Saturday, January 19, 2019

ஜனவரி 20 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 20 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 2ம் ஞாயிறு
Isaiah 62:1-5
Ps 96:1-3, 7-10
1 Corinthians 12:4-11
John 2:1-11

யோவான் நற்செய்தி

கானாவில் திருமணம்
1மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.

2இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.

3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதுஎன்றார்.

4இயேசு அவரிடம்
அம்மா,அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே
 என்றார்.

5இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்றார்.

6யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.

7இயேசு அவர்களிடம்
இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்
 என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.

8பின்பு அவர்
இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்
 என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

9பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,

10எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.

11இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
(Thanks to www.arulvakku.com)

பிரச்சினைகளை எந்த பாவத்திற்கும் இடம் கெடாமல் எப்படி தீர்ப்பது



இன்றைய நற்செய்தி, நமக்கு ஒரு எடுத்து காட்டாக இருக்கிறது. பிரச்சினை வந்த பொழுது எப்படி பாவம் இல்லாமல் சமாளித்தார்கள்? என்று சொல்கிறது.
அன்னை மரியாள், அங்கே ஒரு தேவை இருப்பதை அறிந்து, அதனை இயேசு தீரத்து வைக்க வேண்டும் என விரும்பினார். ஒரு அதிசயம் அங்கே நடந்தால் ஒழிய வேறு எதுவும் அங்கே உள்ள பிரச்சினை தீராது என தெரிந்து கொண்டு, இயேசுவில் உள்ள தெய்வீகம் அவர் வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும் என அன்னை மரியாள் விரும்பினார். ஆனால், இயேசு மனிதனாக அங்கே முதலில் பதில் உரைத்தார். இந்த அதிசயம் மூலம் இயேசு தன தெய்வீகத்தை வெளியே காண்பிக்க விரும்பவில்லை. அவர் ஆன்மாவை குணமாக்க விரும்பினார். காலி ஜாடிகளை அல்ல.
அம்மா,அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே
என்று இயேசு கேட்கிறார். இதனயே மாற்றி சொல்வதானால், "உங்கள் கோரிக்கையை நாம் மதிக்கிறேன், ஏவாளின், பரிசுத்த மகளே, இந்த நேரத்தில் இப்படி ஒரு அதிசயத்தை நாம் செய்தால், என் இறைபணியை ஆரம்பிக்கும்போது, மக்கள், விருந்துக்கு தான் வருவார்கள், ஆனால், அவர், நிலையான வாழ்வை கொடுக்க விரும்பினார்.
கத்தோலிக்கர்களாகிய நாம் நற்செய்தி வாசகத்தை கொண்டு, நமது விசுவாசத்தை வளர்க்கிறோம். அதன் மூலம் , அன்னை மரியாள், நமக்காக உதவி செய்யும் வல்லமையுடன் இருக்கிறார் என்று நற்செய்தியில் பார்க்கிறோம். இயேசுவிடமிருந்து நமக்கு என்ன வேணுமோ அதனை மரியாள் தாயாக நமக்கு பெற்று கொடுப்பார் என பார்க்கிறோம். இயேசுவிடமிருந்து நாம் அனைத்தும் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அன்னை மரியாள் இயேசுவின் மனதை மாற்ற கூடியவர் ஆவார். ஆனால் இயேசு முடியாது என்று சொல்கிறார். ஆனால் அந்த பிரச்சினை மரியாளின் விருப்பத்திற்கிணங்க நடைபெற்றது மரியாள் ஜெயித்தார் , இயேசு தோல்வி அடைந்தார்.
இப்படிதான் நாம் பிரச்சினைகளை பார்க்கிறோமா? ஒருவர் வெற்றி பெற்றவராகவும் , ஒருவர் தோல்வி அடைந்தவராகவும் பார்க்கிறோமோ? இதன் மூலம் நாம் கடவுளிடம் கேட்டு அதனை அவர் தராவிட்டால், நாம் தோல்வி அடைந்தவராக நினைத்து கொள்கிறோம். அதனால், இன்னும் அதிகமாக ஜெபம் செய்கிறோம். அதன் பலனாக கடவுள் நமக்கு தேவையானதை கொடுத்து, அவர் தோல்வி அடைகிறார். இந்த வழியும் நடக்க வில்லையென்றால், அருள் நிறைந்த மரியாளிடம் கேட்கிறோம். அதன் மூலம் அவர் மகனிடம் கேட்டு பெற்று தருவார் என நம்புகிறோம். இயேசு விரும்பாவிட்டாலும் கூட.

© 2019 by Terry A. Modica


No comments: