Friday, January 25, 2019

ஜனவரி 27 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 27 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Nehemiah 8:2-6, 8-10
Ps 19:8-10, 15
1 Corinthians 12:4-11
Luke 1:1-4; 4:14-21

லூக்கா நற்செய்தி

1. அர்ப்பணம்
1மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்;

2தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.

3அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,

4அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்

கலிலேயப் பணியின் தொடக்கம்
(
மத் 4:12-17; மாற் 1:14-15)
14பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.

15அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல்
(
மத் 13:53-58; மாற் 6:1-6)
16இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.

17இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
18ஆண்டவருடைய ஆவி
என்மேல் உளது; ஏனெனில்,
அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,
பார்வையற்றோர் பார்வைபெறுவர்
என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை
விடுதலை செய்து அனுப்பவும்
19ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை
முழக்கமிட்டு அறிவிக்கவும்
அவர் என்னை அனுப்பியுள்ளார்.
20பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.

21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி
நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று
 என்றார்

கிறிஸ்துவின் இன்றைய இறைபணி
இன்றைய ஞாயிறு நற்செய்தியில். இயேசு அவரின் இறைபணியை இவ்வாறு சொல்கிறார்.
ஆண்டவருடைய ஆவி
என்மேல் உள்ளது; ஏனெனில்,
அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,
பார்வையற்றோர் பார்வைபெறுவர்
என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை
விடுதலை செய்து அனுப்பவும்
19ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை
முழக்கமிட்டு அறிவிக்கவும்
அவர் என்னை அனுப்பியுள்ளார்.
என்று கூறியதை நாம் இன்று கேட்டு இந்த செய்தி முழுமை அடைகிறது.
(thanks to www.arulvakku.com)

இந்த இறைபணி இயேசு விண்ணகத்திற்கு எழுந்து சென்றபின்பு முடிந்துவிட்டதா?

 அவர் பூமியை விட்டு போன பின்பு இந்த இறைபணி மறைந்து போய் விட்டதா ?
கொரிந்தியார் வாசகத்திலிருந்து பார்க்கும் பொழுது, நாம் கிறிஸ்துவின் உடலாக இந்த உலகில் இருக்கிறோம்.
நாம் அனைவரும் -- ஒவ்வொருவரும் -- இந்த கிறிஸ்துவின் உடலின் முக்கியமான பகுதியாக இருக்கிறோம்.! நீங்களே உங்களை தாழ்த்தி மதிப்பிடாதீர்கள். கடவுள் உங்களை உருவாக்கி இந்த திருச்சபைக்கு கொண்டு வந்ததன் காரணம், உங்களால் குரிப்படத்தக்க செயல்கள் செய்து ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று தான். உங்களால் முடிந்த செயலை, மற்றவர்கள் யாராலும் செய்ய முடியாது, நீங்கள் செய்யும் வழியில் யாராலும் செய்ய முடியாது, உங்கள் மூலம் இந்த உலகை இன்னும் நலலதாக்க கடவுள் ஒரு திட்டத்தை வைத்துள்ளார்.
விசுவாசம் கொண்ட குழுவாக, நாம் கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் உடலாக இந்த பூமியில் இருக்கிறோம். திவ்ய நற்கருணையை நாம் ஒவ்வொரு முறை பெறும் போது, நாம் கிறிஸ்துவின் உடலாக அதனை பெறுகிறோம். அதன் மூலம் கிறிஸ்துவின் இறைபணியை நாம் தொடர்கிறோம், அவர் பணி நம் பணியாகும்.
திவ்ய நற்கருணையில் இயேசுவை பெற்று கொண்டு, இயேசுவை தெய்வீகமாகவும், மனிதனாகவும் பெற்று, அதோடு கூட அவரின் இறைபணியையும் உண்டு கொள்கிறோம். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு திருப்பலியிலும் நம்மில் வந்து, நற்செய்தி அறிவிக்கும் பணியை நாம் செய்ய நம்மை புதுபிக்கிறார். அடிமையானோரை விடுவிக்கவும், குருடர்களை கண் பெறவும், கடவுளுக்கு எது தேவையோ அதனை செய்யவும் நாம் பரிசுத்த ஆவியின் வரம் பெறுகிறோம்.
இதனயே மாறாக சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் திவ்ய நற்கருணை பெரும்போழுது, இன்றைய லூக்கா நற்செய்தி 4:18-21 வசனங்கள் நிறைவேறுகிறது.
பாவங்கள்  இது நடைபெறாமல் தடுக்கிறது.
எப்பொழுதெல்லாம் கேட்கிற வரங்கள் கிடைக்காமல் போகிறதோ, சாத்தானை நம்மிடம் அனுமதித்தோமோ , இயேசுவின் மீட்பின் நற்செய்தி அறிவிப்பில்லாமல், இருக்கும் ஆன்மா என்ற நிலை ஏற்படும்போது,  கிறிஸ்துவின் உடலில் சில பாகங்கள் அதன் வேலையை செய்யவில்லை என்று அர்த்தம். இந்த பூமிக்கு தேவையான அனைத்தும் நம் மூலம் கடவுள் கொடுத்துள்ளார், இயேசு அவரின் இறைபணியை நம் மூலம் இங்கே தொடர்கிறார்.
© 2019 by Terry A. Modica


No comments: