Friday, August 15, 2008

ஆகஸ்டு 17, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 17, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 20வது ஞாயிறு
Isaiah 56:1, 6-7
Ps 67:2-3, 5-6, 8 (with 4)
Rom 11:13-15, 29-32
Matt 15:21-28

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 15

21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். 22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார். 23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர். 24 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் ' என்றார். 25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார். 26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார். 27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார். 28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, நாம் மற்றவர்களை எப்படி தீர்ப்பளிக்கிறோம், அவர்களை எப்படி கருத்து தெரிவிக்கிறோம். கானானியப் பெண்ணுக்கு இரண்டு விசயங்கள் பட்சபாதத்தை உண்டு பன்னுகிறது: ஒன்று அவர் ஓர் பெண், அடுத்தது அவர் இஸ்ரேயலர் அல்ல.
நிச்சயமாக, அகில உலகிற்கும் மெசியா யேசுதான், ஆனால், அதனை சீடர்கள் இன்னும் அறியவில்லை. அவர்களின் மனதை மாற்றவும் (நன்னுடையதையும்), யேசு அந்த பெண்மனி முழுமையாக அவளுடைய விசுவாசத்தை காட்டவேன்டும் என்பதற்காக காலம் தாழ்த்தினார். அந்த விசுவாசம் , அவருடைய மற்ற குறைகளை பின்னுக்கு தள்ளிவிடும்.

யேசுவை பொருத்தவரை, யாரெல்லாம் கடவுளரசில் சேருவதற்கு விரும்பாமல், வெளியே செல்கிறார்களோ, அவர்கள் வெளியாட்கள். மற்ற எல்லோருமே கடவுளின் அன்பு மக்கள் ஆவர். ஆனால், நாம் உடனே இந்த மாதிரியான எண்ணத்தோடு நினைப்பத்தில்லை. நமது திருச்சபையானது, பலவாறு தவறான தீர்ப்பளிக்கபட்ட மக்களை கொண்டுள்ளது. நிறைய பேர், நாம் இந்த திருச்சபையை விட்டு வெளியே இருக்கிறோம் என நினைக்கின்றனர். நாம் ஒருவர் மற்றவரை பற்றி மிகவும் சுலபமாக தவறான முடிவெடுத்து அப்படியே அவர்களை பற்றிய எண்ணங்களுடன் இருக்கிறோம்.

எடுத்து காட்டாக, எத்தனையோ பெற்றோர்கள், தனியாக உள்ளனர். நம்மில் எத்தனை பேர் அவர்களை கோவிலுக்கு அழைத்து செல்கிறோம். ஏன் அவர்களுக்கு கோவிலில் உள்ள பல சேவைகளையோ, அல்லது பங்கு வேலைகளில் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் அவர்கள் பங்கு வேலைகளில் ஈடுபடும்போது, அவர்கள் குழந்தைகளை நாம் ஏன் கவனித்துகொள்வதில்லை. ?
நீங்கள விவாகரத்து பெற்றவரா?, மற்றவர்கள் உங்களை ஒதுக்குகிறார்கள் என நினைத்து கொண்டிருக்கிறீர்களா? அதுவே உங்களை பற்றிய தவறான தீர்ப்பாகும்.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை, மிகவும் இரக்கத்தோடு நமது திருச்சபைக்கு அழைக்கவேண்டும். என்று சொல்லியபிறகும் ஏன் அவர்கள் கோவிலுக்கு வருவதில்லை.?

ஏன் சாதாரன பங்கு மக்கள், பங்கு குருவானவரோடு சேர்ந்து பனியாற்ற தடுக்கபடுகிறோம் என நினைக்கிறார்கள்.?

நமது திருச்சபையில், பல வேலைகள் இன்னும் செய்ய ஆளில்லாமல் இருக்கிறது, அது ஏனென்றால், நாம் நமது கிறிஸ்தவர்களை, சகோதரர்களை தவறாக எண்ணி, தவறான தீர்ப்பால், அவர்கள் அதனால், நமது திருச்சபையை விட்டு விலகியே நிற்கின்றனர். இந்த தவறான எண்ணங்கள், மற்றும் தீர்ப்புகள் விலக்கப்படுவதற்கான விளைவுகளை உண்டாக்குகிறது. ஆனால் நாம் விழிப்புணர்வுடன் இருந்து, இது மாதிரியான தவறான் அனுமானங்களுக்கும், தவறான நிந்தனைகளுக்கும், தீர்ப்புகளுக்கும், உடனே எதிர்வினை காட்டாமல், யேசுவின் ஆற்றலுக்கு நாம் அடிபனிந்து, அவரை மற்றவர்களுக்காக ஏற்று, கிறிஸ்துவை அவர்களுக்கும் கொடுத்திட வேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: