Friday, October 16, 2015

அக்டோபர் 18 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர் 18 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Isaiah 53:10-11
Ps 33:4-5, 18-20, 22
Hebrews 4:14-16
Mark 10:35-45
மாற்கு நற்செய்தி
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்கள்.
36 அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.
37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர்.
38 இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?" என்று கேட்டார்.
39 அவர்கள் அவரிடம், "இயலும்" என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.
40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார்.
41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.
43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.
45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.
பணிவிடை செய்வது மட்டுமே , அடிமையாக அல்ல
இறையரசில் முக்கிய இடத்தை பெற, நாம் பணிவிடை செய்பவர்கள் ஆக இருக்க வேண்டும் என இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார். இறையரசின் நன்மைக்காக மற்றவர்களுக்கு உதவிட இயேசு நம்மை அழைக்கிறார்.
இதற்காக, நம் சொந்த விருப்பங்களை, சொந்த வேலைகளை விட்டு விட்டு இதனை செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. கடவுளுக்கு பணி விடை செய்வதால், அவரின் அடிமை அல்ல. இது நமக்கு மிக பெரிய கௌரமும், மரியாதை ஆகும். ஏனெனில் இது தான் நம்மை கிறிஸ்துவின் நம்மை மீட்கும் பணியோடு இணைக்கிறது
இயேசுவை போல நாமும் இறைபணி செய்தால், தந்தை கடவுள் இயேசுவை எப்படி நடத்துகிறாரோ அப்படியே நம்மையும் நடத்துவார். நமது தலைவர், நம்மை தாழ்த்த மாட்டார், அவர் மரியாதை செய்யமாட்டார், மேலும் அதிக வேலை கொடுக்க மாட்டார்.
இதற்கு மாறாக, இந்த உலக செல்வங்கள், இந்த உலக வாழ்வு நம்மை அடிமை தனத்திற்கு கொண்டு சென்று விடுகிறது. அவை நம்மை தாழ்த்தி . விடுகிறது. கடவுள் நம்மை எந்த உயர்விற்கு படைத்தாரோ ஆதனை விட கிழான நிலைக்கு நம்மை . தள்ளி . விடுகிறது.
கிறிஸ்து நம்மை அவரை போலவே இருக்கும் படி நமக்கு தேவையான ஆற்றலையும், ஆசியும் கொடுக்கிறார். இறையரசின் எல்லா பலனையும் முழுதுமாக சுதந்த்திரத்துடன் அனுபவியுங்கள். பரிசுத்த வாழ்வில் முழுமையாக ஈடுபட நம்மை அழைக்கிறார். இதன் மூலம் தந்தை கடவுளின் பார்வையில் நாம் பெரியவராக இருப்போம்.
இந்த சுதந்திரத்தில் மிகப்பெரிய இன்பம் சந்தோசம் இருக்கிறது. கிறிஸ்துவின் வாழிகள் மிகவும் கடினமாக இருந்தாலும், சில நேரங்களில் நாம் சிலுவையை சந்திக்க நேரிட்டாலும், இந்த துன்ப கிண்ணம், நம்மை பரிசுத்த வாழ்வுக்கு அழைத்து செல்லும், மேலும், மோட்சத்தில் நாம் மிக பெரியவராக இருப்போம். நாம் மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் பொழுது அது நம்மை பரிசுத்த வாழ்வில் வளர செய்கிறது. அந்த தியாகம் நம்மால் தாங்கி கொள்ள முடியும். நமக்கு துன்பமானது, நம்மை ஆசிர் வாதமாக மாற்றுகிறது.
உங்களுக்கு தெரிந்த யாராவது ஒருவருக்கு  கேட்ட வரம் கிடைக்கவில்ல ? கடவுள் அவர்கள் மேல் அக்கறை கொள்ளவில்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு அவர் உதவி செய்ய வில்லை என்றும் அர்த்தம் இல்லை. கடவுள் நம் மூலம் நம் சேவை மூலம் அவர்களின் ஜெபத்திற்கு உதவி செய்கிறார் - இயேசு நம் மூலம் மற்றவர்களுக்கு சேவை செய்கிறார்.
நமது முன்னுரிமை எப்பொழுதுமே, கடவுளுடன் உள்ள உறவாக தான் இருக்க வேண்டும். அதனால், கடவுள் நமக்கு கொடுத்ததை அளவிற்கு அதிகமாக நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நமக்கு கடவுள் கொடுப்பார். நம்மிடம் இல்லாததை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. கிறிஸ்துவின் பிரசன்னமாக அங்கே நம்மால் இருக்க முடியாது. முதலில் கிறிஸ்து நமக்கு இறைசேவை  செய்தால் தான் , நம்மால் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும்.

© 2015 by Terry A. Modica

No comments: