Friday, April 16, 2010

ஏப்ரல் 18 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 18 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 3வது ஞாயிறு
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 21

1 பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள்.6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ' அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.8 மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார்.11 சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.12 இயேசு அவர்களிடம், ' உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், ' நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.13 இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.14 இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! 'என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார். 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார்.17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? 'என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? ″ என்றார். இயேசு அவரிடம், ″ என் ஆடுகளைப் பேணிவளர். ″ 18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் ' என்றார்.



(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியை மீண்டும் படித்து பாருங்கள். சீடர்கள் கரைக்கு வரும்போது, இயேசு எப்படி மீனை சுட்டு கொண்டிருந்தார், அவருக்கு அந்த மீன்கள் எங்கிருந்து வந்தது? அவரிடம் வலை இருந்ததா? அல்லது ரொட்டி துன்டுகளை வாங்கும்போது, மீனையும் அந்த நகரத்தில் வாங்கினாரா? அப்படி இருந்திருக்குமேயானால், அவரை யாரும் கண்டுபிடிக்க வில்லையா? யேசு தான் அவர் என்று யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? அல்லது அந்த மீன்கள் நீரிலிருந்து குதித்து வந்ததா? மேலும், யேசுவே, கற்களை ரொட்டி துண்டுகளாக மாற்றினாரா? சாத்தான் பாலைவனத்தில் அவரை சோதித்த போது ரொட்டி துண்டுகளாக மாற்றியதை போல இயேசு மாற்றினாரா?


ரொட்டி துன்டுகளையும் மீன்களையும் பல மடங்காக யேசு பெருக்கியதை நினைத்து பாருங்கள். அதே உணவு தான்: ரொட்டியும் மீனும். அதே அற்புதம் இங்கும் நடந்துள்ளது. சிறியதாக இருக்கிறதே என்பது ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. கடவுள், இந்த உலகை படைத்தவர், நமக்கு என்னிலடங்கா பொருட்களை கொடுத்தவர் ஆவார். அவரால் தேவையான அளவு உருவாக்க முடியும். நம்மிடம் என்ன இருக்கிறது என்பதால் அவர் கொடுப்பதில்லை, நம் மேல் உள்ள அன்பினால், அவர் நமக்கு கொடுக்கிறார்.


கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் , அவர் நமக்கு கொடுத்ததை மற்றவர்களிடமும் பகிரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார். கூட்டத்தினருக்கு தேவையான உணவை பல மடங்காக பெருக்கிய அற்புதத்தில், சீடர்களை கூப்பிட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்க சொன்னார். இன்றைய அற்புதத்தில், சீடர்களிடம் மீனை பிடித்து வந்து , அவர் சமைத்து கொண்டிருக்கும் உணவோடு சேர்க்க சொல்கிறார்.

அதற்கு பிறகு, இராயப்பரிடம் ,யேசுவின் அன்புக்கு பாத்திரமான ஆடுகளுடன் , யேசுவின் அன்பை பகிரிந்து கொள்ள சொல்கிறார். அன்பு எங்கிருந்து வருகிறது. இராயப்பர் அவருடைய சொந்த முயற்சியில் யாரையும் அன்பு செய்ய வில்லை. நாமும் அப்படி செய்வதில்லை. இராயப்பர் , கடவுளின் அன்பால் உருவாக்கப்பட்டவர், அந்த அன்பு இராயப்பரிடம் உள்ளது. அதே போல், நம்மிடமும் கடவுளின் அன்பு உள்ளது. முழு அன்பாய் இருக்கிற கடவுளின் உருவத்தை போல நாமும் படைக்கப்பட்டிருக்கிறோம். அளவுக்கு அதிகமான கடவுளின் அன்பை நாமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என இராயப்பர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். அதன் மூலம், கடவுளரசு இந்த பூமி முழுதும் பரவட்டும்.

கடவுள் உன்னிடம் என்ன செய்ய சொல்கிறார்? எதனை பகிர்ந்து கொள்ள சொல்கிறார். அதற்கு பதில், உன்னிடம் என்ன உள்ளது என்பது இல்லை, ஆனால், கடவுளிடம் உள்ளதை வைத்து நீ பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறாயா, உளப்பூர்வமான ஆர்வத்துடன் உள்ளாயா என்பது தான்.

© 2010 by Terry A. Modica

No comments: