Saturday, January 7, 2017

ஜனவரி 8, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 8, 2017   ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12

மத்தேயு நற்செய்தி
ஞானிகள் வருகை
1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,
2யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்என்றார்கள்.

3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.

4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.

5-6அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில்,
யூதா நாட்டுப் பெத்லகேமே,
யூதாவின் ஆட்சி மையங்களில்
நீ சிறியதே இல்லை; ஏனெனில்,
என் மக்களாகிய இஸ்ரயேலை
ஆயரென ஆள்பவர் ஒருவர்
உன்னிலிருந்தே தோன்றுவார்
என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்என்றார்கள்.

7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.

8மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.

10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

(thanks to www.arulvakku.com)
ஞானிகளுக்கு விசுவாசம் எங்கிருந்து வந்தது?
கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் வருகை நாம் கொண்டாடுவது , கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டத்தில் ,விழாவில் ஒரு பகுதியாகும். குழந்தை இயேசுவை அந்த ஞானிகள் எவ்வாறு தாழ்ந்து பணிந்து வணங்கியதை பார்ப்போம். அந்த ஞானிகள் ஜென்டைல் குளத்தை சார்ந்தவர்கள், கிரேக்க வார்த்தையில் அவர்கள் விஞ்ஞானிகள். சிலர் அவர்களை ஜோசியர் என்று கூறினாலும் கூட, கிறிஸ்துவின் குடிலுக்கு அவர்கள் வந்தது ஜோசியத்தினால் அல்ல.

ஏனெனில் அவர்கள் யூதர்கள் அல்ல,  யூதர்களின் மெசியாவை அவர்கள் பார்த்தே ஆக வேண்டும் என்ற உறுதியை பாருங்கள். அதனால் தான் , ஆண்டவரின் திருகாட்சி என்று கூறப்படுகிறது. இயேசுவின் முக்கியத்துவத்தை அதன் முழு அர்த்தம் என்ன என்றே தெரியாமல், ஞானிகள் இயேசுவின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் , அவர்கள் நமக்கு எடுத்து காட்டாய் இருந்தார்கள்.
இயேசு எப்படி அரசராக போகிறார், சாத்தானிடமிருந்து இந்த உலகை எப்படி மீட்க போகிறார் என்று தெரியாமலேயே , மெசியா அரசரை தாழ்ந்து பணிந்து வணங்கினார்கள் , அறிஞர்களாக , மத நூல்களை படித்துள்ளனர், அவர்களின் கலாசாரத்தை தாண்டி பல மத புத்தகத்தை படித்து அறிந்துள்ளனர். கடவுளின் ஆவி , அவர்களை ஆட்கொண்டு, அவர்களுக்கு கொடுத்த அறிவுரையின் பேரில், அவர்கள் செயல் படுத்தினார்கள். அதே ஆவியானவர், அவர்கள் வாழ்வையும் மாற்றினார்கள்.

பரிசுத்த ஆவியால் மட்டும் தான், ஒவ்வொருவரையும் விசுவாசம் கொள்ள வைக்க முடியும், ஏனெனில், பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு தான் விசுவாசம் (1 கொரிந்தியர் 12) . "திருக்காட்சி" என்ற வார்த்தைக்கு அர்த்தம், புதிதாக கண்டுபிடித்தல்,  வெளிப்படுத்துதல் அதன் மூலம் நம் வாழ்வை மாற்றுவது என்பது ஆகும். நாம் புது வழியில் செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் , கடவுளும் இணைந்து நமக்கு அன்பளிப்பை கொடுக்கிறார்.
ஆண்டவரின் திருகாட்சியை , குழந்தை இயேசுவின் பிரசன்னத்தில், அந்த ஞானிகள் எப்படி அனுபவித்திருப்பார்கள் என்று நம்மால் கற்பனை செய்ய முடியும். இந்த ஏழை குடும்பத்தில் பிறந்த இந்த குழந்தை எப்படி அரசராக போகிறது என்று தெரியாமலே , அவர்கள் வாழ்வின் கடைசி வரை, குழந்தை இயேசுவை நினைத்து கொண்டே இருந்தார்கள், மேலும், இஸ்ரேல் இருந்து ஏதாவது நல்ல செய்தி இயேசுவை பற்றி வராதா என காத்திருந்தனர். இயேசுவின் சிலுவை மரணம் பற்றியும், அவரது சீடர்கள் போதித்ததையும் அந்த ஞானிகள் கேட்டறிந்தனர். அதன் மூலம் அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள், அவர்களின் திருபன்டங்கள், ஆசிர்வதிக்கப்பட்டு நாம் காத்து வருகிறோம்.

.© 2017 by Terry A. Modica

No comments: