Friday, March 5, 2010

மார்ச் 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Cor 10:1-6, 10-12
Luke 13:1-9


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 13

1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார்.6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ' ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ' பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார்.8தொழிலாளர் மறுமொழியாக, ' ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார். '



(thanks to www.arulvakku.com)

மிகவும் கொடூரமான, தவறான முறையைல் எல்லோரையும் பாதிக்கும் செயல்கள் செய்பவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்து அவர்கள் மிகவும் கஷ்டப்படும்பொழுது, நாம் அனைவரும் சந்தோசப்படுவோம், ஏனெனில், அவர்களுக்கு சரியான தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என நாம் நினைக்கிறோம்.

இதை தான் யேசு இன்றைய நற்செய்தியில் செய்தியாக நமக்கு கொடுக்கிறார். நம்மை விட மற்றவர்கள் பெரிய பாவிகள் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். அவர்கள் நம்மை விட தீயவர்களாக இருந்தாலும், நாம் அவர்கள் பெரும்பாவிகள் என்று சொல்ல கூடாது.

ஒவ்வொரு மனிதனும், கடவுளின் உருவத்தை போல படைக்கப்பட்டுள்ளான், தீயவர்களும் அப்படியே படைக்கப்பட்டுள்ளனர். கடவுளுக்கு எதிரான உருவத்தை யாரும் காட்டினாலும், அவர்களையும் யேசு அன்பு செய்தார், அவர்களுக்காகவும் அவர் மரித்தார்.எந்த மனிதரும் தீய மனிதர் கிடையாது, அவர்கள் உடைந்த மனிதர்கள். அவர்கள் அனைவரும் பேயின் தூன்டுதலால், தவறான வழியில் செல்பவர்கள். நமக்காகவே உடைந்த யேசுபிரானின் பாவமற்ற மனம், இந்த பாவ வழியில் செல்பவர்களை புனிதமாக்கும், என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. அவர்களுக்காக நாம் வருத்தபட வேண்டும். அந்த தியவர்கள் இன்னும் அந்த பாவத்திலேயே இருக்கிறார்களே என்று யேசுவோடு நாமும் சேர்ந்து கவலைபடவேன்டும்.


ஒரு மனிதனின் ஆன்மா அழிவு பாதையில் செல்வதை நினைத்து நாம் வருத்தப்படவில்லை என்றால், நாம் பாவம் செய்கிறோம். யேசு நமக்காக சிலுவையில் செய்ததை நாம் அலட்சியம் செய்கிறோம். நாம் நம் ஆன்மாவையே புன்படுத்திகொள்கிறோம்.

உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், அத்தி மரத்தை போன்றவர்கள் ஆவர். உங்களால் அவர்களை கேட்க வைக்க முடியும் என்றால், நீங்கள் அவர்களுக்கு உரம் போட வேன்டும் என்று யேசு கூறுகிறார். உங்கள் நடவடிக்கைகள் மூலமும், உங்கள் வார்த்தைகள் மூலமும், அவர்களுக்கு நீங்கள் உரமாக இருக்க வேன்டும் என்று யேசு விரும்புகிறர். சரியான திசையில் அவர்களை செலுத்த நீங்கள் பனிவுடனும், கனிவுடனும் அறிவுறுத்த வேண்டும் என யேசு ஆசைபடுகிறார்.


யேசு கனிகொடாத மரத்தை அதிக நாட்கள் வைத்திருக்க விரும்பவில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மால் செய்ய முடிந்த்தெல்லாம் செய்தும், தியவர்கள் மனதிரும்பவில்லை என்றால், அந்த தோட்டத்திற்கு நம்மால் முடிந்த உதவி என்னவென்றால், அந்த மரத்தை வெட்டிவிடுவது தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால், அவர்களை விட்டு விலகி விடுவது அல்லது, சரியான் அதிகார்த்தில் இருக்கும் நபரிடம், இந்த ப்ரச்னைகளை கையான்டு, அவர்களின் தீமைகளுக்கு சரியான தன்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேன்டும். இதனையும் மிகவும் கனிவுடனும், பொருமையுடனும் செய்ய வேன்டும். உரம் கொடுத்தும் , நல்ல பழங்களை தரவில்லையென்றால், அந்த மரம் கீழே விழுந்து, மக்கி மற்ற புதிய மரங்களுக்கு உரமாக இருக்கும்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

No comments: