Sunday, July 10, 2016

ஜூலை 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
லூக்கா நற்செய்தி
நல்ல சமாரியர்

25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

26அதற்கு இயேசு
திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?
 என்று அவரிடம் கேட்டார்.
27அவர் மறுமொழியாக,
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக
என்று எழுதியுள்ளது என்றார்.

28இயேசுசரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்
 என்றார்.
29அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டார்.

30அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: 
ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

31குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.

32அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

33ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.

34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.

35மறுநாள் இருதெனாரியத்தைஎடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்என்றார்.
36
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?”
 என்று இயேசு கேட்டார்.

37அதற்கு திருச்சட்ட அறிஞர், அவருக்கு இரக்கம் காட்டியவரே என்றார். இயேசு
நீரும் போய் அப்படியே செய்யும்
 என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இந்த உலகை குணப்படுத்த தேவையான அன்பு இருக்கிறதா ?

அன்பிற்கு எதிர்பதம் வெறுப்பு அல்ல, அக்கறை இன்மை தான் அன்பிற்கு எதிரானது, ஒருவரின்  தேவையை அறிந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பது, அக்கறையுடன் எதனையும் அணுகாமல் இருப்பது. துன்பத்தை போக்க நம்மால் ஏதாவது  செய்ய முடிந்தும், நாம் எதுவும் செய்யாமல் இருப்பது எல்லாம் அன்பிற்கு எதிரானது. இன்றைய நற்செய்தியில் இயேசு நல்ல சமாரியனின் கதையை உவமையாக கூறுகிறார் . முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கொள்ளும் பொழுது, கண்டிப்பாக நாம் மற்றவர்களை அன்பு செய்வோம். அவர்கள் நமக்கு தெரியாதவர்களிடம் கூட நாம் அன்பு கொள்வோம். மேலும் நமக்கு தீங்கு செய்தவர்களிடம் அன்பு காட்டுவோம்.   
இன்றைய உலகில் உள்ள நிறைய பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு நம்மை போன்றவர்கள் கிறிஸ்துவின் பின் செல்பவர்கள் , அந்த பிரச்சினைகளின் மேல் அக்கறை கொள்ளாமல் இருப்பதே ஆகும். கிறிஸ்து அனைத்தையும் மாற்றும்  ஆற்றல் கொண்டவர், அதே ஆற்றலை நமக்கும் கொடுத்துள்ளார். ஆனால் நாம் சொந்த வேளைகளில் நாம் நேரத்தை செலவிடுகிறோம். நமது குடும்பத்தில் , வேலை இடத்தில், பங்கு கோவிலில் நடக்கும் சோதனைகள், துன்பங்கள், மற்றும் பாதிப்புகள்  எல்லாம் சரியாகிவிடும், எப்போது ?, கிறிஸ்தவர்கள் அனைவரும் அன்புடன் , மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு சேவை செய்யும்போது நடக்கும்.
நீங்கள் கடவுளை எவ்வளவு அன்பு செய்கிறீர்கள் ? இதற்கான பதில் : மற்றவர்களை அன்பு செய்ய நீங்கள் எந்த அளவிற்கு தியாகம் செய்யம் தயாராய் இருக்கிறீர்கள் , நம் அருகிலுள்ள சகோதரர்களை அன்பு செய்வதில் தான் இயேசுவின் அன்பு இருக்கிறது. இதனை தான் இயேசு அவர் வாழ்விலும் , இந்த உவமையிலும் சொல்கிறார்.
நம்மில் யாருமே கடவுளை முழுதும் அன்பு செய்வதில்லை. உத்திரிக்கிற ஆத்மா ஸ்தலத்தில், நாம் முழுமையான அன்பு செய்யாமல் இருந்ததற்கு வருந்துவோம், அங்கேயே முழு அன்பை மற்றவர்கள் மேல் காட்ட , நாம் முயற்சி செய்து, கடவுளின் முழுமையை மோட்சத்தில் அடைவோம். அது வரைக்கும் இந்த உலகில், நமக்கு கிடைக்கும் அனுதின வாய்ப்பில் நமது வாழ்வை தூய்மையாக்கி , கடவுளின் அன்பில் நிலைத்திருபோம். தினமும், நாம் மற்றவர்களை எவ்வளவு அன்பு செய்கிறோம் என்பதற்கு பல சோதனைக்கால காத்திருக்கின்றன. அதன் மூலம் நாம் இன்னும் பலரை அன்பு செய்ய பயில்வோம்.
 அதனால், நமது ஆசிரியர், கரு, பரிசுத்தத்தின் ஊற்று, நமக்கு ஆற்றல் கொடுப்பவருமான பரிசுத்த ஆவியை தினமும் கேளுங்கள், கிறிஸ்துவை போல நீங்களும் மாற அவரிடம் உதவி வேண்டுங்கள், கிறிஸ்து மற்றவர்களை அன்பு செய்வது போல நீங்கள் அன்பு செய்ய பரிசுத்த ஆவியின் உதவியை ஆலோசனையை கேளுங்கள்.
இந்த பரிசுத்த பயிற்சியை தொடர்ந்து செய்யும்பொழுது , நமக்கு மிக பெரிய மகிழ்ச்சியும் சந்தோசமும் வரும், மேலும் மற்றவர்களுடன் நாம் அன்புடன் கையாள நமக்கு நன்றாக தெரிய வரும். கடவுளின் மிக பெரிய அன்பை நாம் உணர்ந்து நம் மேல் இன்னும் அதிகமாக நெருக்கமாக அவர் அன்புடன் நாம் கலப்போம்.


© 2016 by Terry A. Modica

Saturday, July 2, 2016

ஜூலை 3, 2016 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 3, 2௦016 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு
Isaiah 66:10-14c
Ps 66:1-7, 16, 20
Galatians 6:14-18
Luke 10:1-12, 17-20

லூக்கா நற்செய்தி

எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புதல்
1இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

2அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: 
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.

3புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.

4பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

5நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!என முதலில் கூறுங்கள்.

6அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.
7அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.

8நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.

9அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

10நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று,

11எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்எனச் சொல்லுங்கள்.

12அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.

எழுபத்திரண்டு சீடர்களும் திரும்பிவருதல்
17பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றனஎன்றனர்.

18அதற்கு அவர், 
வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.

19பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.

20
ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்
 என்றார்.

(thanks to www.arulvakku.com)

நாம் இணைந்து செயல்பட கிறிஸ்துவனாக அழைக்கப்பட்டுள்ளோம்
இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின், சீடர்களிடம், " உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" (தந்தை கடவுள்) , " அறுவடையை"  (கிறிஸ்துவுக்குள் மன மாற்றம் அடைய) பற்றி கேட்க சொல்கிறார். அதற்காக " வேலையாள்களை அனுப்பும்படி"  (மனம் மாறுதல் செய்பவர்) தந்தை கடவுளிடம் வேண்டுங்கள் என்று கூறுகிறார்.  அதனை கூறிய பின்பு "புறப்பட்டுப் போங்கள்" என்று கூறி, வேலையாட்களுக்கு அதிக வேலை இருக்கிறது என்பதை நினைவு படுத்துகிறார்.
நீங்கள் மணம் மாற்றும் சுவிசேகர்கள் என்று நினைத்தால், யார் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள்? நம்மில் பலர் குருவானவரை நினைவில் கொள்வோம். நமக்கு இன்னும் அதிகம் குருவானவர்கள் தேவை என தெரியும். மேற்கத்திய நாடுகளில் தேவ அழைத்தலுக்கு இப்போது ஆட்கள் குறைவு, அதிக இடங்களில் வயதான குருவானவர்கள் தான் இருக்கிறார்கள்.
அதிக தேவ அழைத்தலுக்கு நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? ஆனால் இயேசு நம்மிடம் கேட்கும் ஒரு   பகுதி தான், "புறப்பட்டு போங்கள்" என்று இயேசு நம்மிடமும் சொல்கிறார். "மேலும் நமது திறமைகள் , ஆற்றல், திறன்கள் அனைத்தும் இந்த அறுவடைக்கு " உபயோக படுத்துங்கள் என்றும் கூறுகிறார்

இயேசு நம்மோடு எப்பொழுதுமே இணைந்தே இருக்கிறார். இந்த அறுவடைக்கு தேவையான ஆட்கள் -- குருக்கள், அருட் சகோதரிகள், மற்றும் பொது நிலையினர்- அனைவரும் இணைந்தால் தான் போதுமானதாக இருக்கும். அனைவரும் இணைந்து ஒவ்வொருவரின் திறன்களை, ஆற்றலை, தாழ்மையோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒரு குழுவாக இயங்க வேண்டும்.

இந்த போதுமான நிலையை அடைய, "யாராவது ஒருவர் பார்த்து கொள்வார்கள்" என்ற மனநிலையை நாம் அனைவரும் விட்டு விட்டு இறைபணியில் இணைவோம். மேலும் சிலர், இறைபணியை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், நானே தான் செய்வேன் என்ற என்னத்தை விட்டு வர வேண்டும். அப்பொழுது தான், மற்றவர்கள் அனைவரும், இறைபணி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
அர்ச்ச்சிக்கபட்ட தேவ அழைத்தல் , ஆசிர்வாதத்துடன் நமக்கு ஒரு குழுவாக நாம் ஜெபம் செய்யும் பொது நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். சமய குருக்களும்,ஆயர்களும் நமக்கு முன் மாதிரியாக இருக்க அழைக்கபட்டுள்ளனர்,இது மற்றவர்களை தேவ அழைத்தலுக்கு உற்சாகம் கொடுக்கும். ஆனால் பொது மக்களும் அதே போல, அதே உத்வேகத்துடனும், பரிசுத்தத்துடனும் இறைபணி செய்ய இயலும். நாம் குருவானவர்கள் எப்படி இருக்கு வேண்டும் என்று விரும்பி எதிர் பார்க்கிறோமோ , அதே போல நாமும் இறைபணி செய்ய முடியும்.

© 2016 by Terry A. Modica