Friday, February 28, 2014

மார்ச் 2, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மார்ச் 2, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 8ம் ஞாயிறு
Isaiah 49:14-15
Psalm 62:2-3,6-9
1 Corinthians 4:1-5
Matthew 6:24-34

மத்தேயு நற்செய்தி
கடவுளா? செல்வமா?
(
லூக் 16:13)
24 ' எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

கவலை வேண்டாம்
(
லூக் 12:22 - 34)
25 ' ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? ' 26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?http://www.arulvakku.com/images/footnote.jpg28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.32 ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். http://www.arulvakku.com/images/footnote.jpg34ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு மலையில் செய்த பிரசங்கங்களின் ஒரு பகுதியாக நாம் காண்கிறோம். நாம் எப்படி வாழ வேண்டும் என்ற படிப்பினையை நமக்கு அவரின் போதனையின் மூலமும், அவரின் வாழ்வின் மூலமும் கொடுக்கிறார். இதே வழிகாட்டுதலை தான் ‘பரலோகத்தின் இருக்கிற’ ஜெபத்திலும், இயேசு சொல்கிறார். ‘எங்கள் அனுதின உணவை எங்களுக்கு அளித்தருளும்’ என்று ஆரம்பிக்கிறது. இந்த மலை பிரசங்கத்திலும், அவர் நமக்கு கொடுத்த ஜெபத்திலும், நமது அனுதின தேவைகளை கடவுளிடம் நம்பி அவரிடம் விட்டு விட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு சோதனையிலும், ஒவ்வொரு சவால்களிலும், ஒவ்வொரு கஷ்டத்திலும், நாம் கடவுளை நம்பி அதனை கையாள்வோம், அல்லது, இந்த உலக வழியில், நமக்கிருக்கும் குறைவான புரிதலோடு, நாம் அதனை அணுகுவோம். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. இருந்தாலும், நாம் நம்மையே ஏமாற்றி கொண்டு, ஒரு காலை மோட்சத்தை நோக்கியும், ஒரு காலை இந்த உலக வழியிலும் வைத்து நம் பிரச்சினைகளை அணுகுகிறோம்.

“செல்வம்” என்ற வார்த்தைக்கு, அராமிய வார்த்தையில், “சொத்து”, அல்லது “நிலம்” என்று பொருள். நம்மிடையே சிலர் இப்படி சொல்வதுண்டு, ஒருவன் “எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்” என்று கடவுளிடம் ஜெபித்தான். அதற்கு கடவுள் “உன்னிடம் ஏற்கனவே அதிகம் இருக்கிறது, மற்ற மக்களின் உணவும் உன்னிடத்தில் இருக்கிறது “ என்று பதிலுரைத்தார். மற்றவர்களின் தேவையை போக்குவதற்கு உங்களிடம் என்ன இருக்கிறது? நாம் நமது எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கிறோம், ஆனால் சிலர் கொஞ்சம் கூட இல்லாமல், அதனை அடைவதற்கு போராடி வருகின்றனர் . நம்மிடம் அதிகம் உள்ளதை அவர்களுக்கு கொடுக்க நமக்கு பயமாக இருக்கிறது.  வருங்காலத்தில் அது நமக்கு தேவையாக இருக்கும் என நினைக்கிறோம். (அதிக கத்தோலிக்கர்கள், கோவிலுக்கு அல்லது பொது அன்பளிப்புகள் கொடுப்பதற்கு இந்த காரணத்தினால் தான் பயப்பட்டு கொடுப்பதில்லை)
நம் நினைப்பும், அப்படி தான் என்றால், நாம் நம்மை கடவுள் முழுதுமாக காத்து கொள்வார் என்று நம்பவில்லை. நாம் மற்றவர்களுக்கு காட்டும் தாராள குணத்தை, கடவுள் நமக்கு காட்ட மாட்டார் என்ற அனுமானத்தோடு இருக்கிறோம்.
அதனால் தான், இயேசு “நீங்கள் மிகவும் கவலைபடுகிறீர்கள்” என்று சொல்கிறார். நாம் நம் கவலைகளை விட்டு விட்டு, கடவுளை நோக்கி நமது கவனம் இருக்க வேண்டும்.

இயேசு சொல்கிறார்: “ கடவுள் உங்களை அதிகம் அன்பு செய்கிறார், அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.”


இயேசுவை விட்டு நமது கண்களை எடுத்து விடும் கவலை ஒரு பாவமாகும். இயேசு நம் வழியாக மற்றவர்களுக்கு கொடுக்க ஆசிப்பதை,  குணத்தை நமது கவலைகள் தடுத்து விடுவதால் அது பாவமாகும்.
© 2014 by Terry A. Modica 
Facebook

No comments: