Friday, September 5, 2008

செப்டம்பர் 7, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 7, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23வது ஞாயிறு
Ezek 33:7-9
Ps 95:1-2, 6-9
Rom 13:8-10
Matt 18:15-20
http://vailankannishrine.org/live/vailailivetelecast.html
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 18

15 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். 16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். 17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். 18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். 20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். '
(thanks to www.arulvakku.com)
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, பரிசுத்தத்திற்கும், உண்மைக்கும், எல்லா சரியான செயல்களுக்கும், நாம் துணை நிற்க வேண்டும், நாம் அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும், பாவ உலகில் உள்ளவர்களை மாற்றுவதற்கும் நாம் துணை செய்ய வேன்டும் என்று கூறுகிறது. நாம் அவ்வாறு செய்யவில்லையென்றால், நாமும் அந்த பாவிகளை போல பாவம் செய்பவர்கள் ஆவோம். நமக்கும் அந்த பொறுப்பிருக்கிறது (முதல் வாசகம்)

நாம் கருனையுடனும், இரக்கத்துடனும் , பாவிகளை அனுகவில்லையென்றால், அதுவும் ஒரு பாவமாகும். (இரண்டாவது வாசக்கம்).

திருச்சபை சமூகத்துடனும், உங்கள் கோரிக்கைகளை வைத்து, அவர்களும் உங்களோடு இனைந்து, அவர்களையும் உங்களுக்காக பேச அழைக்க வேன்டும், என இன்றைய நற்செய்தியில், யேசு அறிவுறுத்துகிறார். அவர்களுடைய ஜெபத்துக்காகவும் நாம் அவர்களோடு சேரவேன்டும் என வலியுறுத்துகிறார்.


முதலில், நாம் பாவிகளுடன் பேசவேண்டும். பாவிகள் அவர்களையும் மற்றும் பலரையும் அவர்கள் பாவத்தினால் பாதிக்கிறார்கள் என்று நாம் அறிந்தால்,(எல்லா பாவங்களும் துன்பத்தை கொடுக்கும். நாம் அதை அறிந்தாலும், அறியாவிட்டாலும், நிச்சயம் பாதிப்பு இருக்கும்), நாம் அதன் விளைவுகளை , அவர்களிடத்தில் சொல்லவில்லையென்றால், நமது அமைதி அன்பிற்கு எதிரானது ஆகும், அக்கறையில்லாமயை காட்டுகிறது.

நாம் உண்மையை பகிர்ந்து கொண்டால், நாம் குற்ற உணர்விலிருந்து, விடுபட்டுவிடுகிறோம். ஆனால், நாம் அவர்களை அன்பு செய்வதை மட்டும் நிறுத்தி விட கூடாது. அதனால், நாம் சிலரை அழைத்து கொண்டு, மேலும் அதிக முயற்சிஉடன் பாவிகளை அவர்கள் பாவங்களிலிருந்டு விடுபட வைக்க வேண்டும். அந்த முயற்சி தோல்வியடந்தால்,மேலும் பலரை சேர்த்து கொண்டு நமது முயற்சியை தொடரவேண்டும்.

எல்லா முறையும் நமது முயற்சி தோல்வியடைந்தால், நாம் நமது முயற்சியை கைவிட்டுவிடவேண்டும். மற்றும் அவர்களிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும். உண்மையில் அவர்கள் தான் நம்மிடமிருந்து பிரிந்து இருக்கிறார்கள். அவர்கள் தான் நம்மை விட்டு விலகி செல்கின்றனர். யேசு எவ்வாறு யூதரல்லாதவர்களையும், வரி வசூலிப்பவர்களை (அன்புடன்) நடத்தினார் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எப்போதுமே அவர்கள் மேல் அன்பு கொள்வதில் எந்த தடுமாற்றமும் யேசுவிடம் இல்லை. மேலும் அவர்களுக்காக மரணமடைய ஆவல் கொண்டார். தன்னையே தயார்படுத்கிகொண்டார்.

No comments: