Friday, March 17, 2017

மார்ச் 19, 2017 ஞாயிறு நற்செய்தி

மார்ச் 19, 2017   ஞாயிறு நற்செய்தி
தவக்காலத்தின்  3ம் ஞாயிறு
Exodus 17:3-7
Psalm 95:1-2, 6-9
Romans 5:1-2, 5-8
John 4:5-42
யோவான் நற்செய்தி
5அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.

6அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.
7-8அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம்
குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்
 என்று கேட்டார்.
9அச் சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.
10இயேசு அவரைப் பார்த்து
கடவுளுடைய கொடை எது என்பதையும் குடிக்கத் தண்ணீர் கொடும்எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்
 என்றார்.
11அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?

12எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்என்றார்.
13இயேசு அவரைப் பார்த்து
இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.

14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்
 என்றார்.
15அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காதுஎன்றார்.

16இயேசு அவரிடம்
நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்
 என்று கூறினார்.
17அப்பெண் அவரைப் பார்த்து, “எனக்குக் கணவர் இல்லையேஎன்றார். இயேசு அவரிடம்
“‘எனக்குக் கணவர் இல்லைஎன நீர் சொல்வது சரியே.

18
உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே
 என்றார்.
19அப்பெண் அவரிடம், “ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.

20எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களேஎன்றார்.
21இயேசு அவரிடம்
அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.

22யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.

23காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில்⁕ வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார்.

24
கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்
 என்றார்.
25அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்என்றார்.

26இயேசு அவரிடம்
உம்மோடு பேசும் நானே அவர்
 என்றார்.
27அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் என்ன வேண்டும்?” என்றோ, “அவரோடு என்ன பேசுகிறீர்?” என்றோ எவரும் கேட்கவில்லை.
28அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,

29“நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!என்றார்.

30அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.
31அதற்கிடையில் சீடர், “ரபி, உண்ணும்என்று வேண்டினர்.
32இயேசு அவர்களிடம்
நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது
 என்றார்.
33“யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோஎன்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

34இயேசு அவர்களிடம்
என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.

35‘நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடைஎன்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.

36அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக்⁕ கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.

37-38
நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்என்னும் கூற்று உண்மையாயிற்று
 என்றார்.
39“நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

40சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.

41அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.

42அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்என்றார்கள்.
(Thanks to www.arulvakku.com)
உங்களின் ஆண்மீக தாகம் என்ன ?
எதற்கு தாகமாக இருக்கிறீர்கள்? நம்மில் உள்ள முக்கிய தேவையான ஒன்று இல்லாத போது, நமக்கு தாகம் வரும். நம் உடல் தொடர்ந்து வாழ நமக்கு தண்ணீர் தேவை, நம் உடலில் தண்ணீர் குறையும் போது , நமது உடல் தண்ணீர் தேவை என்று தாகம் முலம் நமக்கு சொல்கிறது.
அதே போல , நம் ஆண்மீக வாழ்விற்கு, நமக்கு வேறு மாதிரியான  தண்ணீர் தேவை படுகிறது. உயிருள்ள தண்ணீர் தேவை படுகிறது. நமது ஞானஸ்நானத்தில் நமக்கு முதன் முதலாய் கொடுக்கப்பட்டது, அதன் மூலம் நாம் நித்திய வாழ்வை அடைய, நாம் சுத்த படுத்தபட்டோம். இந்த வாழ்வின் நீர் பரிசுத்தமான நீர், நாம் கிறிஸ்துவில் அபரிதமான நல் வாழ்வை பெற நமக்கு துணையாக . இருக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் வாழ்வை  கொடுப்பவர், கடவுளின் ஆவி , நமக்கு வாழ்வை கொடுப்பத்திற்கான அடையாளங்களில் ஒன்று வாழ்வு கொடுக்கும் நீர் ஆகும். அதனால் , இயேசு அந்த சமாரிய பெண்ணிற்கு, பரிசுத்த ஆவியை அன்பளிப்பாக கொடுக்க விரும்பினார் என்று நாம் யூகிக்கலாம். ஏன் ? இன்னும் சிறிது காலாத்திற்குள், பெந்தகொஸ்தே அன்று பரிசுத்த ஆவியானவர் எல்லோர் மேலும் இறங்கி வர இருக்கிறார்.

அந்த பெண்ணுக்கு உண்மை தெரிய வேண்டியிருந்தது: பரிசுத்த ஆவி தான் உண்மை, இயேசு அந்த பெண்ணுக்கு தேவையான அனைத்தும் கொடுக்க விரும்பினார். அதன் மூலம், அந்த பெண் மனம் திரும்பி, மீட்பை பெற்று, அந்த புதிய வாழ்வை , அவரை சுற்றியுள்ளவர்களுக்கு , பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார்.
போதுமான நீர் நமக்கு கிடைக்காத பொழுது, நமக்கு தாகம் எடுக்கிறது.  ஆண்மிக தாகம் நமக்கு வெவ்வேறு வடிவங்களில் தெரிகிறது: அடிமைத்தனம், தனிமை, சோகம், வெறுப்பு, தன்னையே அழித்து கொள்தல், வேறு மாதிரியான எண்ணங்கள் அனைத்தும், நமக்கு  ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது , நம்மில் ஏதோ ஒரு குறை உள்ளது என்றும் நமக்கு காட்டுகிறது.
நாம் ஏன் ஆண்மீகத்தில் தேவையான அளவிற்கு இல்லாமல் இருக்கிறோம். ?  ஏனெனில், அந்த பெண்ணை போல, நாமும் கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். அதனால், நாம் ஆண்மீக குனமாக்குதலை பெற வேண்டும்.
இந்த குணமாக்குதலை கடவுள் எப்படி கொடுக்கிறார்? அவரின் அன்பை போதும் போதும் என்கிற அளவிற்கு அள்ளி கொடுக்கிறார், ஆனால் அதனை நாம் பருக, திறந்த மனதுடன் அவருடைய சொல்லை கேட்க வேண்டும் , உண்மைக்காக நாம் மாற தயாராய் இருக்க வேண்டும்.

© 2017 by Terry A. Modica

No comments: