Saturday, July 8, 2017

ஜூலை 9 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை  9 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  14ம் ஞாயிறு

Zechariah 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Romans 8:9, 11-13
Matthew 11:25-30
மத்தேயு நற்செய்தி

தந்தையும் மகனும்
(லூக் 10:21 - 22)
25அவ்வேளையில் இயேசு
தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

26ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

27
என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்
 என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்
28மேலும் அவர்
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30
ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது
 என்றார்
(Thanks to www.arulvakku.com)
உங்கள் சுமையை எப்படி எளிதாக்குவது
இயேசுவின் நுகம் உங்களை கிழே தள்ளுகிறதா ? அல்லது உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கிறதா?  அவரின் நுகம் -- அவர் வாழ்க்கையின் எடுத்து காட்டாக வாழ்ந்தது -- இறை பணியாளன், இந்த இறைசேவை மற்றவர்கள் மேல் அக்கறை கொள்ளும், மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் அன்பு ஆகும்.

நமது சொந்த போராட்டங்களால், நாம் சுமையை தூக்க முடியாமல் கிழே விழுந்து விடுகிறோம். இதன் சுமை அதிகம் என்று நம்முள் ஒரு எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. நம் சிலுவைகளினால் நாம் அதிகம் சோர்வடைந்துவிடுகிறோம், மேலும் பலர் நம்மிடம் இருந்து உதவி கேட்கிறார்கள் அதனாலும், நாம் மிகவும் சோர்வடைந்து விடுகிறோம். நமக்கு ஒரு ஒய்வு தேவைபடுகிறது.  இந்த பிரச்சினைகளிளுருந்து ஒரு விடுதலை தேவைபடுகிறது. ஒரு ப்ரேக்.! ஏன் இயேசு அவரின் நுகம் மிகவும் எளிது என்று சொல்கிறார் ?  இறைபணி செய்பவர்களின் சுமை எளிது என்று ஏன் சொல்கிறார்?
இயேசுவின் இறை சேவையை நாம் பகிர்ந்து கொண்டால், எப்படி நமக்கு ஒய்வு கிடைக்கும் ?
நமது வாழ்வின் பிரச்சினைகள் கஷ்டங்கள் நம்மை நோகடித்து, சோர்வடையசெய்கின்றன. ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட நாம் அதிக பொறுப்புகளை எடுத்து கொண்டோம்.

அல்லது இயேசு அவரது நுகத்தை நம்மிடம் கொடுத்த பின்பு,  நாம் நமது ஆற்றலை அதிகம் செலவழித்து அந்த சிலுவைகளை களைய முற்பட்டதால், நாம் அதிகம் சோர்வடைந்து விட்டோமோ? அந்த சுமை உங்களை ஆற்றல் இழக்க செய்துவிட்டால் , கடவுள் உங்களை அயர்ச்சி அடைய செய்கிறார், ஏனெனில், அவர் நம்மை எச்சரிக்கிறார்: "உங்கள் வாழ்வை மெதுவாக செலுத்துங்கள், இன்னும் மெதுவாக! " என்றும், உங்கள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வாருங்கள் என்று சொல்லி , ஜெபத்தில் அதிக நேரம் செலவிடுங்கள் ! என்று சொல்கிறார்.

இதனால் கோபமும் சீற்றமும் ஏற்படுமானால் , நம் சுய நல வாழ்வு தான் , சுலபமாக எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நம் எண்ணம் தான் நம்மை இதெற்கெல்லாம் கொண்டு செல்கிறது என்று கடவுள் நமக்கு காட்டுகிறார்.
மாறாக சொல்வது என்றால், நாம் நுகத்திற்கு எதிராக அதன் போக்கில் விடாமல், இழுத்து செல்வதனால் -- கிறிஸ்துவுக்கு எதிராக -- நாம் துன்பம் அடைகிறோம். நம் சொந்த தவறுகளால் நாம் கஷ்டபடுகிறோம். இந்த நேரத்தில் தான் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த இயற்கையை தாண்டிய சக்தி படைத்த இறைவன் நுகம் நமக்காக இருக்கிறது அவரோடு இணைந்து இருப்போம் என்று நாம் அடிக்கடி நினைவில் கொள்ளவேண்டும். இந்த நுகம் தான் நமக்கு மிக பெரிய சந்தோசத்தின் ஊற்றாக இருக்கும்
கடவுள் நமக்கு கொடுத்த இறைசேவை செய்வதற்கு தேவையான அனைத்தும் இயேசு நமக்கு கொடுக்கிறார். நாம் அவரோடு இணைந்து செய்யும்பொழுது நமது சுமை எளிதாகிறது. இயேசுவில் நாம் ஒய்வு கொள்வோம். மேலும், அவரிடமிருந்து வேண்டிய ஆற்றலை பெறுகிறோம். நமது கோபம், சீற்றம் மற்றும் அயர்வு அப்படியே மறைந்து விடும். பரிசுத்த சந்தோசத்தை நாம் அனுபவிப்போம், ஏனெனில் நாம் இயேசுவின் நல்ல நுகத்தோடு இணைந்துள்ளோம் மற்றும் அவரின் ஆற்றலோடு இணைந்துள்ளோம்.


© 2017 by Terry A. Modica

No comments: