Friday, March 12, 2010

14 மார்ச் 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

14 மார்ச் 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
Jos 5:9a, 10-12
Ps 34:2-7
2 Cor 5:17-21
Luke 15:1-3, 11-32



லூக்கா நற்செய்தி


அதிகாரம் 15

1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '



(thanks to www.arulvakku.com)


கடவுளின் நிபந்தனையற்ற மன்னிப்பையும், அளவற்ற அன்பையும் ஏற்றுகொள்வதற்கு நாம் தகுதியானவர்களா? ஒவ்வொரு திருப்பலியிலும், நாம், "ஆண்டவரே, நாம் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லும், நான் குனமடைவேன்." என்று வேண்டுகிறோம். இன்றைய நற்செய்தியில், யேசு நாம் எல்லாம் தகுதி உடையவர்கள் என்று சொல்கிறார். நாம் என்ன செய்தோமோ அதனால் நாம் தகுதிஉடையவர்கள் இல்லை, யேசு நமக்கு என்ன செய்தாரோ அதனால் நாம் தகுதி உடையவர்கள் ஆகிறோம். யேசு நமக்கு செய்தது: சிலுவையைல் மரித்து, நம் பாவங்களை அவர் தோற்கடித்து அதன் மூலம், நித்திய வாழ்வில் நாமும் யேசுவோடு உயிர்த்தெழுந்து , கடவுளோடு இனைவோம்.


இன்றைய உவமையில், அந்த இளைய மகன் வீட்டிற்கு திரும்பி வந்ததாலேயோ அல்லது, அவனின் பாவங்களை நினைத்து மனம்வருந்தி மீண்டும் வந்ததாலேயோ, அவரின் தந்தையின் அன்பை பெற்று கொள்ள தகுதியானவனாக ஆகவில்லை. அவனின் தந்தையின் அன்பினால் தான், அவன் தகுதி உடையவன் ஆனான். அந்த தந்தை மகனின் மேல் அன்பு கொன்டார். தன் மகன் தொலை தூரத்தில் இருக்கும்போதே அன்பு கொன்டிருந்தார். இன்னும் பாவ வாழ்க்கையில் அழிந்து கொன்டிருந்தான் என்று அறிந்தும் அந்த தந்தை அவன் மேல் அன்பு கொன்டிருந்தார்.

அந்த மகன் தந்தைக்கு எதிராக திரும்பினாலும், தந்தை நிபந்தனையற்ற அன்பை தன் மகன் மேல் வைத்திருந்தார், அந்த அன்பை தனது அன்பளிப்பாக தன் மகனுக்கு அளவற்ற அன்பை கொடுத்தார். மகனோ தனது தந்தைக்கு கொடுத்த அன்பளிப்பு என்னவென்றால், தந்தையின் அன்பை , திறந்த மனதோடு ஏற்று கொள்ள தயாராக வந்தது தான்.

ஒவ்வொரு திருப்பலிக்கும், ஊதாரித்தனமான மகனை போலத்தான், நாம் போகிறோம். வாரம் முழுவதும், நல்ல கிறிஸ்தவனாக இருந்தாலும், ஏதாவது ஒரு வழியில், நாம் கடவுளின் நிபந்தனையற்ற அன்பிற்கும், விசுவாசமுள்ள அன்பிற்கும் எதிராக இருந்திருப்போம். அதனால் தான், திருப்ப்லியின் ஆரம்பத்தில், நாம் பாவிகள் என்று ஏற்றுகொள்கிறோம். இந்த பாவ மன்னிப்பை ஏற்று கொள்வதில் நாம் மிகவும் முக்கியமான நிகழ்வாக எடுத்து கொள்ள வேன்டும்.


அடுத்ததாக, கடவுளோடு அறுபட்ட நம் உறவை குணப்படுத்தும் வார்த்தையை கேட்கிறோம். அடுத்ததாக நாம் ப்ரசங்கம் கேட்கிறோம், அது நல்ல முறையில் முறையாக தயாரிக்கப்பட்டு, நற்செய்தியின் கருத்துகளை முறையாக கூறப்படவேண்டும். மேலும், யேசு பரிசுத்த ஆவியின் மூலமாக நம்மிடம் பேசுகிறார். உங்கள் இதயதை கேளுங்கள்.யேசு வார்த்தை மறு உருவானவர் , நீங்கள் "வார்த்தை கூறினால், நாங்கள் குணமடைவோம்" என்ற வேன்டுதலுக்கு, யேசு ஏற்கனவே பதில் தர ஆரம்பித்து விட்டார்.


கானிக்கை நிகழ்வில், நாம் நம்மையே கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம். அவரிடம் நாம் சரண்டையும் தருணமாகும். " நான் உங்கள் மகனாக / மகளாக இருப்பதார்கு தகுதியற்றவன், உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்" அவரிடம் சரணடைகிறோம். கடவூளுடைய விருப்பம் என்னவென்றால், நாம் முழு அன்போடும், அதிகம் கொடுத்தும், மற்றவர்களிடமிருந்து நாம் பெற்றுகொள்ளும் உறவோடு, இறைவனின் குடும்பத்தோடு இனைய வேண்டும். என்று கடவுள் ஆசைபடுகிறார். அதனால், நமக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அன்பளிப்பான திவ்ய நற்கருணையை நாம் பெற்று , அதன் மூலம் கடவுளின் முழு குடும்பத்தோடும் நாம் ஒன்றினைவோம்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

No comments: