Saturday, August 12, 2017

ஆகஸ்டு 13 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஆகஸ்டு 13 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
1 Kings 19:9a, 11-13a
Ps 85:8-14
Roman 9:1-5
Matthew 14:22-33

மத்தேயு நற்செய்தி

கடல்மீது நடத்தல்
(மாற் 6:45 - 52; யோவா 6:5 - 21)
22இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.

23மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.

24அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.

25இரவின் நான்காம் காவல்வேளையில்⁕ இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.

26அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்என அச்சத்தினால் அலறினர்.

27உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 
துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்
 என்றார்.
28பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்என்றார்.

29அவர்
வா
 என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.

30அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்என்று கத்தினார்.

31இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து
நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?”
 என்றார்.

32அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.

33படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்என்றனர்.
(Thanks to www.arulvakku.com)
சம நிலையான விசுவாசத்தை அடைவது எப்படி ?
இன்றைய நற்செய்தியில், இயேசு ரொட்டி துண்டுகளையும் மீன்களையும் பல மடங்காக பெருக்கி பல்லாயிரம் பேருக்கு உணவு கொடுத்து விட்டு, தனியே இறைவனிடம் வேண்டுவதற்கு இயேசு சென்றார், என்று பார்க்கிறோம்.
நீங்கள் மிக பெரிய விருந்து படைத்து விட்டு அல்லது மிக பெரிய  ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடித்து விட்டு, அல்லது மிக பெரிய  கஷ்டத்திலிருந்து தாண்டி வந்த பின்பு, நீங்கள்  கடவுளுக்கு நேரம் ஒதுக்கி அவர் உங்களுக்கு தேவையானதை செய்ய அனுமதிகிரீற்களா?  
 தந்தை கடவுளோடு நேரம் செலவழித்து , அதன் பின்பு இயேசு அந்த ஆணுபவத்தின் உறசாகத்தோடு , நீரில் மேல் நடக்க ஆரம்பிக்கிறார். !
இயேசு அடிக்கடி அதிக நேரம் ஜெபத்தில் செலவழித்தார். நற்செய்தியில் குறிப்பிட பட்டுள்ளதை விட  அதிக நேரம் ஜெபத்திற்கு  செலவழித்திருக்கலாம். அப்படி என்றால்,  மத்தேயு இங்கே ஏன் இந்த ஜெபத்தை பற்றி எழுதியுள்ளார்?  இந்த ஜெபத்தின் முக்கியத்துவம் என்ன ? 
மத்தேயு மூலமாக கடவுள் சம நிலையான விசுவாசத்தை நாம் எப்படி அடைவது என வழி காட்டுகிறார்.
தனிமையாக  நாம் அதிக நேரங்களில் ஜெபம் செய்து, நம் ஆற்றலை அடிக்கடி புதுபித்து கொள்ள வேண்டும், மேலும், கடவுள் நம்மை என்ன  மாதிரியான செயல்கள் , இறைசேவை செய்ய வேண்டும் என நாம்  அறிந்து கொள்வோம். கடவுளுக்காக நம் ஒருவோருக்கும் நம் குடும்பத்தில் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது, நம் வேலை செய்யும் இடத்தில், சமுக கூடும் இடங்களில், நாம் கடவுளுக்காக செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. நாம் மற்றவர்களுக்காக நம் ஆற்றலை, நேரத்தை செலவிடும்போது, நாம் மிகவும் சோர்வடைந்து விடுகிறோம்.; கடவுளுக்கு மிகுந்த உதவி உள்ளவனாக நாம் இருக்க அவ்வப்போது நம்மை கடவுள் புதிய ஆற்றலை நிரப்ப நாம் அனுமதிக்க வேண்டும்.
எதிர்காலம் நோக்கி நாம் செல்ல செல்ல அதனை எதிர்கொள்ள தயார் படுத்தி கொள்ள ஜெபம் நமக்கு உதவி செய்கிறது. நாம் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் இருக்கும் போது கூட ஜெபம் நமக்கு உதவி செய்யும். நாம் தனியாக கடவுளோடு நேரம் செலவிடும் பொழுது, அது நமக்கு அன்பளிப்பாக அவர் கொடுப்பது, நம் பயன்களுக்காகவும், மற்றவர்களின் பயன்களுக்காகவும் அவர் நமக்கு கொடுக்கிறார். நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்குகிறார். நீரில் எப்படி நடப்பது என்று சொல்லி கொடுக்கிறார். மேலும், அடுத்த கரைக்கு நம்மை அனுப்புகிறார். அங்கே கடவுளின் உதவி தேவைபடுவோர் காத்திருக்கின்றனர். கடவுள் நம் மூலம் அவர்களுக்கு இறைசேவை செய்ய ஆசைபடுகிறார். நீங்கள் ஜெபித்து அதற்கு தயாராய் இருக்கிறீர்களா ?


© 2017 by Terry A. Modica

No comments: