Saturday, October 10, 2015

அக்டோபார் 11 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


அக்டோபார் 11 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு
Wisdom 7:7-11
Ps 90:12-17
Hebrews 4:12-13
Mark 10:17-30
கடவுளின் செல்வத்தை பகிர்ந்து கொள்ளுதல்
மாற்கு நற்செய்தி
க்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ``நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவரைக் கேட்டார்.
அதற்கு இயேசு அவரிடம், ``நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? `கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட'' என்றார்.
அவர் இயேசுவிடம், ``போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்'' என்று கூறினார்.
அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ``உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்று அவரிடம் கூறினார்.
இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ``செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்'' என்றார்.
சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள்.
மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ``பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார்.
சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார்.


இன்றைய நற்செய்தியில் , இயேசு செல்வந்தரிடம், ``நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே" என்று கூறுகிறார். இதில் இரண்டு செய்தி இருக்கிறது .
முதலில் அந்த இளையவர், உண்மையாகவே இயேசு மிகவும் நல்லவர் என்று நம்பி இருந்தால், அவரின் போதனை கண்டிப்பாக நல்லதாக இருக்கும் என்று நம்பி இருந்தால், இயேசுவின் அதிசய நிகழ்வை , பாவமில்லாத வாழ்வை பார்த்திருந்தால், அவர் இயேசு உண்மையாகவே கடவுள், மிகவும் நல்லவர் என்ற ஆதாரம் அவருக்கு கிடைத்திருக்கும்.
இரண்டாவதாக, கிறிஸ்துவின் கேள்வி அந்த இளைஞர் இன்னும் தாழ்மையுடன் நடந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இயேசு சொன்னதை அவர் உண்மையாகவே முழுமையாக நம்பி இருந்தால் , கடவுள் முழுமையாக நல்லவராக இருப்பதால், அவரை தவிர வேறு ஒருவரும் கட்டளைகளை முழுமையாக கிழ்படிந்து செய்வதில்லை என்று அவர் அறிந்திருக்கலாம், அப்படி அறிந்திருந்தால், இயேசு அடுத்து சொல்ல போகும் உண்மையை கேட்க அவரது இதயம் திறந்திருக்கும்.
கடவுளின் பரிசுத்த வாழ்வை போல நாமும் வாழ நம்மை தடுப்பது, இந்த உலக பற்றுதல் தான், இந்த உலகில் இருந்து விடுதலை பெற, நாம் இறையரசிற்கு தேவையான செல்வங்களை நாம் சேர்க்க வேண்டும்.
இதே செய்தியை இயேசு நாம் எல்லோருக்கும் சொல்கிறார், ஆனால், நாம் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் இருக்க சொல்லவில்லை. எல்லாவற்றையும் விட்டு விடு என்று சொல்வது, நாம் அனைத்தையும் துறந்து விட தயாராய் , ஆசையுடன் இருக்க வேண்டும் என்று அரத்தம் கொள்ள வேண்டும். நம்மை ஆசிர்வதிக்கும் எந்த ஒரு பொருளும், கடவுள் நம்மிடம் இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நாம் பயனடைய வேண்டும் என்றும் விரும்புகிறார்.அனால் உண்மையான சந்தோசம், கடவுள் நம் தோழராக இருந்து , அவரின் செல்வத்தை பலருக்கு பகிர்ந்து அளிக்கும் பொழுது வரும் சந்தோசம் தான் உண்மையானது. இது மாதிரி வாழ்வு வாழ தான் நாம் அழைக்கபட்டுள்ளோம், இது தான் முழுமையான வாழ்வு.
நாம் இந்த உலக செல்வங்கள் மேல் பற்றுதலுடன் இருந்தால், நாம் கடவுளிடமிருந்து நம்மை தள்ளி வைத்து கொள்கிறோம். மேலும், கடவுளிடமிருந்து நம் முலம் மற்றவர்களுக்கு செல்ல வேண்டியதை தடுத்து விடுகிறோம். எனினும், இந்த பற்றுதல் இடமிருந்து நாம் முழுமையாக விலக நம் முயற்சியை மட்டும் நாம் நம்பியிருக்க முடியாது. இந்த பற்றுதல் இடமிருந்து நாம் வெளி வர மிகவும் கடினமாக இருக்கும், மேலும், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் கஷ்டமாக இருக்கும்
இயேசு இதனையெல்லாம் நடக்க கூடிய விசயங்களாக , சிலுவை மரணத்தில் காட்டினார். மேலும் பரிசுத்த ஆவியை நம் எல்லோருக்கு பகிர்ந்து கொண்டார். இயேசு நம்மை என்ன செய்ய சொல்கிறாரோ, பரிசுத்த ஆவியின் மூலம் நாம் அந்த ஆற்றலை பெறுகிறோம். நாம் நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளும் பொழுது, நமது வாழ்வு முழுமையான வாழ்வாக இருக்கிறது. அன்பினால், நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது, மோட்சத்தின் செல்வங்கள் நம்மை வந்து சேரும். மேலும், நாமே மோட்சத்தின் செல்வமாக மாறுவோம்

© 2015 by Terry A. Modica

No comments: