Friday, April 23, 2010

ஏப்ரல் 25, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் கால 4ம் ஞாயிறு
Acts 13:14, 43-52
Ps 100:1-3, 5
Rev 7:9, 14b-17
John 10:27-30


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 10

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.28நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 30நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி மிகச் சிறியது மேலும், சரியான விசயத்தை நமக்கு எடுத்து காட்டுகிறது: யேசு , நமது நல்லாயன். அவரை மட்டும் தான், நாம் அவர் பின் செல்கிறோம். அவரை மட்டும் தான் நாம் கண் மூடித்தனமாக நம்புகிறோம். நம் வாழ்வில், நம் மேல் அக்கறை உள்ளவர்கள் நமக்கு நல்ல ஆயனாக இருக்கலாம், ஆனால் அவர்களை நாம் கன்மூடி தனமாக பின் பற்ற வேண்டியதில்லை. பிஷப்களையும், பங்கு குருக்களையும், முதலாளிகள், பெற்றோர்கள் அவர்கள் அனைவரையும், அவர்களின் பொறுப்புகளுக்காக நாம் மதிக்கிறோம். ஆனால் அவர்கள் அனைவரும் சில நேரஙளில் தவறு செய்பவர்கள். அவர்கள் பொறுப்புகளை விட்டு , எது சரி , தவறு என்று அவர்களால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.


ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், முடிவெடுக்கும் திறமையை நாம் பரிசுத்த ஆவியின் மூலம் பெற்று, நாம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி செய்ய வில்லையெனில், நமது தந்தை கடவுளை நாம் வருத்தப்பட வைக்கிறோம். யேசு ஒருவரை தான் நாம் கண்மூடித்தனமாக நாம் நம்ப வேண்டும். யேசு மட்டும் தான் மிகச் சரியானவர். அவருக்கு தான் எல்லாம் தெரியும். எல்லாவற்றையும் புரிந்து கொள்ளுபவர், மேலும் எந்த பாவமும் செய்யாதவர். யேசுவால் மட்டும் தான் வெற்றிகரமாக , மிக சரியான முடிவுகளை எடுக்க முடியும். எல்லா நேரங்களிலும், கடினமான நேரங்களிலும், எல்லா சமயஙளிலும், சாத்தானில் உதவியின்றி, யேசுவால் மட்டுமே முடியும். எல்லா திட்டங்களிலும், யாருமே பாதிக்கபடாமால், சரியான வழியை கொடுக்க முடியும். யேசுவால் மட்டுமே நம்மை மோட்சத்திற்கு நமது ஆபத்தான பயனத்திலிருந்து நம்மை அழைத்து செல்ல முடியும்.



யேசுவின் திட்டத்திலிருந்து, நாம் விலகி செல்கையில், நாம் தவறு செய்கையில் யேசுவினால் மட்டும் தான் நம்மை பார்த்து சிரிக்க முடியும். ஏனெனில், நாம் அவரை அன்பு செய்கிறோம், நல்லதைய செய்ய விரும்புகிறோம் என்று யேசுவிற்கு தெரியும். பாதுகாப்பான வழியில் நம்மை மீண்டும் அழைத்து செல்வார். இரக்கத்துடனும், அன்புடனும் நமது கைகளை பற்றி கொண்டு நம்மை யேசு அழைத்து செல்கிறார், அதனால், நாம் நமது தந்தை கடவுளின் கைகளை விட்டு விடாமல் பார்த்து கொள்கிறார்.



எப்பொழுதாவது நீங்கள் யாரையாவது நம்ப வில்லையென்றால் -- நம்மையும் சேர்த்து தான் -- கண்டிப்பாக யேசு நம்முடன் இருக்கிறார் என்று நாம் நம்பலாம். ஒவ்வொரு நிலைகளிலும், நம்மை வழி நடத்தி செல்வார், நாம் அவரை விட்டு விலகி சென்றாலும், மீண்டும் வந்து நம்மை மீட்டு நல் வழியில் வழி நடத்தி செல்வார். ஏனெனில், நாம் அவரை உண்மையாகவே அன்பு செய்கிறோம். மேலும், நல்லதையே செய்ய விரும்புகிறோம். என்று அவருக்கு தெரியும். நமது பாதுகாப்பை உறுதி படுத்துகிறார். நமது தவறுகளிலிருந்து நம்மை மீட்டு , நாம் நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போது, நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்கிறார்.

© 2010 by Terry A. Modica

No comments: