Friday, October 7, 2011

அக்டோபர் 9, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 9, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு

Is 25:6-10a
Ps 23:1-6
Phil 4:12-14,19-20
Matt 22:1-14


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 22


திருமண விருந்து உவமை
(லூக் 14:15 - 24)
1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது:2 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ' நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் ' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.8 பின்னர் தம் பணியாளர்களிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள் ' என்றார்.10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.12 அரசர் அவனைப் பார்த்து, ' தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? ' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ' அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்றார்.14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். '
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, போலியானவர்களின் ப்ரச்னையை பற்றி கூறுகிறது. அது என்னவென்றால், சிலர் இயேசுவின் நட்பை பெற, திருப்பலிக்கு ஒழுங்காக செல்வதும், ஆனால், கடவுளோடு உண்மையான, இயல்பான நட்புடன் வாழ அவர்கள் முயல்வதில்லை.

உங்களுக்கு ஒரு சிலரின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்கும்: சிலர், அவர்களுக்கு தேவையான விசயங்கள் பயன் பெறும் வரை நம்மோடு நட்பாக இருப்பார்கள். அவர்களுக்கு தோதாக இருக்கும்பொழுது தான் நல்ல விசயங்களை செய்வார்கள். கத்தோலிக்க நெறிமுறைகளை திருப்பலியில் மட்டும் தான் பின் பற்றுவார்கள், ஆனால் வீட்டிலோ அவர்கள் சிறிது நேரம் கூட ஜெபம் செய்வதில்லை. அவர்கள் விசுவாசம் ஆழமில்லாத, கொஞ்சமாக இருப்பதால், திருப்பலிக்கு கூட அவர்கள் செல்ல முயல்வதில்லை. குருவானவர் பாவம் செய்யும்பொழுது, அவர்கள் கத்தோலிக்கத்தை விட்டு வெளியே செல்கிறார்கள். அவர்கள் உங்களோடு கொண்டுள்ள உறவில் மணந்திரும்புதல் தேவைபட்டால், அவர்கள் உங்களை ஒதுக்கி தள்ளுகிறார்கள்.


கடவுளோடு உண்மையான நட்புறவை கொண்டுள்ளவர்கள் மேல் கடவுளின் ப்ரசன்னமும் , அவர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் கடவுளின் அன்பும் , ஆசிர்வாதமும் நமக்கு தெரியும். அதுவும் அன்பே செய்ய முடியாதவர்களிடமும், அன்பு காட்டும்பொழுது நமக்கு தெரியும்.

போலியானவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். விருந்தில் கலந்து கொள்ள எல்லோருக்கும் அழைப்பு கொடுக்கபட்டது, ஆனால் அவர்கள் கடவுளின் குழந்தகளாக சந்தோசமாகவே இருக்க விரும்புகிறார்கள், கடவுளின் அன்பை மற்றவர்களொடு பகிர்ந்து கொள்ள வெண்டும் என்கிற பொழுது, அதன் கடினத்தை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள் , கடவுள் அவர்களுக்கு ஒரு எல்லையை வைத்துள்ளார்.

நீங்கள் விருந்துக்கு அழைத்தவர்கள் பற்றி எண்ணி பாருங்கள். அவர்களோடு நட்பு கடவுளோடு இனைந்த , மிகவும் சிறப்பான நட்பாக இருக்கும். ஆனால், அவர்களோ, அவர்களின் தேவைகேற்ப, அந்த நட்புறவை தீமையான பயனுக்கு உபயோக்கிறார்கள். நாம் அவர்களை அன்பு செய்ய வேண்டும் ஆனால் அதனால் எந்த கெடுதலும் நடந்து விட கூடாது. அந்த நட்புறவை நல்ல உறவாக மாற்ற நாம் முயற்சி செய்ய வெண்டும். மற்றவர்கள் அதனை செய்யாத பொழுது, அவர்கள் இந்த நட்புறவை உதறி தள்ளுகிறார்கள்.

அவர்கள் மணந்திரும்ப , மண மாற்றத்திற்கும் , குணப்படுத்தவும், கடவுள் நம்மை எல்லாவிதங்களிலும் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அந்த சிலுவையை நாம் சுமக்க வேண்டும் என்று கடவுள் அழைக்கிறார். எனினும், நமது எல்லைகள் காக்கப்படவேண்டும். நமது முயற்சிகள் பயன் தராவிட்டால், நாம் நமது வழியில் செல்ல வேண்டும் என்று கடவுள் சொல்கிறார்.
மேலும், எப்பொழுது, கடவுளின் உண்மையான நட்புறவுடன் இருப்பவர்களோடு நமது நட்புறவு தொடர நாம் செல்வோம்.

© 2011 by Terry A. Modica

No comments: