருப்பது எது?  திருச்சபையின் போதனைகளில், எது உங்களுக்கு புரியாமலோ அல்லது அதனை ஏற்று கொள்ளாமல் இருப்பது எது? இன்றைய நற்செய்தியில், இயேசு,
“' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.” என்ற் சொல்கிறார்.

ஏன் நம்மால் தாங்க இயலாது? ஏனெனில், முதலில் பரிசுத்த ஆவி நம்மை தயார் படுத்த அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்மில் முதலில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த மாற்றத்திற்கு நாம் அனுமதித்தால் தான், உண்மை நமக்கு கடினமாக தெரிந்தாலும், அது ஆசிர்வாதமாக ஆகும். ஆனால் நாம் இந்த மாற்றத்திற்கு அனுமதிப்பதை  மிகவும் தயங்கியே செய்கிறோம்.

இயேசு சொன்னது அனைத்தும், தந்தை கடவுளிடமிருந்து பரிசுத்த ஆவி மூலமாக வந்தது. கடவுள் அதே ஞானத்தையும், உண்மையையும், நமக்கு கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த அன்பளிப்பு, நாம் நம்மையே கடவுளுக்கு அர்ப்பனித்து, மாற்றத்தை உண்டாக்க  நாம் அனுமதித்தால் தான், நமக்கும் இந்த அன்பளிப்பு கிடைக்கும். மூவொரு கடவுள்களில், தந்தை கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார், அந்த மன்னிப்பை, இயேசு நமக்கு கொண்டு வருக்றார், பரிசுத்த ஆவியானவர், நம்மை தூய்மைபடுத்தி, பாவமில்லாமல் வாழ நமக்கு உறுதுனையாக இருக்கிறார்.

பாவ சங்கீர்த்தனத்தில், குருவானவர் இயேசுவின் ப்ரசன்னமாகவும், திருச்சபையின் முழு உடலாகவும் இருக்கிறார். பாவ மன்னிப்பு, பரிசுத்த ஆவியின் செயலாகும். இச்செயல், பாவங்களை மட்டும் கழுவாமல், பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்கவும் உதவுகிறார். பாவ சங்கீர்த்தன அருட்சாதனம், மூவொரு கட்வுளின் நேரடி செயலாகும், அவர்கள் மூவரும், நம் மணம் வருந்துதலை ஏற்ற்கொண்டு, நம் பரிசுத்த வாழ்வை இன்னும் மேம்படுத்துகின்றனர்.

இந்த அருளை பெறுவதற்கு, கடவுளோடு இனைந்து, நம்மை முழு மாற்றத்திற்கு தயார் படுத்த வேண்டும். தாழ்மையுடன் இருந்தால், போதனைகள் நம்மை மாற்றத்திற்கு கொண்டு ச்எல்லும்.
© 2013 by Terry A. Modica

Friday, May 17, 2013

மே 19, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 19, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தூய ஆவியாரின் பெருவிழா
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)


இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று இயேசு கூறுகிறார். அதுவும் இரண்டு முறை கூறுகிறார். முதலில், அவருடைய சீடர்களுக்கு, அமைதியின் அன்பளிப்பை கொடுத்து, அவர்களுடைய பயத்தை, கவலையை போக்குகிறார், அதன் மூலம், இயேசுவை அவர்களால் கண்டு கொள்ள முடிகிறது.

பிறகு, மீண்டும் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று கூறி, அவரின் இறைசேவையை அவர்கள் தொடர அவர்களை இவ்வுலகுக்கு அனுப்புகிறார். கடவுளுக்காக இவ்வுலகில் இறைசேவையை தொடர்ந்து பரிசுத்த ஆவியின் முழுமையான வாழ்வில் வாழ்ந்து அதன் பலனை பெற சீடர்களை அனுப்புகிறார்.

இதன் மூலம், இயேசு  நம்மோடு இருக்கிறார் என்று அறிந்து நாம் அமைதியுடன் கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால், இது ஒரு சவால் தான், இயேசுவை பற்றி மற்றவர்களிடம் பேசும்பொழுது, நாம் அமைதியாக இருப்பது, எவ்வித கலக்கமும் இல்லாமல் இருப்பது என்பது ஒரு சவால் தான். மேலும், நம்மை அவர்கள் கேலிக்குள்ளாக்குவார்கள், நிராகரிப்பார்கள் மற்றும், நமக்கு போதிய அறிவு கிடையாது என்றும் நாம் நினைத்து பயந்து ஒதுங்கலாம், இதற்காகதான், இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.

கடவுள் எதனை செய்ய சொல்கிறாரோ, அதனை செய்ய தேவையான அனைத்தையும், பரிசுத்த ஆவி நமக்கு தருகிறார். அதன் மூலம், நமக்கு எந்த குறையும் கிடையாது. மேலும், நம்மை நிராகரிக்கிறவர்களிமிடமிருந்து, நமக்கு தேவையான ஆறுதலையும், பாதுகாப்பையும் கொடுக்க கடவுள் தவறுவதில்லை.

வெளியில் என்ன நடந்தாலும், நம்மில் உள்ள்த்துக்குள், உள்ள ஆழ்ந்த அமைதி, நாம் பரிசுத்த ஆவியின் ஆற்றலுடன் இனைந்து இருப்பதன் பலனாகும். மற்றவர்கள் நமக்கு என்ன செய்தாலும், நற்செய்தியை அவர்களோடு பகிர்ந்து கொள்ளும்பொழுது, அவர்கள் எதிர்மறையான விமர்சனங்களுடன் எதிர்தாலும், நம்மில் ஒரு ஆழ்ந்த அமைதி பரிசுத்த ஆவியின் துனையுடன் இருப்போம். பரிசுத்த ஆவியின் வாழ்வதற்கான அடையாளம், நாம் அமிதியுடன் இருப்பது தான். அமைதி தான் பரிசுத்த ஆவியானவர் உயிர்ப்புடன் இருக்கிறார் என்பதை காட்டுகிறது.

நற்செய்தியின் முடிவில், இயேசு சீடர்களுக்கு (கத்தோலிக்க திருச்சபையின் முதல் குருக்கள்), பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கி , தெய்வீக ப்ரசன்னைத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று கூறுகிறார். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தை, உருவாக்கி, குருவின் மூலம், இயேசுவே நம்மில் வருகிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

இந்த பாவம் நிறைந்த உலகில், பரிசுத்த ஆவியின் ஆற்றல், நம்மை அமைதியோடு இருக்க செய்கிறது. மன்னிபது கூட நமக்கு கடினம் தான், ஆனால் கிறிஸ்துவின் ஆவியுடன் இனைந்து நம்மால் மன்னிக்க முடியும். நம்மை காயபடுத்துபவர்களை, நம்மால் மன்னிக்க முடியும். அவர்கள் திருந்தாவிட்டால் கூட, நம்மால் மன்னிக்க முடியாது.  பரிசுத்த ஆவி தான் நம்மை ப்ரச்சினைகளுக்கு இடையேயும், ஆழ்ந்த அமைதியை தருகிறது.
© 2013 by Terry A. Modica

Saturday, May 11, 2013

மே 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 7ம் ஞாயிறு
Acts 7:55-60
Ps 97:1-2, 6-7, 9
Rev 22:12-14, 16-17, 20
John 17:20-26
யோவான் நற்செய்தி,
அதிகாரம் 17:20-26
 20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். ' 24 ' தந்தையே, உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன். ' (thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி ஒற்றுமையின் நற்செய்தி. இயேசு விண்ணகத்திற்கு தன்னை அர்ப்பணித்து அதன் பிறகு, தன்னை சிலுவை மரணத்திற்கு அர்ப்பனித்தார். இயேசுவும் தந்தை கடவுளும் ஒன்றானது போல, நாம் ஒருவரோடு ஒருவர் ஒன்றாய் இருந்து ஒற்றுமையின் சாட்சியாய் – தியாகம் செய்து, நிபந்தனையற்ற அன்புடன், அர்ப்பணிப்போடு – கடவுளை போல நாமும் இருக்கிறோம் என்று இவ்வுலகத்திற்கு காமிப்போம். கடவுளின் அன்பு நிஜம் என்று இந்த உலகிற்கு கான்பிப்போம். இது நிரந்தரமானது, அர்ப்பனிப்புடன், கூடிய நிபந்தனையற்ற, தியாகத்துடன் உள்ள அன்பாகும். யார் எவ்வளவு பாவம் செய்தாலும், இந்த அன்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.

திருவருட்சாதன திருமணம், இந்த உலகிற்கு  ஒற்றுமையின் சான்றை காட்டுகிறது. கடவுள் எவ்வாறு நிபந்தனையற்ற அன்பை நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும்,  நோயுற்றவர்களுக்கும், வளமோடு வாழ்பவர்களுக்கும், ஏழைக்கும், பணக்காரனுக்கும், முழுமையான அன்பை கொடுப்பது போல, திருமணமான ஆனும் பென்னும்,அன்பை பரிமாறி கொள்கினறனர். திருமண வாழ்வின் அன்பு தீவிர அன்பாக இருக்கும். இதனை திருமண வாழ்வை விட்டு வெளியே அனுபவிக்க முடியாது. இந்த சடங்கில், புனித திருமண வாழ்வில் கணவன் அவனது வாழ்வை மனைவிக்காக கொடுக்கிறான். மனைவி அவளது வாழ்வை விட்டு, கணவனுக்காக வாழ்கிறாள். கிறிஸ்து அவரது வாழ்வை நமக்காக கொடுத்தது போல. நாம் திருச்சபையுடன் கிறிஸ்துவின் மணப்பெண்ணாக நமது வாழ்வை கிறிஸ்துவிற்காக கொடுத்து அவருக்காக இறைசேவையை செய்வோம்.


திருமணம் புனிதமானது! விவாகரத்தானவர்களுக்கு முழுமையான விசாரனை இல்லாமல், கத்தோலிக்க குருமார்கள் திருமணம் செய்து வைப்பதில்லை. கணவன் மனைவி ஒற்றுமை புனிதமானது, இயேசுவின், கடவுள் தந்தையின் உறவு போல புனிதமானது. கடவுள் கொடுத்த திருமணமும், கடவுள் அன்பி/ற்கு இலக்கணமாக இருக்கிறது.

மற்ற உறவுகளும் – கடவுளால் ஏற்படுத்தபட்டவை – புனிதமானது தான். கடவுளால் உருவாக்கபட்ட அனைது உறவுகளும் புனிதமானது தான். இயேசுவின் தியாகத்தின் அன்பை இந்த உறவுகளளெல்லாம்,உலகிற்கு எடுத்து காட்டுகின்றன.
ஆனால், இவ்வுலகில், கிறிஸ்துவின் உடல், இந்த திருச்சபை , எப்படி பிரிந்து இருக்கிறது, மக்கள் மணம் மாறுதல் எதிர்ப்பாக இருக்கிறது.!


© 2013 by Terry A. Modica