Friday, March 27, 2009

மார்ச் 29, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 29, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு
Jeremiah 31:31-34
Ps 51:3-4, 12-15
Hebrews 5:7-9
John 12:20-33
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 12
20 வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.21 இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ' ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள்.22 பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.23 இயேசு அவர்களைப் பார்த்து, ' மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.25 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் ' என்றார்.27 மேலும் இயேசு, ' இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ' தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.28 தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் ' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ' மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது.29 அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ' அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், ' அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர்.30 இயேசு அவர்களைப் பார்த்து, ' இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.31 இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் ' என்றார்.33 தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)


நாம் கடவுளை விசுவசிக்க வேண்டும், யேசு நம்மை எங்கு அழைத்து சென்றாலும், அவரை பின் தொடர வேண்டும் என்ற நமது ஆசையில் ஊடே, அதனுடைய துன்பங்களை நினைத்து, நாம் வருத்தபட்டால், அது ஒன்றும் பாவம் இல்லை.

நமது சொந்த வாழ்வை, அதனுடைய விருப்பங்களை நாம் நிராகரிக்க நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். (நம் சொந்த ஆசைகள், நாம் நம் நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்று நாம் விரும்புவது) போன்றவற்றை நாம் விடவேண்டியிருக்கும். அதனால், கிறிஸ்துவுடன் நம்மை இனைத்து கொள்ள முடியும், அதன் மூலம், அவரின் கருணையுள்ள அன்பை நாம் அனைத்து கொள்ள முடியும்.

இன்றைய நற்செய்தியில், யேசு செய்ய வேண்டிய தியாகத்தை நினைத்து கலக்கமுற்றார் என்பதனை காட்டுகிறது. ஆம், யேசு கூட அதனை நினைத்து, மிகவும் கலக்கமும், வேதனையும் அடைந்தார்!. கடவுள் அவரை மாட்சிமைபடுத்தினார்.

கடவுளின் அன்பையும், அவரின் வழிகளையும் நமக்கு காட்டவே யேசு இவ்வுலகிற்கு வந்தார், மேலும், நம்மையெல்லாம், மோட்சத்திற்கு அழைத்து செல்லவும், யேசு இங்கு வந்தார். தற்போது, நாம், அவரை பின் செல்பவர்களாக, இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும், வாழும் நாம், கடவுளின் வழியையும், கடவுளின் அன்பையும் நம்மை சுற்றி இருப்போருக்கு எடுத்து சொல்ல, அருட்சாதனங்கள் மூலம், நாம் அழைக்கபட்டிருக்கிறோம். அந்த பொருப்புகள் நமக்கு ஒப்படைக்கபட்டிருக்கிறது. அவர்களையெல்லாம், மோட்சத்திற்கு அழைத்த செல்ல வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.

ஞனஸ்நாண அருட்சாதனம் இந்த அழைப்பை ஆரம்பித்துவைக்கிறது. உறுதிபூசுதல் மூலம் இந்த அழைப்பு உங்களுக்கு அளிக்கபடுகிறது. பாவசங்கீர்த்தனம் நம்மை சுத்தபடுத்தி, இந்த இறைசேவையை இன்னும் நல்ல முறையில் செய்ய வைக்கிறது. திருமணமும் இந்த அழைப்பை முழுமையாக்க வழிதடத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. நோயுற்றிருப்போருக்கு எண்னெய் அபிஷேகம் செய்வது, கிறிஸ்துவின் சேவைக்கு சாட்சியம் கொடுக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. கிறிஸ்துவின் திவிய நற்கருணை நம்மை கிறிஸ்துவின் கருனையுள்ள அன்போடு இனைத்து, நாம் எதற்காக அழைக்க பட்டிருக்கோமோ, அப்படியே மாற்றிவிடுகிறது.

இது தான் நாம் தினமும், மணம் மாறுதலுக்கு செய்ய வேண்டிய இறைசேவையாகும். நாம் மற்றவர்களை யேசு அன்பு செய்வது போல அன்பு செய்ய வேண்டும். யேசு அவர்களுக்கு என்ன செய்ய விரும்புகிறாரோ, அதனையே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும். நாம் நற்செய்தியை பரப்ப வேண்டும், இதுவே தொடர்ந்து நடைமுறைபடுத்தினால், அதுவே யேசுவின் சேவையை தொடர்ந்து செய்வதாகும்.

அடிக்கடி, நாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கும், நம்மை நிராகரித்தவர்களுக்கு நாம் நல்லது செய்ய வேண்டியிருக்கும். எந்த வழியிலும் அவர்கள் நம்மை துன்புறுத்தினாலும், அவர்களுக்கு நல்லது செய்தல் வேண்டும். இது தான் நாம் கிறிஸ்துவோடு இனைதல் ஆகும். நமது ஆர்வம் இதன செய்ய வேண்டும் என்று விரும்புவதாக இருக்க கூடாது, இந்த செயல்கள் எல்லாவற்றையும் நாம் செய்ய கடமை பட்டிருக்கிறோம்.

தந்தை கடவுள் இதற்காக நம்மை மகிமைபடுத்துகிறார். யேசுவை எப்படி மகிமைபடுத்தினாரோ, அப்படியே கடவுள் நம்மை மகிமைபடுத்துகிறார். அவரின் கருனையாலும், பாராட்டுதலாலும், நம்மை ஏற்றுகொண்டும் நம்மை கொளரப்படுத்துகிறார்.

இந்த இறைசேவையில், பல சவால்களை சந்திப்பதால், நம் மண சஞ்சலம் அடைவதால் ஒன்றும் தப்பில்லை. நாம் தொடர்ந்து செயல்பட, கடவுள் நம்மோடு கூடவே இருக்கிறார், அவர்தான் நம்மை வழி நடத்துகிறார் என்று அறிந்திருந்தாலே அதுவே நமக்கு பலம். ஒவ்வொரு சிலுவைக்கு பின்பும் வெற்றி உள்ளது.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: