Friday, August 22, 2008

ஆகஸ்டு 24, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 24, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21வது ஞாயிறு

Isaiah 22:19-23
Ps 138:1-3, 6, 8
Rom 11:33-36
Matt 16:13-20
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 16

13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள். 15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார். 16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.'பேதுரு' என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் 'பாறை' என்பது பொருள்.19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார். 20 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

யேசு கிறிஸ்து புனித பீட்டரை/ராயப்பரை திருச்சபையின் தலைவராக ஆசிர்வதித்து,
"உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" என்று கூறுகிறார். எந்த தீங்கும் இந்த திருச்சபையை தீண்டாமலிருக்க தான் பார்த்து கொள்வதாக உறுதி கூறுகிறார்.

யேசு நரகம் இந்த திருச்சபையுடன் மோதி வெற்றி கொள்ளாது என்று கூறவில்லை. நன்றாக கவனியுங்கள், பாதாளத்தின் வாயில்/கதவுகள் வெற்றி கொள்ளாது என்று கூறுகிறார். கதவுகள் எதிலும் போரிடாது ஆனால், தன்னையும், உள்ளே இருப்பவர்களையும் காத்துகொள்ளும். யாரவது உனக்கு தெரிந்தவர்கள், அவர்கள் பாவத்தினால், சிறைக்குள் இருக்கிறார்களா? அல்லது தவறான சுற்று புறத்தினால் சிறைக்குள் இருக்கிறார்களா?

சாத்தானின் தாக்க்குதலுக்கு, கிறிஸ்தவர்கள் தற்காத்து கொண்டு இருக்க கூடாது. கிறிஸ்தவர்கள் திரும்பி தாக்க அழைக்கப்படுள்ளோம். நரகத்தின் கதவுகளை தாக்கி, அதனை கீழே விழச்செய்யவேண்டும், மேலும், மற்றவர்களை தவறான வழிக்கு இட்டு செல்லும், பேய்களை மிதித்து உங்கள் காலடிக்கு கீழ் கொண்டுவரவேண்டும்.

2000 வருடங்களுக்கு முன் யேசு எப்படி சாத்தானின் மீது வெற்றி கொண்டாரோ, அவ்வாறே நம் மூலமாக சாத்தானை வென்று வருகிறார்.

பாவிகள் தீமைகளிலிருந்து திருந்தி மீண்டு வரும் சாவியை, யேசு பேதுருவுக்கு கொடுத்தார், அவருக்கு திருச்சபையின் தலைவராக பட்டம் கொடுக்கும்போது கொடுத்தார். அவரே முதல் போப்பான்டவராக ஆனார். அந்த சாவி தலைமுறை தலைமுறையாக கிறிஸ்தவர்களின் போப்பானவர்களூக்கு தரப்படுகிறது. இந்த தொடர்பில், இதுவரை தொடர்பு அறுந்து விட வில்லை.

அந்த சாவிகள் எல்லாம் எது? சாத்தானின் கதவுகள் "அருட்சாதனங்கள்" மூலம் திறக்கபடுகிறது. அந்த அருட்சாதனங்கள் தான் மோட்சத்தின் வாயிலுக்கு திறவுகோலாக உள்ளன. பாவசங்கீர்த்தனத்தின் போது குருவானவர் அவர்களின் பாவங்களை மன்னிக்கும்போதும், குருவானவர் ஆனையும் பென்னையும் திருமணத்தில் இணைக்கும் போது, யேசுவே குருவானவர் மூலம் செய்கிறார்.

அருட்சாதனத்தின் தெய்வீக ஆற்றல், சாத்தானின் ஓவ்வொரு தாக்குதலையும் காலடியும் வீழ்த்திவிடும், ஆனால், நாம் ஒவ்வொரு அருட்சாதனத்தையும் அக்கறையுடன் நடத்திடல் வேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: