Saturday, July 8, 2017

ஜூலை 9 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை  9 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  14ம் ஞாயிறு

Zechariah 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Romans 8:9, 11-13
Matthew 11:25-30
மத்தேயு நற்செய்தி

தந்தையும் மகனும்
(லூக் 10:21 - 22)
25அவ்வேளையில் இயேசு
தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

26ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

27
என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்
 என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்
28மேலும் அவர்
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30
ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது
 என்றார்
(Thanks to www.arulvakku.com)
உங்கள் சுமையை எப்படி எளிதாக்குவது
இயேசுவின் நுகம் உங்களை கிழே தள்ளுகிறதா ? அல்லது உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கிறதா?  அவரின் நுகம் -- அவர் வாழ்க்கையின் எடுத்து காட்டாக வாழ்ந்தது -- இறை பணியாளன், இந்த இறைசேவை மற்றவர்கள் மேல் அக்கறை கொள்ளும், மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் அன்பு ஆகும்.

நமது சொந்த போராட்டங்களால், நாம் சுமையை தூக்க முடியாமல் கிழே விழுந்து விடுகிறோம். இதன் சுமை அதிகம் என்று நம்முள் ஒரு எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. நம் சிலுவைகளினால் நாம் அதிகம் சோர்வடைந்துவிடுகிறோம், மேலும் பலர் நம்மிடம் இருந்து உதவி கேட்கிறார்கள் அதனாலும், நாம் மிகவும் சோர்வடைந்து விடுகிறோம். நமக்கு ஒரு ஒய்வு தேவைபடுகிறது.  இந்த பிரச்சினைகளிளுருந்து ஒரு விடுதலை தேவைபடுகிறது. ஒரு ப்ரேக்.! ஏன் இயேசு அவரின் நுகம் மிகவும் எளிது என்று சொல்கிறார் ?  இறைபணி செய்பவர்களின் சுமை எளிது என்று ஏன் சொல்கிறார்?
இயேசுவின் இறை சேவையை நாம் பகிர்ந்து கொண்டால், எப்படி நமக்கு ஒய்வு கிடைக்கும் ?
நமது வாழ்வின் பிரச்சினைகள் கஷ்டங்கள் நம்மை நோகடித்து, சோர்வடையசெய்கின்றன. ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட நாம் அதிக பொறுப்புகளை எடுத்து கொண்டோம்.

அல்லது இயேசு அவரது நுகத்தை நம்மிடம் கொடுத்த பின்பு,  நாம் நமது ஆற்றலை அதிகம் செலவழித்து அந்த சிலுவைகளை களைய முற்பட்டதால், நாம் அதிகம் சோர்வடைந்து விட்டோமோ? அந்த சுமை உங்களை ஆற்றல் இழக்க செய்துவிட்டால் , கடவுள் உங்களை அயர்ச்சி அடைய செய்கிறார், ஏனெனில், அவர் நம்மை எச்சரிக்கிறார்: "உங்கள் வாழ்வை மெதுவாக செலுத்துங்கள், இன்னும் மெதுவாக! " என்றும், உங்கள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வாருங்கள் என்று சொல்லி , ஜெபத்தில் அதிக நேரம் செலவிடுங்கள் ! என்று சொல்கிறார்.

இதனால் கோபமும் சீற்றமும் ஏற்படுமானால் , நம் சுய நல வாழ்வு தான் , சுலபமாக எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நம் எண்ணம் தான் நம்மை இதெற்கெல்லாம் கொண்டு செல்கிறது என்று கடவுள் நமக்கு காட்டுகிறார்.
மாறாக சொல்வது என்றால், நாம் நுகத்திற்கு எதிராக அதன் போக்கில் விடாமல், இழுத்து செல்வதனால் -- கிறிஸ்துவுக்கு எதிராக -- நாம் துன்பம் அடைகிறோம். நம் சொந்த தவறுகளால் நாம் கஷ்டபடுகிறோம். இந்த நேரத்தில் தான் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த இயற்கையை தாண்டிய சக்தி படைத்த இறைவன் நுகம் நமக்காக இருக்கிறது அவரோடு இணைந்து இருப்போம் என்று நாம் அடிக்கடி நினைவில் கொள்ளவேண்டும். இந்த நுகம் தான் நமக்கு மிக பெரிய சந்தோசத்தின் ஊற்றாக இருக்கும்
கடவுள் நமக்கு கொடுத்த இறைசேவை செய்வதற்கு தேவையான அனைத்தும் இயேசு நமக்கு கொடுக்கிறார். நாம் அவரோடு இணைந்து செய்யும்பொழுது நமது சுமை எளிதாகிறது. இயேசுவில் நாம் ஒய்வு கொள்வோம். மேலும், அவரிடமிருந்து வேண்டிய ஆற்றலை பெறுகிறோம். நமது கோபம், சீற்றம் மற்றும் அயர்வு அப்படியே மறைந்து விடும். பரிசுத்த சந்தோசத்தை நாம் அனுபவிப்போம், ஏனெனில் நாம் இயேசுவின் நல்ல நுகத்தோடு இணைந்துள்ளோம் மற்றும் அவரின் ஆற்றலோடு இணைந்துள்ளோம்.


© 2017 by Terry A. Modica

Saturday, July 1, 2017

ஜூலை 2, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை  2, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  13ம் ஞாயிறு
2 Kings 4:8-11, 14-16a
Ps 89:2-3, 16-19
Romans 6:3-4, 8-11
Matthew 10:37-42

மத்தேயு நற்செய்தி
37என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

38தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

39தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.
கைம்மாறு பெறுதல்
(மாற் 9:41)
40உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.

41இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.

42இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com)

எந்த விஷயம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது?
 இன்றைய ஞாயிறு நார்செய்தியில், இயேசுவின் மேல் நம் கண் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார், அது தான் நமக்கு மிகவும் முக்கியம் என்றும், மேலும் இயேசுவே நமது முன்னுரிமை ஆக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார். கடவுளோடு நமக்கு இருக்கும் உறவு தான் மிகவும் முக்கியம், அதனை விட்டு வேறுதுவும் நமக்கு முக்கியம் இல்லை.  இதன் அர்த்தம் என்ன என்றால், அவர் அழைத்து செல்லும் இடத்திற்கு நாம் அவர் பின்பு செல்ல வேண்டும், ஒவ்வொரு நாளும் 1௦௦% சதவிதம் நாம் கடவுளுக்காக கொடுக்க வேண்டும். (விசுவாசத்தில் சாதாரணமாக இருந்து விட முடியாது), இயேசு தன வாழ்வை கொடுத்து மற்றவர்களுக்காக உழைத்தாரோ அதே போல நாமும் இருக்க வேண்டும்.
நமது வாழ்வை விட்டு கொடுப்பது என்பது தொடர்ந்து தியாகம் செய்வது ஆகும்    நம்மிடம் உள்ள குளிர்ந்த நீரை , தாகம் உள்ள மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். நமது பிசி வேளைகளில் மத்தியில், ஒருவரை வரவேற்று அவர் மூலம் கடவுள் சொல்வதை நாம் கேட்க வேண்டும்.

மற்றவர்களுக்காக நம் வாழ்வை கொடுக்க நாம் தாயாராக இல்லை என்றால், கிறிஸ்துவின் சிலுவையை, நமக்காக அவர் பட்ட வேதனைகளை நாம் நிராகரிக்கிறோம் என்று அர்த்தம். நம்மிடம் நல்ல மாதிரியாக நடந்து கொள்ளாமல் இருப்பவர்களிடம் , அவர்களை விட்டு விலக ஒன்றும் தடையில்லை ,  அவர்களிடமிருந்து இயேசு உங்களை பாதுகாப்பாக வெளியே அழைத்து கொண்டு வருவார். இது மாதிரியாக உங்களை நிராகரிக்கிரவர்களை , உங்கள் மேல் துன்பம் கொடுப்பவர்களை விட்டு விலகி செல்வதும் , சிலுவையின் ஒரு வழி தான்.

நாம் உண்மையாக கிறிஸ்துவை பின்பற்றி செல்லும் பொழுது, அவரை நாம் முழுமையாக பெற்று கொள்ளலாம், அவரிடமிருந்து அனைத்தும் நாம் பெற்றுகொள்வோம். நமது பயத்தை , சொந்த கொள்கைகளை விட்டு விடும்பொழுது, இயேசு நம்மை புதிய இடத்திற்கு அழைத்து செல்கிறார், மேலும், பிரசினைகளை கையாள புதிய வழிகளை காண்பிக்கிறார். புதிய வாழ்வில் கிறிஸ்துவில் கண்டுகொள்கிறோம். கிறிஸ்துவின் வழிகள் எப்பொழுமே நாம் பயபடுவதை விட நல்ல வழிகள் தான்.
மிதமான விசுவாசத்திற்கும், கிறிஸ்துவில் முழுதும் இணைந்து , சாகசங்கள் நிறைந்த, அற்புதங்கள், எதிர்பாராத தீர்வுகள், சிகிச்சைகள், வெற்றிகளுடன் உள்ள கிறிஸ்த வாழ்விற்கும் , கடவுளுக்கு நாம் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று நாம் அறிந்து கொள்வதிலும் வித்தியாசம் இருக்கிறது.

© 2017 by Terry A. Modica

Saturday, June 24, 2017

ஜூன் 25 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூன் 25 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  12ம் ஞாயிறு
Jeremiah 20:10-13
Ps 69:(14c)8-10,14,17,33-35
Romans 5:12-15
Matthew 10:26-33

மத்தேயு நற்செய்தி

அஞ்சாதீர்கள்
(லூக் 12:2 - 7)
26எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.

27நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.

28ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.

29காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.

30உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.

31சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்தல்
(லூக் 12:8 - 9)
32மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்.

33மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

(THANKS TO WWW.ARULVAKKU.COM)

நற்செய்தியோடு தைரியமாக இருங்கள்!
நீங்கள் இருளில் இருந்த நேரம் பற்றி நினைத்து பாருங்கள்: எடுத்து காட்டாக ஒரு பாவத்தில் இருந்தீர்கள், அல்லது கடவுள் உங்கள் ஜெபம் கேட்காமல் உங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இருக்கிறார் என நினைத்த நேரம், உங்களுக்கு கடவுள் கொடுத்த அன்பளிப்புகள், திறமைகள் மறைந்து போய்விட்டது என்று நினைத்த நேரம் பற்றி எடுத்து கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இயேசு உங்களிடம் என்ன சொன்னார் (நற்செய்தி வாசகங்கள் மூலம் , அல்லது நண்பன் மூலம் பேசியிருக்கலாம், அல்லது திருப்பலி பிரசங்கம் மூலம் உங்களிடம் பேசியிருக்கலாம் )?  உங்கள் காதில் என்ன ரகசியமாக சொனார்?  அவரின் வார்த்தைகளும் , வழி காட்டுதலும் உங்களுக்கு நற்செய்தி!
இன்றைய நற்செய்தியில் இயேசு " உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள்" என்று சொல்கிறார்  .
 இயேசு உங்களை அழைக்கிறார், இறைபணி செய்ய அர்சித்து, உங்களுக்கு தேவையான ஆற்றலையும் அதிகாரத்தையும்  பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்கிறார் நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறார். உறுதியாகவும், எல்லோருக்கும் தெரியும்படி நற்செய்தியை அறிவியுங்கள், அதன் மூலம் இதனை கேட்க நினைப்பவர் அனைவரும் கேட்கட்டும். இயேசு உங்கள் வாழ்க்கையில் என்ன வெல்லாம் செய்கிறார் மேலும், உங்கள் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவினார், பாவங்களிலிருந்து மீள எப்படியெல்லாம் உதவி செய்தார் என்பதை பகிர்ந்து கொள்ள பயப்பட வேண்டாம் .

முதல் வாசகத்தில் சொல்லியுள்ளது போல ஜெரமையாவிற்கு நேர்ந்த கொடுமை போல நமக்கும் நடக்கலாம், சிலர் உங்களை கேலி செய்யலாம், ஒதுக்கி தள்ளலாம், ஆனால் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். ஏனெனில் தந்தை கடவுள் நம்மோடு இருக்கிறார். உங்களுக்கு சாம்பியன் போல ஆக்கி , நம்மை தடுத்து நிறுத்தியவர்களை தலை குனிய வைப்பார். இயேசு "யாருக்கும் பயப்பட வேண்டாம் " என சொல்கிறார். கடவுள் கண்டிப்பாக எப்பொழுதும் நம் மேல் அக்கறை கொள்கிறார்.

இயேசுவை ஏற்று கொள்கிறவர்களை , அவர் ஏற்றுகொள்கிறார். இதனையே மாறாக சொல்வதானால், விசுவாசத்தினால், நமக்கு ஏற்படும் அவமானங்களையும், கிண்டல்களும் நடைபெறும்பொழுது இயேசு நமக்கு ஆறுதல் சொல்லி நம்மை காக்கின்றார். அவர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பது மட்டுமே நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் என்ன பேசினாலும் கண்டு கொள்ள வேண்டாம். அவரிடம் கூர்ந்து கேளுங்கள். உங்கள் இருதயத்தின் தூய்மை பற்றி உங்கள் காதில் கிசு கிசுப்பாய் சொல்வதை கேளுங்கள்.  உங்களில் உள்ள எல்லா நல்லதையும் இயேசு கூறுவார். மேலும் நீங்கள் செய்த நல்ல செயல்களை உங்களிடம் கூறி , உங்களை போராட்டுவார். உங்களுக்கு நற்செய்தியை கூறுகிறார். அது கண்டிப்பாக எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள கூடியதே.
© 2017 by Terry A. Modica