Friday, January 10, 2014

டிசம்பர் 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா
Isaiah 42:1-4, 6-7
Ps 29:1-4, 9-10 (with 11b)
Acts 10:34-38
Matthew 3:13-17
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(
மாற் 1:9 - 11; லூக் 3:21 - 22)
13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.14 யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ' என்று கூறித் தடுத்தார்.15 இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறில், இயேசு இறைசேவையை ஆரம்பித்ததை , அதற்காக தன்னை ஆயத்த படுத்தி கொண்டதை நாம் கொண்டாடுகிறோம். நாமும் அதே திருமுழுக்கு பெறுகிறோம், ஞானஸ்நானத்தில் நாம் இதே அனுபவத்தை அடைகிறோம். கிறிஸ்துவின் வாழ்வில் நாம் .முழுதும்  மூழ்கிறோம். மற்ற இரண்டு அருட்சாதனங்கள் – புது நன்மையையும் , உறுதிபூசுதல் – நம் பரிசுத்த வாழ்வை உறுதி செய்து, அந்த வாழ்வை நாம் தொடர நமக்கு அதிகாரத்தையும், ஆற்றலையும் கொடுக்கிறது. இதன் மூலம் கடவுள் சொல்கிறார்: இதோ என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்:

தந்தை கடவுள் பூரிப்படையும் அளவிற்கு பரிசுத்த ஆவி உன்னில் என்ன செய்கிறார்? உங்கள் முலமாக இறையரசிற்கு எப்படி சேவை செய்கிறார். நீங்கள் இன்றைய உலகிற்கு அதே பரிசுத்த ஆவிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, கிறிஸ்துவின் இறைசேவையை தொடர செய்வீர்களா?
எல்லா கிறிஸ்தவர்களுக்கும், ஞானஸ்நாணம கொடுக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்துவின் சேவையை தொடர அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இறை சேவையை தொடர நாம் ஆர்வத்தோடு செயல்பட நமக்கு கடினமாக இருக்கிறது. எடுத்து காட்டாக, தீவிர நோய்கள் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்  மருத்துவர்களாகவோ அல்லது நர்ஸாகவோ ஆகிறார்கள், சிறு வயதில் பல்வேறு துன்பத்திற்கு ஆளானவர்கள், பெரியவர்களின் குற்றங்களுக்கு ஆளானவர்கள், வளர்ந்த பிறகு, சமூக சேவை ஆற்றுபவர்களாகவும், பல குற்றங்களால் துன்பபடும் குழந்தைகளை காப்பவர்களாகவும், மாறுகிறார்கள். பல நிறுவனங்களில் வேலை செய்யும்பொழுது துன்பத்திற்கு உள்ளானவர்கள், தனியே ஒரு நிறுவனம் தொடங்கி, அதில் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களை நல்ல முறையில் நடத்துவார், எப்படி என்றால், கிறிஸ்துவை நாம் எப்படி நடத்த வேண்டுமோ அதே போல.
நாம் எதிலெல்லாம் ஆர்வத்துடன் செயல்பட முடிகிறதோ, அதற்கான ஆற்றலை, கிறிஸ்துவின் பாடுகளின் மூலமும்,  ஞானஸ்நாணத்தின் மூலமும் நாம் பெறுகிறோம்.
மேலும், திருப்பலியை தொடர்ந்து நாம் கொண்டாடும்பொழுது, திவ்ய நர்கருனையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, இறைசெவையை தொடர, நம் அழைத்தலை புதுப்பித்து கொள்கிறோம். திவ்ய நற்கருணை அருட் சாதனத்தின் முலம் நாம் புதுபிக்க படுகிறோம். கிறிஸ்து திவ்ய நற்கருணை முலம் இயேசு அவரின் இறைசேவையில் நம்மை இணைக்கிறார். அதன் முலம் நாம் இவ்வுலகை மாற்ற முடியும்.
இதனை செய்வதற்கு தந்தை கடவுள் உன்னை அழைத்துள்ளார். இந்த அழைப்பினால், தான், நீங்கள் எல்லாம் செய்கிறீர்கள், அதனால் தந்தை கடவுள் உங்களால் பூரிப்படைகிறார்.

© 2014 by Terry A. Modica

No comments: