Saturday, March 11, 2017

மார்ச் 12 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச் 12 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Genesis 12:1-4a
Psalm 33:4-5, 18-20, 22
2 Timothy 1:8b-10
Matthew 17:1-9

மத்தேயு நற்செய்தி

இயேசு தோற்றம் மாறுதல்
(
மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
1ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.

2அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.

3இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
4பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்என்று ஒரு குரல் ஒலித்தது.

6அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.

7இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு
எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்
 என்றார்.

8அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.

9அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு
மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது
 என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
(Thanks to www.arulvakku.com)

உங்கள் வாழ்வின் மாற்றம் இன்று
தாபோர் மலையின் மேல் , கிறிஸ்துவின்  ஒளி  வெளிப்படுத்தப்பட்டது. நற்செய்தியை கேட்பது போல, என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் என்று கடவுள் கூறுகிறார்.
உருவம் மாறுதல், ஒவ்வொரு முறையும், நாம் இயேசுவின் போதனைகளை கேட்கும் பொழுதும், அதன் பிறகு விசுவாசம் கொள்ளும் பொழுது நமக்கு உருவம் மாறுதல் நடைபெறுகிறது. அது நேற்றைய விட இன்று இன்னும் ஒளி அதிகமாக இருக்கும் நாம் தான் தற்போது மாற்றம் அடைகிறோம்! நமது உண்மையான அடையாளத்தை பெறுகிறோம். நமது அடையாளம் என்ன ? உள்ளார்ந்த நாம், கடவுளை போலவே , நாமும் படைக்கப்பட்டோம், ஞானஸ்நாணத்தில் கடவுளின் குணங்கள் நமக்கு கொடுக்கப்பட்டன.
நமது உண்மையான அடையாளத்துடன் நாம் வாழும்பொழுது, நமது வாழ்வு சந்தோசமாக செல்கிறது. உங்களில் அமைதியற்று இருக்கும் போது, நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? கண்டிப்பாக நன்றாக இருந்திருக்க மாட்டீர்கள், ? அப்படிதானே?  கடவுள் அமைதியானவர், (1 கொரிந்தியர் 13: 4-7 உங்களின் அடையாளமும், கடவுளின் அடையாளமும் கொடுக்க பட்டுள்ளது ). நாம் அமைதியாக இருக்கும் பொழுது, நாமும் சந்தோசத்துடன் இருக்கிறோம்.
இந்த தவக்காலத்தில், நாம் கிறிஸ்துவை போல இருக்கிறோமா என்று ஆராய்ந்து, பாவங்களுக்கு மனம் திரும்பி , கிறிஸ்துவின் ஒளி நம்மில் முழுமையாக ஆக்கிரமிக்க , நம்மில் உள்ள இருளை அகற்ற, இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம்.
இயேசு தன்னுடைய அழைத்தலை நிறைவேற்ற அந்த மலை மேலிலுருந்து சென்றார், நாமும் கிறிஸ்துவை பின் பற்றி, நம் அழைத்தலை நிறைவேற்ற, மலை உச்சியிலிருந்து விலகி செல்ல வேண்டும், கடவுள் நமக்கு கொடுத்த ஆற்றலை கொண்டு நம் அழைத்தலை நிறைவேற்ற செல்வோம். திமோத்தி சொல்வது போல பரிசுத்த வாழ்வு கடினமானது தான், அனால் , ஒவ்வொரு சிலுவைக்கு பின்பு ஒரு ஈஸ்டர் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  கடவுளிடமிருந்து வரும் சக்தியைக் நம்பி நாம் செல்வோம்.

© 2017 by Terry A. Modica

No comments: