Friday, September 26, 2008

28 செப்டம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை

28 செப்டம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை:
ஆண்டின் 26வது ஞாயிறு

Ezek 18:25-28
Ps 25:4-5, 8-10, 14
Phil 2:1-11
Matt 21:28-32

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21

28 மேலும் இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார். 29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். 30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை. 31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை ' என்றார்.
(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தி நம்மில் பலருக்கு அதிர்ச்சியை அளிக்கும்!, பலர் இறைவாழ்வில் நேர்மையாகவும் ஒழுங்காகவும் நல்லொழுக்கத்துடனும் நடந்து கொள்வதாக நினைக்கும் பலருக்கும் இந்த நற்செய்தி அதிர்ச்சியை அளிக்கும். ஆனால் அவர்கள அவரகளது செயல்களை நியாயமாக பரிசோதித்து பார்த்தால், அவர்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்களா? என்பது தெரியும். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் (அந்த இரு தொழில்கள் தான் உலகில் மிகவும் அவமானகரமான செயல்கள்/தொழில்கள்) உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று சமய வல்லுனர்களை பார்த்து கூறுகிறார்.

இந்த சமய வல்லுனர்கள் யேசு கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்திருந்தும், அவர்கள் யேசுவிற்கு "சரி/ஆமாம்" என்று சொல்வதற்கு பதில், நல்ல விசயங்களை பேசுவதற்கு பதில் அதை செய்ய வேண்டியது தான், செயலில் காமிக்க வேண்டியது தான் யேசுவிற்கு நாம் சொல்லும் பதிலாகும். அவருக்கு சரியான பதில், மோட்சத்திற்கும், நரகத்திற்கும் நடுவில் உள்ள இடைப்பட்ட கோடு ஆகும்.

கடவுளுக்கு சரியான பதில் தேவையில்லை. ஆனால் அவருக்கு சரியான நியாயமான அன்பான செயல்களே தேவை. திருச்சபையின் சட்டங்களை கடைபிடிக்கவேண்டிய செயல்கள் கடவுளுக்கு தேவையில்லை, ஆனால் அன்பினால் ஊக்கப்படுத்தபட்ட கீழ்பபடிதலும், உற்சாகமான உந்துதலுடனும் கடவுளின் தேவைகளுக்கு ஏற்ப ஊழியம் செய்வது தான் கடவுளுக்கு தேவை.

கோவிலுக்கு வெளியே நாம் திருச்சபையின் தேவகளோடு, பரிசுத்தத்தோடும் நடந்து கொள்ளவில்லையென்றால், திருப்பலி பூசைக்கு செல்வதனால் உள்ள பயன் என்ன? ஏன் சிலர் கோவிலுக்கு வருவதில்லை என்று உங்களுக்கு தெரியுமா? ஏனெனில், திருச்சபைக்கும், கிறிஸ்துவின் சரிரத்திற்கும் வெளியே இருப்பது பாவம் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. இயல்பாக அவர்கல் நல்ல செய்லகள் செய்து கொண்டிருந்தாலே , யேசுவின் உண்மையான அன்பை வழிகொண்டிருந்தாலே அவர்கள் கடவுளோடு நெருக்கமானவர்கள் ஆவர். இவர்கள் தினமும் திருப்பலிக்கு சென்று வரும் பக்தர்களை விட, (வெளியே எந்த ஒரு நல்ல செயல்களும் செய்யாமல் இருப்பவர்கள்) சீக்கிரம் கடவுளோடு இனைவர்.

கடவுள் வேண்டாம் அல்லது இல்லை என்று சொல்பவர்களை கண்டனம் செய்வது என்பது நாம் அவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்கிறோம். இந்த செயலை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது. ஒப்பிட்டு பார்ப்பது நம்மை நல்ல மனிதனாக் ஆக்கலாம் அல்லது தீயவர்களாக ஆக்கலாம். நாம் நேற்று எப்படி இருந்தோம் என்று அல்லது , முன்னர் எப்படி இருந்தோம் என்று நாம் நம்மையே ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம். அது என்னவெனில், நாம் கடவுளோடு எப்படி நெருக்கமாக முன்னரும் , தற்போதும் எப்படி இருந்தோம் என்று ஒப்பிட்டு கொள்ளலாம்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: