Friday, September 28, 2012

செப்டம்பர் 30 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



செப்டம்பர் 30 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு

Num 11:25-29
Ps 19:8, 10, 12-14
James 5:1-6
Mark 9:38-43, 45, 47-48



மாற்கு நற்செய்தி
அதிகாரம் 9 38-43, 45, 47-48

இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவர்
(லூக் 9:49 - 50)
38 அப்பொழுது யோவான் இயேசுவிடம், ' போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ' என்றார்.39 அதற்கு இயேசு கூறியது: ' தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ' 

பாவத்தில் விழச்செய்தல்
(மத் 18:6 - 9; லூக் 17:1 - 2)
42 ' என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. 45 நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. 47 நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு "நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்."  மக்களோடு நாம் தொடர்பு கொள்ள வேண்டிய விசயங்களில், இறையரசில் இதே போல் பல ஆச்சரியங்கள் உள்ளன.
சில நேரங்களில், சிலர் நமக்கு எதிராக இருக்கிறார்கள் என நினைப்போம், ஆனால், உண்மையில், அப்படி அவர் இருந்திருக்க மாட்டார். எடுத்து காட்டாக, சிலர் உண்மையை பேசுவர், அது நமக்கு பிடிக்காமல் போகலாம், நமக்கு எதிரியாக நாம் நினைக்கலாம், ஆனால் அவர்கள் கடவுளின் பிரதிநிதியாக இருப்பர்.
இதற்கு மாறாக, சிலர் நம்மோடு இனைந்து இருப்பர், ஆனால், அவர்களின் உள்நோக்கத்திற்காக நம்மோடு இனைந்து இருப்பர். ; கடவுள் நம் வாழ்வில் கொண்டுள்ள நோக்கத்திற்காக நமக்கு உதவுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.
மேலும் சில நேரங்களில், சிலர் கடவுளுக்காக சேவை செய்வார்கள், ஆனால் நாம் விருபியபடி, அவர்கள் செய்ய மாட்டார்கள். அதனால், கடவுள் விரும்பியபடி அவர்கள் இறைசேவையை செய்யவில்லை என நாமாக அனுமானித்து கொள்கிறோம்நீங்கள் யாரையாவாது உங்கள் தேவைகளுக்காக  வேண்டிகொள்ள சொல்லி , அவர்கள் அதற்கு எதிராக ஜெபித்து உள்ளார்களா ?
பல வருடங்களுக்கு முன், என்னுடைய கணவரின் கம்பெனியிலிருந்து பலரை வேலையை விட்டு நீக்கினார்கள், என்னுடைய நண்வர் ஒருவரிடம், என் கணவருக்கு வேறு வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டிகொள்ள சொன்னேன். ஆனால் நண்பரோ, அந்த கம்பெணி இன்னும் வளர வேண்டும், என் கணவர் அங்கேயிருந்து நீக்க பட கூடாது என்று வேண்டிகொண்டார். அந்த ப்ரார்த்தனையை நான் விரும்பவில்லை. ஆனால், கடவுள் என்ன நினைத்தாரோ, அதனையே என் நண்பர் வேண்டிகொண்டார் என்று என்னால், இறுதியாக புரிந்து கொள்ள முடிந்தது.
சிலர் நமக்கு எதிராக இருக்கின்றனர் என்பதனை கண்டறிய, நாம் நம்மையே , நமது டென்சனிலிருந்து விடுபட்டு , அதனிடமிருந்க்டு விலகி, இயேசுவோடு அமைதியில் அமர்ந்து, நாம் கண்டறிய வேண்டும். நமது பயத்தையும், கோபத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து, அவர்களை மனதார மன்னித்தோமென்றால், கடவுளால், நமக்கு சரியான பதில் கிடைக்கும்.
சிலர் உண்மையாகவே, நமக்கு எதிராக இருந்தால், அமைதியாக ஜெபத்தில் ஆழ்ந்தால், பரிசுத்த ஆவியிடமிருந்து ஞாணத்தையும், ஆறுதலையும் கேட்டால், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் அறிய முடியும், அது தான் நமக்கு முக்கியமானது. அவர் நமக்கு உற்சாகத்தையும், சக்தியையும் கொடுத்து, நமது ப்ரச்னைகளை கையாள நமக்கு உதவுகிறார்.
© 2012 by Terry A. Modica

No comments: