Saturday, April 27, 2019

ஏப்ரல் 28 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஏப்ரல் 28 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 2ம் ஞாயிறு
Acts 5:12-16
Ps 118:1-4, 13-15, 22-24
Revelation 1:9-13, 17-19
John 20:19-31
யோவான் நற்செய்தி
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16-20; மாற் 16:14-18; லூக் 24:36-49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்
 என்றார்.

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி
தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா
 என்றார்.
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.

25மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்என்றார்.
26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
 என்று வாழ்த்தினார்.
27பின்னர் அவர் தோமாவிடம்
இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்
 என்றார்.
28தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!என்றார்.
29இயேசு அவரிடம்
நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்
 என்றார்.
முடிவுரை: நூலின் நோக்கம்
30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.

31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
(thanks to www.arulvakku.com)
இரக்கத்தின் ஆவியில் வாழ்வோம்
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், பரிசுத்த ஆவியின் விழாவிற்கு அடித்தளம் இடபடுகிறது. ஆவியின் முழுமையை கொடுக்கும் முன்பு, இயேசு அமைதியை அன்பளிப்பாக கொடுக்கிறார். அவரின் இதயத்திலிருந்து வரும் அன்பளிப்பு அது. இயற்கையை தாண்டிய தெய்வீக அன்பளிப்பு, நமது இருதயத்துக்குள் அது ஊடுருவி செல்கிறது. நாம் சோதனைகளையும் கஷ்டபடும்பொழுது அமைதியான கிறிஸ்துவின் பிரசன்னம் நம் இதியத்திற்குள் இருக்கிறது.
இயேசு அவரின் உயிர்த்தேழுந்த பின்பு, இரண்டுமுறை 12 சீடர்களுக்கும் அதே சந்திப்பில் இந்த அன்பளிப்பை கொடுத்தார். அதன் பிறகு கடவுளின் உயிரின் மூச்சை அந்த சீடர்களிடம் கொடுத்தார். மேலும் அவர்களை குருக்களாக ஆசிர்வதித்து, மற்றவர்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுத்தார். (இதுவும் அமைதியை கொடுக்கும் அன்பளிப்பாகும்)

அமைதியின் அன்பளிப்பு, இயேசு காலத்திலிருந்து அர்சிக்கப்பட்ட குருக்கள் மூலம் நாம் இன்னும் பாவசங்கிர்த்தனம் அருட்சாதனம் மூலம் பெறுகிறோம். மேலும், பரிசுத்த வாழ்வில் நாம் நிலைத்திருக்க கடவுளின் ஆவியை நமக்கு கொடுத்து கொண்டிருக்கிறார். கடவுளின் ஆவி, வாழ் நாள் முழுக்க நம்மை காத்து கொண்டுகிருக்கிறது. அந்த ஆவி தான், இந்த உலகை உருவாக்கியது. நாம் பரிசுத்த வாழ்வில் வாழ அது தான் துணை நிற்கிறது. கடவுளின் பரிசுத்தம் நம்மில் ஒளிர , பரிசுத்த ஆவி தான் துணை நிற்கிறது
எதுவெல்லாம் பரிசுத்தம் இல்லையோ - ஆவிக்குரியதாக இல்லையோ -- அதெல்லாம் அழிவிற்குரியது , , பாவங்கள் ஆகும். தெய்வீக இரக்கத்தின் வடிவான இயேசு, சிலுவையில் மரணம் எய்து, நமக்கு ஆவியை கொடுத்தார், அதன் மூலம் , கடவுளின் மன்னிப்பை பெற்று , நாம் வாழ வழி செய்தார்.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்று ஜெபிக்கும் பொழுதெல்லாம், மெதுவாக சொல்லுங்கள், மேலும், "நாம் மற்றவர்களின் பாவங்களை மன்னிப்பது போல, எங்களை மன்னியும்  " என்ற வாக்கியங்களுக்கு இன்னும் கூர்ந்து கவனியுங்கள், மேலும். உங்களை எரிச்சல் படுத்தியவர்களையும், தொடர்ந்து வேதனை தருபவர்களையும் நினைத்து பாருங்கள். முழு மனதோடு அவர்களை மன்னியும்.
மாறாக, நீங்கள் அவர்களை மன்னிக்காவிடில், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்கள் துன்பபடலாம், உங்கள் ஆன்மாவும் துன்ப படலாம், ஏனெனில், கடவுள் கொடுத்த மன்னிப்பை நீங்கள் நிராகரிக்கீறீர்கள்  அதனால், கடவுளும் உங்கள் பாவங்களை மன்னிக்க ஒரு வாய்ப்பை தடையாக இருக்கிறீர்கள்.
பாவங்களை ஏற்பதும்,அல்லது அதனை மறப்பதும், மன்னிப்பது இல்லை. நமக்கு எதிராக பாவம் செய்தவர்களை எதிர்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன நிலையை தூக்கி எறிவதே ஆகும்.  அதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள் மேல் நாம் அன்பு செலுத்துவது, அதன் முலம் கிறிஸ்துவின் அன்பளிப்பான அமைதியில் பங்கேற்பது ஆகும்.
© 2019 by Terry A. Modica


No comments: