Friday, January 22, 2010

ஜனவரி 24, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 24, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆண்டின் 3ம் ஞாயிறு

Neh 8:2-6, 8-10
Ps 19:8-10, 15
1 Cor 12:4-11
Luke 1:1-4; 4:14-21


லூக்கா நற்செய்தி



அதிகாரம் 1

1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்: 2 தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

அதிகாரம் 4
14 பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.15 அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.

(thanks to www.arulvakku.com)




இன்றைய நற்செய்தியில், "' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்" என்று யேசு சொல்வதாக நாம் கேட்கிறோம். நீங்கள் கேட்டது , அவரின் ஆசையை நிறிவேற்றிவிட்டீர்கள்.



இந்த இறைசேவை, யேசு மோட்சத்திற்கு சென்றவுடன், முடிந்து விட்டதா?

கொரிந்தியர் வாசகத்தில் கூறப்பட்டுள்ளது போல, நாம் கிறிஸ்துவின் உடலாய் இந்த உலகில் இருக்கிறோம். நாமெல்லாம், இந்த உடலின் முக்கிய பாகங்களாக இருக்கிறோம். நீங்கள் உங்களையே குறைந்து மதிப்பிட்டு கொள்ளாதீர்கள். கடவுள் உங்களை உருவாக்கி, திருச்சபைக்கு உங்களை கொண்டுவந்துக், உங்களால் நிச்சயம் ஒரு மாறுபாட்டை திருச்சபைக்கு கொண்டுவரம் முடியும் என்று நம்பி உங்களிடம் எதிர்பார்க்கிறார். உங்களால் செய்ய முடிவதை வேறு யாரும் செய்ய முடியாது. கடவுளின் திட்டத்தில், உங்களால், இந்த உலகை, நல்ல நிலைக்கு கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.


கிறிஸ்தவர்கள் அனைவரும், விசுவாசமிக்க குழுவாக, கிறிஸ்துவின் உடலாக இந்த உலகில் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும், திவ்ய நற்கருணையை நாம் பெறும்போது,கிறிஸ்துவின் உடலை, அவர் உடலாக நாம் பெற்று கொள்கிறோம். அதன் மூலம், நமது இறைசேவையை மீண்டும் புதுப்பித்து கொள்கிறோம். கிறிஸ்துவின் நோக்கம் தான், நமது நோக்கமாக இருக்கிறது.


யேசுவை திவ்ய நற்கருணையில் பெரும்போது, யேசுவை, முழு மனிதனாகவும், முழு தெய்வமாகவும் பெறுகிறோம். அவரின் சேவையையும், முழுதும் பெறுகிறோம். ஆண்டவரின் ஆவியையும் பெற்றுகொள்கிறோம். ஒவ்வொரு திருப்பலியும், நமது இறைசேவையை புதுபிக்கும் கருவியாக உள்ளது. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைபட்டோர் விடுதலை அடையவும், குருடர்கள் கண் திறக்கவும், இறைவனுக்கு ஏற்றதை, அனைவருக்கும் அறிவிக்கவும். நாம் நமது இறைசேவையை தொடர வேண்டும்.


இதனையே வேறு மாதிரியாக சொல்வதானால், ஒவ்வொரு முறையும், கிறிஸ்துவின் திவ்ய நற்கருணை நாம் பெறும்போது, இன்றைய நற்செய்தியில், யேசு சொல்வது நமக்கும் நடக்கிறது.

இப்படி நடக்காமல் இருக்க , பாவம் தான் தடுக்கிறது.

மற்றவர்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காத பொழுது, பாவங்கள் இந்த உலகில் மேலோங்கி இருப்பதற்கும், நற்செய்தியை , யேசுவின் மீட்பை கேட்காமல், துன்புறும் ஆன்மாக்களும் அதிகம் இருப்பதற்கு காரனம், கிறிஸ்துவின் உடல் பாகங்களாகிய நாம், நமது இறைசேவையை சரியாக செய்ய வில்லை என்று அர்த்தம். இந்த உலகிற்கு தேவைசெய்கிறார். யான அனைத்தையும் நம் மூலம் கடவுள் கொடுக்கிறார். யேசு அவரின் இறைசேவையை, நம் மூலம் தொடர்ந்து

© 2010 by Terry A. Modica

No comments: