Friday, January 17, 2014

ஜனவரி 19, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி 19, 2013  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் இரண்டாம் ஞாயிறு
Isaiah 49:3, 5-6
Ps 40:2, 4, 7-10

1 Corinthians 1:1-3
John 1:29-34

யோவான் நற்செய்தி

29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.30எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.31இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '
(thanks to www.arulvakku.com)
ஒவ்வொரு திருப்பலியிலும்,  யோவான் இன்றைய நற்செய்தியில் கூறுவதை, குருவானவர் கூறுவதை கேட்கிறோம்: “இவரே கடவுளின் செம்மறி, இவரே உலகின் பாவங்களை போக்குபவர்”, இதற்கு பதிலுரையாக, நாம் “ஆண்டவரே நாம் உன்னை பெறுவதற்கு தகுதியற்றவன் .. அனால் ஒரு வார்த்தை சொல்லியருளும், எனது ஆன்மா குணமடையும்”
திருப்பலியின் பாவமன்னிப்பு சடங்கில், நாம் உண்மையாக மனம் வருந்தி, பாவ மன்னிப்பு கோரினால், நமது குணப்படுத்துதல் ஆரம்பித்து விடும். நம் பாவங்கள் போக்கப்பட்டு, நாம் இயேசுவை முழு மனிதனாகவும, கடவுளாகவும், திவ்ய நற்கருணையில் பெறுவோம். அதே ஆற்றலோடு , கோவிலை விட்டு, நாம் வெளியே சென்று, யோவானை போல, நாமும், “இயேசுவை கண்டேன், கடவுளின் மகனை தரிசித்தேன்” என்று கூறலாம்.
ஒவ்வொரு திருப்பலியும், இந்த மாதிரி அனுபவத்தோடு தான் முடிகிறதா?
திருப்பலின் ஒவ்வொரு பகுதியின் இதனை நமக்கு வலியுறுத்துகிறது. இயேசு நம்மிடையே நாம் சமூகமாக ஒன்றாய் பாடும்போது இருக்கிறார். பாவ மன்னிப்பு சடங்கில் இயேசு பிரசன்னமாய் இருக்கிறார். நாம் உண்மையாக பாவமன்னிப்பு கேட்பதை உன்னிப்பாக கவனிக்கிறார். வாசகம் வாசிக்கும்பொழுது ஒவ்வொரு வார்த்தையிலும் இயேசு இருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் நம்மில் வந்து, நம் ஆன்ம வாழ்வு வளர உணவாக மாறுகிறது. பிரசங்கம் சில நேரங்களில். நன்றாக இல்லாத பொழுது, அவரின் ஆவி நமக்கு தனியாக நமக்கு சொல்லி தருகிறது. (சில நேரங்களில் தோன்றும் சில சிந்தனைகள், கடவுளின் செயலாகும்) இயேசு ஒவ்வொரு ஜெபத்திலும் இருக்கிறார். நம் ஜெபத்திலும், குருவானவர் சொல்லும் ஜெபத்திலும் இயேசு எங்கும் நிறைந்திருக்கிறார்.
ஒவ்வொரு திருப்பலியும், நம்மை மாற்றுவதற்காக உள்ளது, மேலும், கிறிஸ்துவின் உண்மையான பிரசன்னத்தை இவ்வுலகிற்கு அறிவிக்க நம்மை அனுப்ப்புகிறது.

யோவான் கூறியது போல: “அவரை எனக்கு தெரியாது”, அதனை மாற்றி சொன்னால், “நான் ரொட்டியும், திராட்சை ரசம் மட்டுமே பார்த்தேன்” மேலும், “நாம் பாவியாக இருந்தேன், நான் எவ்வளவு ஆபத்தை உண்டாக்கினேந என தெரியாது” , மற்றும், “நாம் காயமுற்று இருந்தேன் எப்படி குணமடைவது என தெரியாமல் இருந்தேன் “ என்றும் நாம் சொல்வோம்.

யோவானை போல நாமும்: “இப்பொழுது நான் அவரை கண்டுகொண்டேன், இவரை வெளிப்படுத்தும் பொருட்டே , இவர் தான் கடவுளின் மகன், பரிசுத்த ஆவியானவர் இவரை என்னில் வெளிப்படுத்தினார், இயேசு திவ்ய நற்கருணையில் இருப்பதை பரிசுத்த ஆவி என்னில் வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் தயை குணத்துடன், என் பாவங்களை சுட்டி காட்டி, அதனை விட்டு விலக உதவியாக இருந்தார். பரிசுத்த ஆவியானவர் என் காயங்களுக்கு குணமளிக்க கூடிய எல்லா உதவி உள்ள இடத்தையும் என்னை கூட்டி கொண்டு சென்றார்”

© 2014 by Terry A. Modica


No comments: