Friday, September 14, 2012

செப்டம்பர் 16 2012 ஞாயிறு நற்செய்தி மறைரை



செப்டம்பர் 16 2012 ஞாயிறு நற்செய்தி மறைரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Is 50:5-9a
Ps 116:1-6, 8-9
James 2:14-18
Mark 8:27-35

மாற்கு நற்செய்தி
அதிகாரம் 8

இயேசுவே மெசியா என்னும் அறிக்கை
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை

(மத் 16:13 - 20; லூக் 9:18 - 21)
27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.28 அதற்கு அவர்கள் அவரிடம், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.29 ' ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா ' என்று உரைத்தார்.30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

3. இயேசுவே மானிடமகன்
பயணம் செய்யும் மானிடமகன்
இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்

(மத் 16:21 - 28; லூக் 9:22 - 27)
31 ' மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.32 இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். 33 ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ' என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்று கடிந்துகொண்டார்.34 பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.35 ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் இரண்டாவது வாசகம், கத்தோலிக்க விசுவாச மதக்கோட்ப்படுகளையும், அதன் செயல்களையும் நமக்கு தெளிவுற எடுத்து கூறுகிறது.

விசுவாசமில்லாத எந்த செயல்பாடுகளும், எவ்வளவு நல்ல செயலாக இருந்தாலும், நம்மை மோட்சத்திற்கு இட்டு செல்வதில்லை. கடவுளின் இதயத்தில் இடம் பிடிக்க நம்மில் சிலர், கோவிலில் பங்கு பணிகளை ஆற்றுகிறோம். எல்லா ஜெபங்களையும் மிக சரியாக சொல்கிறோம். இருந்தும், இந்த பழக்க வழக்கங்கள், நமது சிறு பிள்ளை முதற்கொண்டே நாம் செய்து வருகிறோம்: "நாம் சரியாக இருந்தால், அப்பாவும் , அம்மாவும், எனக்கு பரிசளிப்பார்கள் " என்ற எண்ணத்தோடும், 'பள்ளியில் ஒழுங்காக படித்தால், ஆசிரியர் நம்மை பாராட்டுவார்" என்ற எண்ணத்திலும் வளர்ந்து வந்திருக்கிறோம்.

ஆனால், ப்ரச்னை என்னவெனில், மோட்சத்திற்கு, நாம் இன்னும் முழுமையான தகுதியுடன் இருக்கவில்லை. அதனால் தான் இயேசு இவ்வுலகிற்கு வந்து, நமது பாவங்களை அவரது சிலுவையில் எடுத்து சென்றார்.
செயல்கள் செய்யாமல் நம்பிக்கையுடன் இருந்தால் நம்மால் மோட்சத்திற்கு செல்ல முடியாது. ஏனெனில்:
இயேசுவில் நாம் நம்பிக்கை கொண்டு, அவரின் அன்பில் நம் விசுவாசத்தை வளரவிட வேண்டும். அவர் நமக்காக இறந்தார், மேலும் நம் மோட்ச வாழ்விற்காக மீண்டும் உயிர் பெற்றார். இது தான் நமக்கு மோட்சத்தை திறக்கிறது. அந்த திறந்த கதவில் நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும். இதற்கு, வெறும், கிறிஸ்துவின் இறப்பிலும், உயிர்ப்பிலும், நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது, அவரது வாழ்வையும் , எப்படி அந்த வாழ்வை கிறிஸ்து வாழ்ந்தார் என்றும் நாம் பார்த்து அதன் படி வாழவேண்டும், கிறிஸ்துவை பின் செல்வதால், நமது வாழ்க்கை முறையை மாற்றவேண்டி வரும், ஒவ்வொரு நாளும், நமது வாழ்வை மாற்ற வேண்ட வரும். கிறிஸ்துவை போல் நாம் மாற வேண்டியிருக்கும்.

உண்மையான விசுவாசத்துடன் நாம் இருக்கிறோம் என்பதற்கு அத்தாட்சி, நாம் செய்யும் நல்ல செயல்கள் ஆகும். இயேசுவில் நம்பிக்கை கொண்ட நாம், அவர் அன்பு செய்த எல்லாரையும் நாமும் அன்பு செய்ய வேண்டும். எல்லாரும் என்பது, அனைத்து அன்பர்களையும், அவர்கள் அதற்கு தகுதியானவரா? இல்லையா? என்றெல்லாம் பார்க்க கூடாது.
மேலும், இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தினால், நாம் அவர் செய்ய சொல்வதையெல்லாம் செய்வொம், நமது எல்லாவித செயல்களிலும், அவரை போலவே நடந்து கொள்கிறோம், அவர் குணாதிசயங்களை நம்முள்ளும் கொண்டு வருகிறோம், அவர் அழைப்பிற்கு ஏற்ப, குருவாகவும், சமய சடங்குகளிலும் பணி செய்பவர்களாகும் நாம் ஆகிறோம்.
அதனால், இயேசு நற்செய்தியில் கேட்பதை போல, ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' , நாம் அவர் தான் மெசியாவென்றும், நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர் என்றும் பதில் உரைக்கிறோம், மேலும், அவர் தான் நம் தந்தை கடவுள், எப்படி வாழ்வேண்டும் என்று நமக்கு போதிக்கிறார் , மேலும், எல்லோரையும் அன்பு செய்ய நமக்கு முழு அதிகாரம் வழங்குகிறார், அதுவே நாம் தூக்கி செல்ல வேண்டிய சிலுவை ஆகி விடுகிறது.
© 2012 by Terry A. Modica

No comments: